ராணுவம், போலீஸ், சிறை அதிகாரிகள், அரச பயங்கரவாதம் Lion Raja Ganesan
சட்டம் யாருக்காக? ராணுவம்
காவல்துறை
எல்லாம்
யாருக்காக
அன்றைக்கு
மன்னர்களுக்காக
இன்றைக்கு
ஆளும்
பிரதமர்,
ஜனாதிபதி
போன்ற
உயர்
பதவியில்
இருப்பவர்களுக்காக,
– கடவுள், அரசர், அரசு : ஒரே அடக்குமுறை இயந்திரம்
மனிதன் குற்றம்–தண்டனை என்ற அமைப்பை உருவாக்கிய நாளிலிருந்தே, “சட்டம்” என்பது நீதிக்கான கருவி அல்ல; அதிகாரத்தை காக்கும் கம்பியாகவே இருந்திருக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான சட்டங்கள் ஏழையை ஒடுக்க, உழைப்பவனை மிரட்ட, சொத்துடையவரை காப்பாற்றவே
எழுதப்பட்டன. திருடனுக்கு தூக்கு; பாலியல் குற்றம் என்று பெயர் வைத்து உடலை நசுக்கும் தண்டனை.
சமூக சீர்திருத்தம் அல்ல – பயம்.
இந்த பயத்தை நிலைநாட்டிய முதன்மை ஆயுதம் கடவுள்.
சட்டமும் மதமும் பிரிக்கப்படாத காலத்தில், “தண்டனை கடவுளின் ஆணை” என்று மனித
மூளைக்குள் திணிக்கப்பட்டது. தலையை வெட்டும் கொலையாளி கடவுளின் பெயரைச் சொன்னான். அது பக்தி இல்லை;
கொலைக்கு சாமி சான்றிதழ்.
பெரியார் தெளிவாகச் சொன்னார்:
கடவுள் மனிதனை உருவாக்கவில்லை – மனிதன் தான் கடவுளை உருவாக்கினான்; தன்னை அடக்க.
அதே போல அரசர்களும் தங்களை
“கடவுளால் அனுப்பப்பட்டவர்கள்” என்று அறிவித்துக் கொண்டார்கள்.
இங்கிலாந்து, பிரான்ஸ் – எங்கும் அதே நாடகம்.
அரசருக்கு எதிராக பேசினால் கடவுளுக்கு எதிராகப் பேசுகிறாய்.
சட்டம்? அரசனின் விருப்பம்.
நீதி? அதிகாரியின் வசனம்.
சார்லஸ் முதலாம் அரசர் இதன் நேரடி உதாரணம்.
பாராளுமன்றம் இல்லாமல் 12 ஆண்டுகள் ஆட்சி.
“நானே அரசு; நானே சட்டம்” என்ற
அகந்தை.
ஜனநாயகம் கேட்ட மக்களை அடக்கினான்.
அவனை மக்கள் கைது செய்து தலையறுத்தார்கள்.
இதில் அநீதி எங்கே?
ஜனநாயகத்தை மறுப்பவன் தலை தப்பிக்க உரிமையில்லை.
ஆனால் இங்கிலாந்து இதிலிருந்து ஜனநாயகத்தை கற்றுக்கொள்ளவில்லை.
அது கற்றுக்கொண்டது சூழ்ச்சி.
பிரிட்டிஷ் பேரரசு உலகம் முழுக்க செய்தது ஆட்சி அல்ல – அரசு தீவிரவாதம்.
இந்தியாவில் மதத்தைப் பிளந்தது.
ஜாதியை நிரந்தரமாக்கியது.
“மேல் ஜாதி – கீழ் ஜாதி” என்ற
பட்டியலை அரசே எழுதி ஒட்டியது.
ஏன்?
உழைப்பவன் ஒன்றுபடக் கூடாது.
நிலத்தை பறிக்க சட்டம்.
உணவை பறிக்க வரி.
எதிர்த்தால் செடிஷன்.
சட்டம் என்ற பெயரில் கொள்ளை.
நீதிமன்றம் என்ற பெயரில் சுரண்டல்.
பஞ்சம் வந்தபோது கோடிக்கணக்கானவர்கள் செத்தார்கள்.
இது இயற்கை பேரழிவு அல்ல – அரசின் கொள்கை கொலை.
ஆனால் புத்தகங்களில் எழுதப்பட்டது: “பிரிட்டிஷ் நிர்வாகம்”.
உள்நாட்டில் ஜனநாயகம் பேசும் அதே இங்கிலாந்து,
இந்தியாவில் துப்பாக்கியால் ஆட்சி செய்தது.
அங்கே போராடியவன் “குற்றவாளி”.
இங்கே கொள்ளையடித்தவன் “அரசர்”.
இன்று இங்கிலாந்து வீழ்ச்சியடைவது துயரம் அல்ல.
அது வரலாற்று பழிவாங்கல்.
சுரண்டலில் கட்டப்பட்ட பேரரசு சிதையாமல் என்ன செய்யும்?
மறுபுறம், ஒருகாலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நாடுகளில்
உழைக்கும் மக்கள் மெதுவாக எழுந்து நிற்கிறார்கள்.
இது உதவி அல்ல.
இது உரிமை மீட்பு.
பெரியார் சொன்ன அடிப்படை உண்மை இதுதான்:
சட்டம் – சாமி – அரசு
மூன்றும் சேர்ந்தால் அது நீதி அல்ல;
அடக்குமுறை.
சட்டம் மக்களின் கையில் வரும் வரை,
கடவுள் அரசியலிலிருந்து விரட்டப்படும் வரை,
ஜாதி சட்டத்தின் ஆதாரமாக இருக்கும் வரை,
“நீதி” என்பது ஏமாற்றுச் சொல் தான்.
மனிதனுடைய சிந்தனை தான் செய்வது சட்டத்திற்கு
புறம்பானது அறமற்ற செயல் என்று தெரிந்தும் அதை செய்வதற்கான உண்மையான காரணம் அதனால்
தான் தண்டிக்கப்பட மாட்டோம் என்பதுதான் அவன் அனைத்து தவறுகளையும் பெண்களை கற்பழிப்பது
சித்தரவதை செய்து மனிதர்களை கொலை செய்வது எல்லாம் எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினருக்கும்
பொருந்தும் செயல் இது ரஷ்யாவில் அமெரிக்காவில் ஏன் இஸ்லாமிய நாடுகளிலும் சிறைகளில்
இதுதான் நடந்தது
அபு கிரைப் சிறை, ஈராக் (2003–2004) –
அமெரிக்கா தலைமையிலான படைகள்
ஈராக்
மீது
படையெடுத்த பிறகு,
அபு
கிரைப்
சிறை
கைதிகளை வைத்திருக்க பயன்படுத்தப்பட்டது. இதில்
பலர்
கிளர்ச்சியாளர்கள் என
சந்தேகிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் இருந்தனர்.
நிகழ்வு:
2003–2004 காலத்தில், சில
அமெரிக்க சிப்பாய்கள் கைதிகளை கடுமையாக துன்புறுத்தினர். அவர்கள் கைதிகளை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தினர், அடித்தனர், மின்சார அதிர்ச்சி கொடுத்தனர், நாய்களால் தாக்கச் செய்தனர், பாலியல் வன்முறை செய்தனர்.
வெளியான புகைப்படங்களில், நிர்வாண கைதிகளை மனிதக்
கோபுரம் போல
அடுக்கி நிறுத்தியது, மின்சாரம் கொடுத்தது, நாய்களால் பயமுறுத்தியது போன்றவை இருந்தன.
உண்மை விவரம்:
இந்த
கொடுமைகளில் முன்னணியில் இருந்ததாக ஸ்பெஷலிஸ்ட் சார்ல்ஸ் கிரேனர் தண்டிக்கப்பட்டார். சில
கைதிகள், “நிர்வாணமாக தரையில் ஊர்ந்து செல்ல
சொல்லி,
சிப்பாய்கள் எங்களை
கழுதை
போல
ஏறி
சவாரி
செய்தனர்” என்று
கூறினர்.
மனாதெல் அல்-ஜமாடி என்ற கைதி
விசாரணை நேரத்தில் உயிரிழந்தார். அவரது
உடல்
பனியில் மூடப்பட்ட நிலையில், அருகில் சிரித்துக் கொண்டிருந்த காவலர்களின் புகைப்படங்களும் வெளிவந்தன.
விளைவு:
பல
சிப்பாய்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இந்த
சம்பவம் “வார்ஆன் டெரர்”
காலத்தில் நடந்த
மனிதாபிமானமற்ற சித்திரவதைகளின் உலகளாவிய அடையாளமாக மாறியது.
சைத்னயா சிறை: மனிதாபிமானத்திற்கு எதிரான கொடுமையின் சின்னம்
2011 ஆம்
ஆண்டில் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அரசுக்கு எதிராக குரல் கொடுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில்
பெரும்பாலானோர் சைத்னயா
இராணுவ
சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டனர். இந்த சிறையை சர்வதேச
மன்னிப்புச் சபை (Amnesty International) ஒரு “மனித
படுகொலை
கூடம்”
என்று வர்ணித்துள்ளது.
சைத்னயா
சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள், எந்தவிதமான நீதிமன்ற விசாரணையும் இன்றி நீண்ட காலம் சிறையில் வைக்கப்படுகின்றனர். அமைதியாக போராட்டம் செய்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இதில்
அடங்குவர். இங்கு கைதிகள் மனிதர்களாகவே பார்க்கப்படுவதில்லை. அவர்கள் தினமும் கடுமையான சித்திரவதை, அவமானம் மற்றும் மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
உயிர்
பிழைத்தவர்கள் கூறும் தகவல்கள் மனதை உலுக்கும் வகையில்
உள்ளன. காவலர்கள் கைதிகளை நிர்வாணமாக்கி, ஒருவரையொருவர் பாலியல் வன்முறைக்கு கட்டாயப்படுத்தியதாக சிலர் சாட்சி அளித்துள்ளனர். இத்தகைய உத்தரவுகளை மறுத்தால், கொலை செய்வோம் என
மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது தனிப்பட்ட சம்பவம்
அல்ல; திட்டமிட்டு, முறையாக நடத்தப்படும் கொடுமையாகவே இது நடைபெறுகிறது.
இந்த
சிறையில் போதுமான உணவும் இல்லை. பல கைதிகள் பட்டினியால்
வாடுகின்றனர். மருத்துவ வசதிகள் கிடையாது. நோயாளிகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை மறுக்கப்படுகிறது. காவலர்களின் அடிதடி மற்றும் மன உளவியல் வன்முறை
தினசரி நிகழ்வாக உள்ளது.
இந்த
கொடூர அனுபவங்களால் உயிர் பிழைத்தவர்கள் பலர் உடல்நலம் குன்றியும்,
மன உளைச்சலுடனும் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முழுவதும் இந்த வன்முறையின் தாக்கம்
நீடிக்கிறது. இது ஒரு நாட்டின்
சிறைச்சாலையில் நடக்கும் சம்பவமாக மட்டுமல்ல; மனித
உரிமைகளுக்கு
எதிரான
மிகப்
பெரிய
குற்றமாக
பார்க்கப்பட வேண்டும்.
முடிவாக,
சைத்னயா சிறை மனிதாபிமானத்தின் தோல்வியை
வெளிப்படுத்தும் ஒரு இடமாக உள்ளது.
உலக நாடுகள் இத்தகைய கொடுமைகளை கவனிக்காமல் இருப்பது, இத்தகைய குற்றங்கள் தொடர வாய்ப்பளிக்கும். மனித
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நாகரிக சமூகத்தின் அடிப்படை கடமையாகும்.
“பிரெசோவ்ஷ்சிகி” சித்திரவதை சர்ச்சை (ரஷ்யா, 2021–2022)
என்ன நடந்தது?
ரஷ்யாவின் சரடோவ்
(Saratov) சிறையில் உள்ள
காசநோய் மருத்துவமனை (OTB-1) இலிருந்து வீடியோக்கள் வெளியானது. அந்த
வீடியோக்களில் கைதிகள் மீது
கடுமையான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை நடந்தது தெரிய
வந்தது.
இதனால்
பெரிய
சர்ச்சை ஏற்பட்டது.
யார் செய்தது?
“பிரெசோவ்ஷ்சிகி” எனப்படும் சில
கைதிகள், சிறை
அதிகாரிகளின் உத்தரவின்படி, மற்ற
கைதிகளை சித்திரவதை செய்தனர்.
ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவும், எதிர்ப்பு காட்டியவர்களை தண்டிக்கவும் இந்த
சித்திரவதை பயன்படுத்தப்பட்டது.
உண்மை சம்பவம்:
முன்னாள் கைதி
டெனிஸ்
போகுசாயேவ், தினமும் சித்திரவதை நடந்ததாக கூறினார்.
பல
மாதங்கள் தொடர்ந்து பொருட்களால் பாலியல் வன்முறை உட்பட
கொடூரமான தாக்குதல்கள் நடந்தன.
சிறை
ஊழியர்கள் இதை
பார்த்து சிரித்ததாகவும் அவர்
தெரிவித்தார்.
விளைவு:
மனித
உரிமை
அமைப்புகள் கூறுவதன்படி குறைந்தது 350 கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
விவகாரம் வெளியான பிறகு
ரஷ்ய
சிறைத்துறை விசாரணையை தொடங்கியது.
ஆனால்
சிறை
அமைப்பில் உள்ள
ஆழமான
ஊழலும்
வன்முறையும் இன்னும் பெரிய
பிரச்சினையாகவே உள்ளது.
____________
https://www.gktoday.in/iaf-personnel-beard-sc/
இந்தியாவில்
ராணுவம் தொடர்பான வழக்குகள் ரெண்டு வழக்கு மட்டும் உங்களுக்கு நான் சொல்லணும் ஒன்று
முகமது சுபர் அவரு ஆயுதப்படைகளுக்கு
உண்மையாக
இந்தியாவுக்காக வேலை செய்தார் ஆனால்
அவர் ராணுவத்தின் கட்டுப்பாடுப்படி நீங்க தாடி வைக்க கூடாது
அது அவர் எதிர்த்து வழக்கு
போட்டார் பஞ்சாப் சர்தார்ஜிகள் தாடி வைத்திருக்கிறார்கள் நான் ஏன்
வைக்க கூடாது அதை உயர் நீதிமன்றமும்
உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ன சொன்னாங்க சீக்கிய
மதத்தில் இது போன்ற கட்டமைப்புகள்
உருவாக்கப்பட்டிருக்கிறது
அவன் கத்தி கூட வச்சுக்கலாம் இஸ்லாம்
எங்கேயாவது இப்படி முகத்தில் தாடி வளர்க்கலாம் என்று
சொல்லி இருக்கிறதா நக்கல் ,,,,, தீர்ப்பு
சாமுவேல் கமலேசன் அவர் வழக்கு தான் இப்ப சமீபத்துல தீர்ப்பு வந்துச்சு ராணுவத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரி சொல்வதை கேட்பது மட்டும் தான் வேலை உன் மதம் இஸ்லாம் கிறிஸ்தவம் தேவையில்லை இந்தியாவில் ராணுவத்தில் அங்கு கோயிலில் பூஜை செய்யப்படும் நீ எவ்ளோ பெரிய அதிகாரியாக இருந்தாலும் அங்க போய் அவன் கூட
கலந்துக்கணும்
மாட்டேன்னு சொன்னதுனால அந்த ஆளுக்கு பென்ஷன் இல்லை பிஎப் இல்லை என்னமோ போங்கடா டேய்
https://www.thehindu.com/opinion/lead/the-kamalesan-case-and-its-simple-lesson/article70331102.ece
கம்யூனிஸ நாடான சீனாவில் தியாமின் சதுக்கத்தில் போராடிய மாணவர்களை சுட்டுக் கொன்றது இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசாங்கம்
ஜூன் 3, 1989 அன்று, போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் பெரிதாகி, வியத்தகு நிகழ்வுகளை வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் படமாக்கியதால், சீன இராணுவம் இயக்கத்தை நசுக்க இயக்கப்பட்டது. தியனன்மென் சதுக்கப் படுகொலை என்று அறியப்பட்டபோது, அறியப்படாத எண்ணிக்கையிலான சீன எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் (மதிப்பீடுகள் ஆயிரக்கணக்கானவை).
அமெரிக்காவில், போராட்டங்கள் பரவலான கவனத்தை ஈர்த்தன. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிச நாடுகளைப் போலவே சீனாவும் சுதந்திர சந்தை மற்றும் அரசியல் ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக பல அமெரிக்கர்கள் கருதினர். போராட்டங்களை அரசாங்கம் கொடூரமாக அடக்கியது அமெரிக்க பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்க அரசாங்கம் சீனாவிற்கான ஆயுத விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி, சில பொருளாதாரத் தடைகளை விதித்தது, ஆனால் அந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் அடையாளமாகவே இருந்தன. சீனாவில் வளர்ந்து வரும் அமெரிக்க வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் படுகொலைக்கு அமெரிக்காவின் கடுமையான எதிர்வினை இராஜதந்திர முறிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் ஆகியவை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பதிலை மட்டுப்படுத்தின.
https://www.youtube.com/watch?v=jxwiJZISg_A&t=276s
அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் எந்த வாய்க்கா தகராறும் இல்லை ஆனால் அங்கிருந்த பிரென்ச் ஆதிக்கத்தை முடிவு செய்ய அமெரிக்க ராணுவத்தை வியட்னாமுக்கு அனுப்புறாங்க அவர்கள் அங்க போயி அதிபர்கள் மாறிக்கிட்டே இருக்காங்க,
அவங்க ஒண்ணுமே செய்ய முடியல அதுக்கு என்ன காரணம் வியட்நாம்
மக்களிடம் உண்மை இருந்தது நேர்மை இருந்தது கடைசில ஒரு ராணுவ அதிகாரி கோவத்துல ஒரு ஊர்ல
போய் ஆண்கள் இல்லை பெண்கள் முதியவர்கள் இளம் பெண்கள் எல்லோரையும் கற்பழித்து
கொலை செய்து
அதை இன்னொரு
அதிகாரி பார்த்து விட்டான் அவன் அமெரிக்காவுக்கு ரிப்போர்ட் பண்ணி அவனுக்கு தண்டனை
வாங்கி கொடுத்துட்டான் ஆனால் இரு வேறு அதிகாரிகள் ஒருத்தனுக்கு ஏன் அந்த புத்தி வந்தது
இன்னொருத்தனுக்கு ஏன் இப்படி வந்தது இதுக்கு காரணம் உளவியல் தன் சொந்த ரத்தம் இருந்தால்
அந்த துப்பாக்கி சூடு நடத்த மாட்டான் இதை ஒரு ஆய்வில் நான் கண்டறிந்தேன்
https://www.youtube.com/watch?v=dumuajcqiUw
வியட்நாம் நாட்டுக்குள் ஒரு குற்றமும் செய்யாத பெண்கள் குழந்தைகளை கொன்றுளித்த ஒரு ராணுவ வீரருக்கு எதிராக இன்னொரு ராணுவ வீரர் புகார் அளிக்கிறார், அவருக்கு எதிராக அமெரிக்க ராணுவத்திலும் நாட்டிலும் இருக்கும் சில அரசியல்வாதிகள் கொந்தளிக்கிறார்கள் நடுவில் புகுந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தான் இந்த செய்திகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்தார் ஒருவழியாக குற்றவாளி தண்டிக்கப்பட்டார் அந்த தாம்சன் சொந்த வாழ்க்கையில் அவ்வளவு நேர்மையாக வியட்நாம் மக்களை பாதுகாத்தவர் சொந்த வாழ்க்கையில் மிகவும் மன உளைச்சலுக்கு உட்பட்டு மரணம் ஆகிவிட்டார்
எம் ஜி ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதல்வராகவும் அதே ஊரில் அதே பேரில் பிறந்த எம் ஜி இராமச்சந்திரன் சிறைத்துறை அதிகாரியாகவும் ஆக்கப்பட்டது தான் அரசியல் விஞ்ஞானம்
சிறைத் துறை அதிகாரி ராமச்சந்திரன் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் 60% உண்மையை பேசி இருக்கிறார் அவர் விட்ட இடத்தை நான் தொடர்கிறேன்
சிறைச்சாலையை கட்டமைத்த ஆங்கிலேயர் எத்தனை பேர் இருந்தார்கள் இந்தியாவிலிருந்து சாதி மற்றும் மதம் அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு அந்தமான் சிறைச்சாலையை யார் கட்டியது அங்கே சிறை வைக்கப்பட்டவர்கள் யார் வரலாற்றை பெரியார் கண் கொண்டு பார்க்க வேண்டும், அந்தமான் சிறையில் தலைமை அதிகாரி ஆப்கானிஸ்தான் இஸ்லாமியர் அதேபோல தமிழ்நாட்டில் சிறை அதிகாரி மலையாளி ராமச்சந்திரன்.
https://www.youtube.com/watch?v=5sJHxOG44r4
வாட்ட சாட்டமாக கோவை மத்திய சிறையை கடந்து போன இவரின் அப்பா கோபால நாயர் ஆங்கிலேயர் கண்ணில் பட்டு அவரை சிறை காவலராக நியமித்தார்கள் கடைசி வரை பதவி உயர்வு எதுவும் இல்லாமல் சிறையிலேயே ஆங்கிலேயர் ஆசைப்படி பல பேரை கொடுமைப்படுத்தி செத்துப் போனார்,
இவரு ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில் ஒரு பெண்ணை பற்றி சிவப்பான அழகான பெண் பொய்ச்சொல்ல மாட்டாள்? படிச்சவ அறிவாளி எதையும் சாப்பிட மாட்டேங்குற அவளுக்காக போய் மினரல் வாட்டர் அப்போது சென்னையில் ஒரே இடத்தில் தான் கிடைக்கும் அதுக்கெல்லாம் சட்டத்தில் அனுமதி இல்லை , இவர் கொஞ்சம் ஜாக்கிரதை யாரை காக்காய் பிடித்து யாருக்கு ஜால்ரா அடித்து சிறையில் இருக்கும் அத்தனை பதவிகளையும் அனுபவித்து வந்திருக்கிறார் அதிலும் இந்த பெண் குறித்து பேசும்போது அவருக்கு இயல்பிலேயே இருக்கும் வாழ்ந்தாருக்கு மாரடிக்கும் எண்ணம் தெளிவாகத் தெரிகிறது அந்தப் பெண் தவறு ஏதும் செய்யவில்லை என்று எப்படி சொல்கிறார் முழுக்க தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தை எப்படி தள்ளி விட்டாள் இறந்து போகும் என்னமோ போடா ராமச்சந்திரா,
https://www.youtube.com/watch?v=K2HuibjaQoI
மதுரை கலெக்டராக சம்பத் இருந்தார் அப்போது மதுரை சிறையில் தமிழகத்தில் இருந்த மத்த சிறையில் இல்லாத சிறப்பு சலுகை நேரடியாக முகம் பார்த்து கைகுலுக்கி சிறைவாசிகளை சந்திக்க வருபவர்கள் இயல்பாக இருக்கும் நிலைமையை மாற்றும் படி ஒரு சிறப்பு கண்ணாடி போடப்பட்டது, அதை எதிர்த்து போராட்டம் நடந்தது அதை அடக்குவதற்கு துப்பாக்கி பிரயோகம் செய்யலாம் என்று அனுமதி கொடுத்தவர் மதுரை கலெக்டராக சம்பத் ,என்ன நடந்ததுன்னா சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் இவர் மூன்றாவது குற்றவாளி அவரே சிறைச்சாலைக்கு வந்தார்.
கே எ கிருஷ்ணசாமி இவரு நல்ல மனுஷன் தான் அவரு கைதாகி சிறைச்சாலைக்கு போன போது அன்றைக்கு இருந்த சிறைச்சாலையை அதிகாரிகள் அவரை மரியாதை குறைவாக நடத்தினார்கள்* ஆனால் அவருக்கு அங்கிருந்த ஒரு கன்வெர்ட் வாடன் வேற ஒன்னும் இல்ல கும்மகி யானை , சிறையில் 7 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகளை பழக்கி சிறைச்சாலை அவர்களை அவர்களுக்கானவர்களாக மாற்றும் அப்படி மாற்றப்பட்ட மனிதன் சமையல் டிபார்ட்மெண்ட் பெரிய அண்டா அதை தூக்கிட்டு வந்து வைக்கிறதுக்கு உடல் பலமும் வேண்டும் மன பலமும் வேண்டும் அப்படி ஒருத்தர் அவரு இந்த கே.ஏ கிருஷ்ணசாமி பாத்துட்டு அவருக்காக பொது கிச்சன்ல போய் சாம்பார் காய் தட்டோட கொண்டு வந்து அவரை கவனிச்சார்,
காலம் மாறுது மீண்டும் அதிமுக ஆட்சி கே.ஏ கிருஷ்ணசாமி சட்டத்துறை அமைச்சர் ஜெயில் நிர்வாகம் அவருக்கு கீழே அவர் வருகிறார் இதே ஜெயிலுக்கு ஆனா அவரு ஜெயிலர் இருக்கையில் அமர்ந்து கொண்டு காளிதாஸ் எங்கே என்றார் அவருடைய இயற்பெயர் காளிதாஸ் என்று ஜெயிலில் யாருக்கும் தெரியாது எல்லோரும் காலி காலி என்றுதான் அழைக்கிறார்கள் அங்கு வந்த அந்த காளிதாசை அனைவரு முன்னிலையிலும் கட்டித் தழுவினார் இதுவும் வரலாறு உன் விடுதலைக்காக நான் வெளியே போய் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போனார் கே ஏ கிருஷ்ணசாமி
https://www.youtube.com/watch?v=K2HuibjaQoI
மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் மனித வளர்ச்சியில் ஏற்றப்படும் சட்டங்கள் அதை மீறும் அதிகாரத்தோடு தான் இருக்க வேண்டும், அதுபோலவே சிறைச்சாலை கட்டமைப்பு மிகத் தெளிவாக அதற்காக ரூல்ஸ் பிரேம் பண்ணியது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான்
டெல்லி திகார் திரை ஆசியாவில் பெரியது பாதுகாப்பு நிறைந்தது அங்கிருந்து சோப்ராஜ் தப்பித்தது இன்றும் பேசப்படுகிறது அவரை கோவாவில் கைது செய்தார்கள் அவன் ஏன் உலக அளவில் பேசப்படுகிறான் இந்திய தந்தைக்கும் வியட்நாம் தாய்க்கும் பிறந்த மகன் இளம் வயதில் அமெரிக்க ராணுவம் வியட்நாமில் செய்த அநியாயங்களை அவர்கள் நடத்திய கேளிக்கைகள் எல்லாம் பார்த்து தானும் இப்படி வாழ வேண்டும் என்று விரும்பி பிகினி டிரஸ் போட்டிருந்த அழகான பெண்களைத்தான் முதலில் கொலை செய்தான் 70 வயதில் 20 வயதுப் பெண் அதுவும் இவருடைய வழக்கறிஞரின் மகள் விரும்பி திருமணம் செய்து கொண்டால் என்றால் இயல்பிலேயே ஹீரோக்களை விரும்பும் ஹார்மோன்கள் பெண்களிடம் இருப்பதும் இதற்கு காரணம்
மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த போலீஸ் சட்டம் எல்லாம் பெரும்பாலும் அவர்கள் ஆள்பவர்களுக்கு ஆதரவாளர்கள்தான்
அது சுயநலமான சில பேர் மட்டுமல்ல அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே
அரசாங்கமாக கட்டமைக்கப்பட்ட பிறகு போலீஸ் ஆத்துமீறல் 40 ஆண்டுகளாக தமிழக அரசியலில் வாசித்தும் நேசித்தும் கொண்டிருப்பவன் அதனால தான் இந்த பதிவு
தமிழ்நாட்டில் நிறைய என்கவுண்டர்கள் செய்து புகழ் பெற்றவர் தான் வெள்ளத்துரை அவரின் போலீஸ் வாழ்க்கையின் கடைசி நாள் மரியாதையாக இருக்கக் கூடாது என்பதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், இது ஒரு வகையில் நல்ல நடைமுறைதான் அதற்கு உத்தரவிட்டது முதல்வர் ஸ்டாலின் ஐஏஎஸ் அமுதா இருவருக்கும் வாழ்த்துக்கள்
ஜெயலலிதா எம்ஜிஆர் இருவரும் தான் போலீசாரையும் ரவுடிகளையும் சரியாக பயன்படுத்தினார்கள், ஜெயலலிதா திமுக ஊர்வலத்தை கலைப்பதற்காக வீரமணி குழுக்களுக்கு பணம் கொடுத்து நடத்தி இந்தியாவே அசந்து போன அளவுக்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்த செய்தவர் இந்த வீரமணியின் கும்பல்தான் பின்னாலில் அவரையும் சுட்டுக் கொள்ள உத்தரவு போட்டார் ஜெயலலிதா அதற்கும் காரணம் இருக்கிறது இந்த வீரமணி ஆள் கடத்தல் செய்வார் அப்படி ஒரு வட இந்திய பெண்ணை நடுக்கடலில் வைத்துக் கொண்டு பேரம் பேசி பணத்தை வாங்கிக் கொண்டார் ஆனால் அந்த பெண் மாணபங்கம் செய்யப்பட்டிருந்தார் அதனால் அந்த வைர வியாபாரி டெல்லியில் தன் தொடர்புகள் மூலம் புகார் அளித்து வேறு வழி இல்லாமல்,
ஏற்கனவே இவர்களுக்கு சசிகலா மூலம் ஒரு கம்ப்ளைன்ட் வந்திருந்தது நடிகர் கார்த்திக்கை கடத்தி வைத்து மிரட்டி அனுப்பினார் என்று இரண்டுக்கும் சேர்த்து வீரமணி
கட்டற்ற அதிகாரம் எதுவும் இல்லை சட்டம் நம் கையில் இருக்கிறது நம்மை பாதுகாக்கும் என்ற ஒரு நம்பிக்கை காவல் நிலைய இறப்புகள் அப்பா மகன் இரண்டு பேரையும் ஆசனவாயில் லத்தியை சொருகி சித்திரவதை செய்ய காரணம் அவர்களை பயமுறுத்த வேண்டும் என்றுதான் ஆனால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள் அந்த நான்கு போலீஸ்
அமெரிக்காவில் ஒரு கருப்பின மனிதரை துன்புறுத்தியதற்காக நாடே கொந்தளித்தது பொதுவெளியில் அந்த போலீஸ் மன்னிப்பு கேட்டார்,
அல் - உம்மா இயக்கத்தினர் என்கவுன்டர் (2002 செப்டம்பர்)
கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அல் - உம்மா இயக்கத்தைச் சேர்ந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறையினரால் பெங்களூரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து 2002ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி காவல்துறையினரின் பிடியிலிருந்து இவர்கள் தப்பிச் சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், செப்டம்பர் 29ஆம் தேதி அவர்கள் பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 32 வயதான இமாம் அலி மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர். இவருடன் சேர்ந்து தப்பித்த ஹைதர் அலி பிடிபட்ட நிலையில், இமாம் அலி தேடப்பட்டுவந்தார்.
பெங்களூரில் உள்ள சஞ்சய் நகரில் உள்ள ஒரு வீட்டில் இமாம் அலியும் அவரது கூட்டாளிகளும் தங்கியிருக்கும் தகவல் அறிந்து அங்கு சென்ற கோயம்புத்தூர் டி.ஐ.ஜி., மதுரை காவல்துறையின் துணை ஆணையர் ஆகியோர் இமாம் அலியையும் அவருடைய கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். சரணடையச் சொன்னபோது, அவர்கள் மறுக்கவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இமாம் அலி, முகமது இப்ராஹிம், சைபுல்லா, சைபுல்லாவின் மனைவி, மங்கா பஷீர் ஆகிய ஐந்து பேர் இதில் கொல்லப்பட்டனர்.
2. வெங்கடேச பண்ணையார் என்கவுன்டர் (2003 செப்டம்பர்)
தூத்துக்குடி மாவட்டத்தில் செல்வாக்குமிக்கவராக இருந்த வெங்கடேச பண்ணையார் என்பவர் சென்னையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை நுங்கம்பாக்கம் ஏரிக்கரைச் சாலையில் உள்ள ஓர் அபார்ட்மென்டில் இந்த என்கவுன்டர் நடந்தது.
ஆனால், வீட்டின் கதவைத் திறந்தவுடனேயே காவல்துறை வெங்கடேச பண்ணையாரைச் சுட்டதாக அவர் தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவருடைய மனைவி ராதிகா செல்வி தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு, உள்துறை இணை அமைச்சராகவும் பதவிவகித்தார்.
3. சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்டர் (2004 அக்டோபர்)
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடைப்பட்ட வனப் பகுதியில் சந்தன மரங்கள், யானைத் தந்தம் ஆகியவற்றைக் கடத்துவதில் ஈடுபட்ட வீரப்பன், ஒரு கட்டத்தில் காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோரையும் கொல்ல ஆரம்பித்தார். இவரைத் தேடுவதற்காக இரு மாநில காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது, அந்தப் பகுதியில் வசித்த பழங்குடியினர் பலரும் காவல்துறையின் துன்புறுத்தலுக்கு உள்ளாயினர்.
இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆம்புலன்சில் பயணம் செய்துகொண்டிருந்த வீரப்பன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அவருடன் அவருடைய கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வீரப்பனைத் தேடுவதற்காக விஜயகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட அதிரடிப் படை இந்த என்கவுன்டரைச் செய்தது. இந்த அதிரடிப் படையைச் சேர்ந்த அனைவருக்கும் பரிசுகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது 12 வயது முதல் 60 வயது வரை ஆன பெண்களின் வன்புணர்வு செய்த மார்பகங்களில் சூடு வைத்த போலீசார் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் ஜனநாயகம் தமிழகத்தில் இன்னமும் முழுதாக வரவில்லை,
4. கோயம்புத்தூர் சிறார் கொலை வழக்கு (2010 நவம்பர்)
கோயம்புத்தூரில் வசித்து வந்த ரஞ்சித் - சங்கீதா தம்பதியின் குழந்தைகள் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று கடத்தப்பட்டனர். குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிச் செல்ல வேனுக்காகக் காத்திருந்தபோது, அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான மோகன்ராஜ் என்ற மோகன கிருஷ்ணன் ஒரு வேனை எடுத்துவந்து அவர்களைக் கடத்தினார். அதற்குப் பிறகு, மோகன்ராஜுடன் அவருடைய நண்பர் மனோகரன் என்பவர் இணைந்துகொண்டார்.
குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்க நினைத்தவர்கள் பிறகு, அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பிஏபி கால்வாயில் மூழ்கடித்துக் கொலை செய்தனர். இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
நவம்பர் 8ஆம் தேதியன்று இருவரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். நவம்பர் 9ஆம் தேதி அதிகாலை ஐந்தரை மணிக்கு எங்கு குற்றங்கள் நடைபெற்றனவோ அந்த இடத்தைக் காண்பிப்பதற்காக குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படிச் சென்று கொண்டிருக்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்ட மோகன்ராஜ் காவலர்களைத் தாக்கி, தப்பிக்க முயன்றதாகவும் இதையடுத்து காவலர்கள் திருப்பிச் சுட்டதில் மோகன்ராஜ் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டபோது, காவலர்களைப் பாராட்டி கோவையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன.
5. சென்னை வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் (2012 பிப்ரவரி)
2012ஆம் ஆண்டில் சென்னையில் இரண்டு மிகப் பெரிய வங்கிக் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. ஜனவரி 23ஆம் தேதி ஆயுதம் தாங்கிய நான்கு பேர் பெருங்குடியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைக்குள் நுழைந்து 19 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றனர்.
அதேபோல பிப்ரவரி 20ஆம் தேதி இதேபோல ஆயுதம் தாங்கிய நான்கு பேர் கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கிக்குள் நுழைந்து 14 லட்ச ரூபாயைத் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவங்கள் சென்னை நகரை உலுக்கிய நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதியன்று அதிகாலை ஒரு மணியளவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர், அந்த வீட்டிலிருந்த ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றனர்.
அந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேறச் சொன்னபோது அவர்கள் வெளியேற மறுத்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால், தாங்கள் திருப்பிச் சுட்டதாகக் காவல்துறை கூறியது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 30-35 வயதுக்குட்பட்டவர்கள். வினோத் குமார், சந்திரிகா ராய், வினய் பிரசாத், அபய் குமார், ஹரீஷ் குமார் ஆகிய ஐந்து பேரில் நான்கு பேர் பிஹாரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.
இவர்களிடமிருந்து 14 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. தற்காப்பிற்காகச் சுட்டதாக காவல்துறை சொன்னாலும், அந்தத் தருணத்தில் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
6. காவலரைக் கொலைசெய்ததாக இரண்டு பேர் என்கவுன்டர் (2012 டிசம்பர்)
2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருதுபாண்டியர் குரு பூஜை தினத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ஆல்வின் சுதர் என்பவர் பிரபு என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் இரண்டு காவல்துறையினரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. இந்த கொலை தொடர்பாக பிரபு உள்ளிட்டவர்கள் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பிரபு, பாரதி ஆகியோர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்த நிலையில் ஒரு வழக்கின் விசாரணைக்காக மதுரை சிறையில் இருந்து சிவகங்கை செசன்ஸ் நீதிமன்றத்திற்கு இவர்கள் இருவரையும் காவல்துறையினர் அழைத்து வந்தனர். மதுரை அண்ணா நகர் அருகே வரும்போது பிரபு, பாரதி ஆகிய இருவரும் காவலர்களைத் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் மானாமதுரை தீர்த்தான்பேட்டை அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரபுவும், பாரதியும் இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும் அவர்களை காவல்துறையினர் நிறுத்தியபோது பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளைக் கொண்டும் தாக்க முயன்றதாகக் கூறிய காவல்துறையினர், தற்காப்பிற்காகத் திருப்பிச் சுட்டதாகக் கூறியது.
இந்த என்கவுன்டர் சம்பவங்கள் தவிர, தனித்தனியாக ரவுடிகள், சமூக விரோதிகள் என்ற பெயரில் பலர் கடந்த சில ஆண்டுகளில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளில் 125 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை! யாருடைய ஆட்சியில் எவ்வளவு நடந்தது?
தமிழ்நாட்டில் கடந்த 26 ஆண்டுகளில் மொத்தம் 125 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். எந்தெந்த கால கட்டங்களில் என்கவுன்டர்கள் நிகழ்ந்தன என்பதையும், குற்றவாளிகளை கையாளும் வழிமுறைகள் என்ன என்பதையும் காண்போம்.
தமிழ்நாட்டில் 1998ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி காலத்தில் 69 என்கவுன்டர்களும் அதிமுக ஆட்சி காலத்தில் 56 என்கவுன்ட்டர்களும் நிகழ்ந்துள்ளன.
1998 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் 22 என்கவுண்டர்களும், 2001-ல் இருந்து 2006 வரை அதிமுக ஆட்சியில் 29 என்கவுன்டர்களும் நிகழ்ந்துள்ளன. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் 31 என்கவுன்டர்களும், 2011-ல் இருந்து 2021 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 27 என்கவுன்டர்களும் நிகழ்ந்துள்ளன. தற்போதைய திமுக ஆட்சியில் கடந்த 2021 மே மாதம் முதல் தற்போது வரை 16 என்கவுன்டர்கள் நடை பெற்றிருப்பதாக மக்கள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
குற்றப் பின்னணி என்கவுன்டருக்கு இடையே, அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 7 பேரும், 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேரும் கொல்லப்பட்டனர்.
காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் மீது பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், குற்றம்சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்படும் வரை டிஎஸ்பி காவல் நிலையத்தில் வைக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களும் தமிழ்நாடு காவல்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
1980-களில் நடந்த என்கவுன்டர் தொடங்கி, அண்மையில் சென்னையில் நடந்த என்கவுன்டர்வரை, பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், பெரும்பாலும் போலீஸார் தரப்பில் சொல்லப்படுவது, 'குற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் குற்றவாளி நடத்திய தாக்குதலில் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினோம்' என்பதாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் நடந்த என்கவுன்டர்கள் ஒரு பார்வை
தமிழகத்தில் என்கவுன்டர் என்பது 1970-களின் இறுதியில்தான் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் அதிகமாக ஊடுருவியிருந்த நக்சலைட்களை ஒழிப்பதற்காக, போலீஸ் உயர் அதிகாரியான தேவாரம், தீவிர நடவடிக்கையை மேற்கொண்டார். அந்தத் துப்பாக்கிகள் பிற்காலத்தில் அப்படியே ரவுடிகளின் பக்கம் திரும்பியது. நாளுக்குநாள் அதிகரித்துவந்த ரவுடியிசத்தை ஒழிக்க, என்கவுன்டர்கள் நடத்தப்படுகின்றன.
கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் புரிந்த சீவலப்பேரி பாண்டி, 1984-ம் ஆண்டு போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின் 1996-ம் ஆண்டு ஜூலை 10-பத்தாம் தேதி , லயோலா கல்லூரி அருகே நடுரோட்டில் நடந்த மோதலில் பிரபல ரவுடி ஆசைத்தம்பி, அவரின் கூட்டாளிகளான குணா, மனோ ஆகியோர் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகினர். அதே ஆண்டு 'ஜிம் பாடி' கபிலன் என்கிற தாதா அடையாறு அருகே நடந்த மோதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருந்த எம்ஜிஆர் செய்த என்கவுண்டர்கள் ஆர் எஸ் எஸ் உதவியோடு அதன்பிறகு ஜெயலலிதா கூட இருந்த சசிகலாவுக்கு எதிராக பணப்பிரச்சினை ரியல் எஸ்டேட் அவங்களையும் சுட்டு கொன்னாங்க போலீஸ் உதவியோடு கலைஞர் எதுவும் பண்ணலையா அப்படி இல்லை அவரும் பண்ணிருக்காரு வேற வழியில்லாமல் கோர்ட்டு கேஸ் சட்டப்படி செய்ய முடியாத சில விடயங்களை இந்த மாதிரி ரவுடிகளை வைத்து தான் செய்ய முடியும்
2007- ஆண்டு ஆகஸ்டு 1, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உட்படப் பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த வெள்ளை ரவி மற்றும் அவரின் கூட்டாளி குணா, ஓசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். 2008-ம் ஆண்டு ஜூலை 11, கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற 28 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பாபா சுரேஷ், காசிமேடு பகுதியில் போலீஸாரால் கொல்லப்பட்டார்.
2012-ம் ஆண்டு சிவகங்கை காவலர் சால்பின் சுதனைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான பிரபு, பாரதி இருவரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2012-ம் ஆண்டு பிப்ரவரி, பல்வேறு வங்கிக் கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட, பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை, சென்னை வேளச்சேரியில் போலீஸார் என்கவுன்டரில் கொன்றனர். 2018-ம் ஆண்டு மார்ச் 1, மதுரையைச் சேர்ந்த ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தி ஆகியோர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே ஆண்டு, ஜூலை மாதம் ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன், தரமணியில் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
2019-ம் ஆண்டு மே 2, சேலம் காரிப்பட்டி பகுதியில் கதிர்வேல் என்ற ரவுடி போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதேபோல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் நாள், சென்னை மாதவரம் பகுதியில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது கொலை, கொள்ளை போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
செப்டம்பர் 24-ம் தேதி, விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் கொரட்டூரில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் மீது எட்டு கொலை வழக்கு உட்படக் கொள்ளை, ஆள்கடத்தல் என பல்வேறு பிரிவுகளில் 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2018-ம் ஆண்டு பிணையில் வெளிவந்தவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
'நாங்கள் திருந்த விரும்புகிறோம்' என்று சொன்ன ரவுடிகள் மற்றும் தாதாக்கள் சிலரும், சரணடைந்த ரவுடிகள் சிலரும் எப்படி என்கவுன்டரில் இறந்தார்கள் என்பது இன்றும், தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.
'என்கவுன்டரில் சுட்டுக்கொலை' என்னும் செய்திகள் தொடர்கதையாகிக்கொண்டுதான் இருக்கின்றன. மனித உரிமைகள் அமைப்புகளும், இதுபோன்ற என்கவுன்டர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்தபோதிலும், அத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. என்கவுன்டர் என்பது ஒரு பிரச்னைக்குத் தீர்வாக காவல்துறை நினைக்கக் கூடாது. திரைப்படங்களிலும் என்கவுன்டரை ‘ரொமாண்டிசைஸ்’ செய்யும் காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நீதி என்ற அமைப்பின்மீதான நம்பிக்கை வலுவிழந்து போகும் வாய்ப்புகள் உண்டு.
# மாணவர்கள் மீதே காவல்துறை வன்முறையை பிரயோகப்படுத்தி பல கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்தியது எம்.ஜி.ஆர் ஆட்சி!
# விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் அனேகம்! அதில் ஒருமுறை 14 பேரும்,மற்றொரு முறை ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
# சென்னை மெரினாவில் மீனவர்கள் மீது நிகழ்த்தபட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
# வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய ஏழை, எளிய இளைஞர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரைக்குத்தி, குருவி சுடுவதைப் போல சுட்டுதள்ளியதில் சுமார் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்!
# இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய வன்னியர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் 21 வன்னியர்கள் படுகொலைக்கு ஆளாயினர்!
# போராடும் தொழிலாளர்கள் மீது ஆயிரக்கணக்கான பொய் வழக்குகள், கைதுகள், சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன!
# சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளின் மரணம் அதிகரித்தது!
# போராடுபவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் அடிக்கடி சொன்ன புகழ் பெற்ற வாசகம் ’’பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்’’ என்பதாகும். அப்படிச் சொன்னால், போலீஸ் அல்லாத அடியாட்களின் தாக்குதலை போராட்டக் காரர்கள் சந்திக்க வேண்டும் என்பது அனுபவங்கள் தந்த பாடமாகும்!
# அதிமுகவினர் பாதுகாப்பிற்கு கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆர் பேசி, முதலமைச்சர் இப்படி சொல்லலாமா..? என்ற பெரிய சர்ச்சை எழுந்ததும் பின்வாங்கிவிட்டார்!
# திருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை கொலையில் பால்கமிஷன் ரிப்போர்ட்டையே மறைத்து அரசு ரெக்கார்டுகளிலேயே பொய் எழுதிய ஆட்சி எம்.ஜி.ஆருடையது தான்! (திருச்செந்தூர் கோவில் வைரவேல் திருடப்பட்ட சம்பவத்தை மறைக்க நடந்த கொலை) (இதற்கு கலைஞர் நீதிகேட்டு நெடும்பயணப் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே).
# சாராய சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் கட்டமைத்து, அதில் கட்சிக்காரர்கள் கல்லா கட்டும் கலையை கற்றுத்தந்தார்! எம்.ஜி.ஆரின் எரிசாராய ஊழலுக்கு ரே கமிஷனே சாட்சி!
# மதுபான உற்பத்தியாளர்களுக்கு கலால் வரியிலிருந்து விலக்களித்த ஒரே ஆட்சியாளர் இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர் தான்!
# பால்டிகா கப்பல் நிலக்கரி பேர ஊழல் தொடங்கி ராபின்மெயின் மர்மங்கள் வரை எம்ஜி.ஆர் ஆட்சி ஊழல்களுக்கு பேர்போன ஆட்சி தான்!
# தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளை அலட்சியப்படுத்தி, தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி, கல்வி வணிகமய சுரண்டல் வடிவம் கண்டதும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான்!
# பனை வளத்தில் தன்னிகரற்று செழித்தோங்கிய தமிழகத்தில் பனை ஏறுவதை குற்றச்செயலாக சட்டமாக்கி, பனையேறிகள் 12 லட்சம்பேரின் வாழ்வாதரத்தையும், பனைவளத்தையும் முற்றாக சிதைத்தார்- சாராய ஆலைகளின் நலனுக்காக!
# அதிரடி சட்டத்தின் மூலமாக பாரம்பரியமுறையில் செயல்பட்டு வந்த கிராம அதிகாரிகளை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து, கிராம நீர்நிலைகள், பொதுப் பயன்பாட்டு நிலங்களை ரியல் எஸ்டேட் காரர்கள் ஆக்கிரமிக்க காரணமானவர்!
# உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் சிதையக் காரணமானவர்.
# இன்று மோடியிடம் எடப்பாடியும்,பன்னீரும் பணிவதைவிட அதிகமாக இந்திராகாந்தியிடம் பணிந்து, சோரம் போகும் அடிமைத்தனத்தை அரசியலில் அறிமுகப்படுத்தியவர்.
# எதிலும் சந்தேகம், குழப்பம், மர்மம், ஜனநாயகத்தை நிர்மூல மாக்கிடும் தனிமனித சர்வாதிகாரம் ஆகியவற்றின் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏகப்பட்ட இலவச திட்டங்களின் மூலமும், ஜால்ரா பத்திரிகையாளர்கள் வழியாகவும் தனக்கான போலிபிம்பத்தை சிறப்பாக உருவாக்கி தன்னை நிலை நாட்டிக் கொண்டவர்!
# ’ஏழைகளின் நாயகன்’ என்ற பிம்பம் தந்த பாதுகாப்பில் அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும் மாபியாக்களின் ஆதிக்கம் தோன்ற வழி வகுத்தவர் எம்.ஜி.ஆர்! எதிர்கட்சியினரையும் கூட அவ்வப்போது தனது ஊழலில் பங்குதாரர்களாக்கி, பக்குவமாக பல ஊழல்கள் வெளியேவராமல் தடுத்த தந்திரசாலி!
இப்படிப்பட்ட ஆட்சி இன்றைய தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ந்த டிஜிட்டல்யுகத்தில் துளியும் சாத்தியமேயில்லை என்பதை உணராமல் ரஜினி, கமல், பாஜகபிரமுகர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சி தருவதாக சொல்லி வருகின்றனர்!
எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக ஜானகி, ஜெயலலிதா, ஒ.பிஎஸ், இ.பி.எஸ் ஆட்சிகளை நாம் அனுபவித்து நொந்தது போதாது என்று ஆளாளுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவோம் என்றால்,அதற்கு தமிழக மக்கள் ஏமாளிகளல்லர் என உணர்த்த வேண்டும்!
தமிழகத்தில் 1979இல் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் பெயர்
1980 நக்சலைட் பாலன் சுட்டுக் கொல்லப்பட்டார்
1990களில் திண்டுக்கல் அருகே நாகராசன் என்கிற நக்கலைட் சுட்டுக் கொல்லப்பட்டார் அதேபோல ஊத்தங்கரை மற்றும் கொடைக்கானலில் நடந்த மோதல்களில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் சென்னையில் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசைத்தம்பி மனோ ஆகிய ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் இதைப்போலவே 1999 ஆம் ஆண்டு ரவுடி கபிலன் சுட்டுக் கொல்லப்பட்டான்
தமிழ்நாட்டுல என்கவுண்டர் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது எம்ஜிஆர் அதை கெட்டியா புடிச்சுக்கிட்டது ஜெயலலிதா அதற்கு எம்ஜிஆர் காலத்தில் உதவி செய்தது அயோக்கிய போலீஸ் ஆபீஸர் ஜெயலலிதா களத்திலும் செக்யூரிட்டி வேலை பார்த்தான் இன்னும் உயிரோட இருக்கான் அவனுக்கு ஒரு நாளைக்கு 12 போலீஸ்காரங்க உயிருக்கு பாதுகாப்பு
ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டுகள்: வரலாறு, அரசியல் மற்றும் நெறி முரண்பாடுகள்
மிகப்பெரிய
அரச பயங்கரவாதம் எல்லாம் வியாபார நோக்கத்திற்காக தான் நடக்கிறது அமெரிக்காவுக்கு வியாபாரப்
போட்டி தான் ஜப்பான் கருத்தியல் எதிரி என்றால் அது ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட்
நாடு அதைவிட முக்கியம் வியாபாரம் தான்
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், முதலாம் உலகப் போர் மற்றும் அதனைத்
தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் வாயிலாக அமெரிக்கா தனது இராணுவ–தொழில்துறை
சக்தியை பெரிதும் வளர்த்துக் கொண்டது. ஆயுத உற்பத்தி அமெரிக்கப்
போர்கால பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளமாக மாறியது.
ஆசிய–பசிபிக் பகுதியில் வளங்களுக்கான போட்டி, பொருளாதார தடைகள் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக உருவான பதற்றத்தின் உச்சமாக, 1941 டிசம்பர் 7 அன்று ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தைத் தாக்கியது. இதன் விளைவாக அமெரிக்கா
இரண்டாம் உலகப் போரில் நேரடியாக ஈடுபட்டது. ஆனால், அதற்கு முன்னரே 1942 ஆம் ஆண்டு அமெரிக்கா
மான்ஹாட்டன் திட்டம் (Manhattan Project)
என்ற ரகசிய அணுகுண்டு ஆய்வு திட்டத்தைத் தொடங்கியது. இந்த அணுகுண்டுகள் ஒரு
மாதத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல; அவற்றை உருவாக்க மூன்று ஆண்டுகளுக்கு அருகான காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
1945 ஆகஸ்டில் ஜப்பான்மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன:
·
“லிட்டில் பாய் (Little Boy)” எனப் பெயரிடப்பட்ட, சுமார்
15 கிலோடன்
வெடிசக்தி கொண்ட யுரேனியம் அணுகுண்டு, 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்டது.
·
“ஃபாட் மேன் (Fat Man)” என அழைக்கப்பட்ட, சுமார்
21 கிலோடன்
வெடிசக்தி கொண்ட புளூட்டோனியம் அணுகுண்டு, 1945 ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது வீசப்பட்டது.
ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய
விமானம் எனோலா கே (Enola Gay) என்ற B-29 விமானமாகும். அதனை இயக்கியவர் கர்னல் பால் டிபெட்ஸ் (Paul Tibbets Jr.). (கோகுரா விமானத்தின் இலக்கு அல்ல; அது நாகசாகி குண்டு
வீசுவதற்கான முதன்மை இலக்காக இருந்தது. வானிலை காரணமாக நாகசாகி மாற்று இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.)
1945 ஆம் ஆண்டுக்குள் நேரடியாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்புகளாலும் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். அடுத்த பல ஆண்டுகளில் கதிர்வீச்சு
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்த்தால், பல இலட்சம் மக்கள் இந்த அணுகுண்டுகளின் விளைவுகளை
அனுபவித்தனர்.
இந்தப் பெரும் அழிவை நிகழ்த்தியவர்களில் ஒருவர், ஹிரோஷிமா குண்டை வீசிய விமானத்தை இயக்கிய பால் டிபெட்ஸ். அவர்
தனது வாழ்நாளின் இறுதி வரை, எந்த வருத்தமும்
இல்லை எனத் தெரிவித்தார். அரசின்
உத்தரவை நிறைவேற்றியதையே அவர் கடமை எனக்
கூறினார். இது தான் அரசியல்
அதிகாரத்தின் மிகப் பெரிய வெற்றி: மனிதனின் மனச்சாட்சியை முற்றிலும் அடக்கி விடுவது.
மற்றொரு புறம், அணுகுண்டின் அறிவியல் தந்தை எனக் கருதப்படும் ஜே. ராபர்ட் ஒப்பன்ஹைமர், பகவத் கீதையின் வரிகளை மேற்கோள் காட்டினார். “இப்போது நான் மரணமாகி விட்டேன்; உலகங்களை அழிப்பவன்” என்ற அவரது சொல், அறிவியல், மதம், அதிகாரம் ஆகிய மூன்றும் எவ்வாறு ஒன்றோடொன்று கலக்கப்படுகின்றன
என்பதற்கான சின்னமாகும். மத நூல்கள் மனிதனை
நெறிப்படுத்துவதற்காக உருவானவை; ஆனால், அவை அரசியல் குற்றங்களை
நியாயப்படுத்தும் கருவிகளாக மாற்றப்படும்போது, அவற்றின் அடிப்படை நோக்கமே சிதைக்கப்படுகிறது.
இந்த முரண்பாடு இந்தியாவிலும் தொடர்ந்தது. 1974 ஆம் ஆண்டு இந்தியா
தனது முதல் அணு ஆயுத சோதனையை
நடத்தியபோது, அதற்கு “ஸ்மைலிங் புத்தா” என்று பெயரிடப்பட்டது. அஹிம்சையின் உலகளாவிய சின்னமாக விளங்கும் புத்தரின் பெயரில் அணு ஆயுதம் சோதிக்கப்படுவது,
அரசியல் இரட்டைத் தரத்தின் உச்சமாகும். புத்தர் போதித்த கருணையும் அஹிம்சையும், அரசியல் அதிகாரத்திற்கு முன்னால் வெறும் பெயராக மட்டுமே மாறின.
பகவத் கீதையோ, புத்த தத்துவமோ வன்முறையை ஊக்குவிப்பவை அல்ல. ஆனால், அவற்றைத் தங்களுக்கு ஏற்றவாறு விளக்கி, அதிகார அரசியல் தன் குற்றங்களை மறைக்க
முயல்கிறது. மதம் இங்கே மனிதனை
விடுவிக்கவில்லை; மாறாக, அதிகாரத்தின் கைப்பாவையாக மாறுகிறது. இதுவே மனுச்மிரிதி, கீதா போன்ற நூல்களை
மேற்கோள் காட்டி சமூக–அரசியல் ஆதிக்கத்தை
நிலைநாட்ட முயலும் அமைப்புகளின் அடிப்படை இயல்பாகும்.
அணுகுண்டுகள் விழுந்தது ஜப்பான் மீது மட்டும் அல்ல;
மனித நெறி, மனிதம், மனித சமத்துவம் ஆகிய
அனைத்தின்மீதும் தான். அந்த வெடிப்புகளின் கதிர்வீச்சு
இன்னும் உலக அரசியலில் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது—ஆயுதப் போட்டியாகவும், அணு அச்சுறுத்தலாகவும், “தேசிய பெருமை”
என்ற போலி மொழியாகவும்.
இந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
ஒன்றே:
அதிகாரம் எப்போது மதத்தைத் தனது ஆயுதமாக மாற்றுகிறதோ, அப்போது மனிதகுலம் மிகப் பெரிய அழிவின் விளிம்பில் நிற்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், முதலாம் உலகப் போர் மற்றும் அதனைத்
தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் வாயிலாக அமெரிக்கா தனது இராணுவ–தொழில்துறை
சக்தியை பெரிதும் வளர்த்துக் கொண்டது. ஆயுத உற்பத்தி அமெரிக்கப்
போர்கால பொருளாதாரத்தின் முக்கிய அடித்தளமாக மாறியது.
ஆசிய–பசிபிக் பகுதியில் வளங்களுக்கான போட்டி, பொருளாதார தடைகள் மற்றும் அரசியல் மோதல்கள் காரணமாக உருவான பதற்றத்தின் உச்சமாக, 1941 டிசம்பர் 7 அன்று ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தைத் தாக்கியது. இதன் விளைவாக அமெரிக்கா
இரண்டாம் உலகப் போரில் நேரடியாக ஈடுபட்டது. ஆனால், அதற்கு முன்னரே 1942 ஆம் ஆண்டு அமெரிக்கா
மான்ஹாட்டன் திட்டம் (Manhattan Project)
என்ற ரகசிய அணுகுண்டு ஆய்வு திட்டத்தைத் தொடங்கியது. இந்த அணுகுண்டுகள் ஒரு
மாதத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல; அவற்றை உருவாக்க மூன்று ஆண்டுகளுக்கு அருகான காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
1945 ஆகஸ்டில் ஜப்பான்மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன:
·
“லிட்டில் பாய் (Little Boy)” எனப் பெயரிடப்பட்ட, சுமார்
15 கிலோடன்
வெடிசக்தி கொண்ட யுரேனியம் அணுகுண்டு, 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்டது.
·
“ஃபாட் மேன் (Fat Man)” என அழைக்கப்பட்ட, சுமார்
21 கிலோடன்
வெடிசக்தி கொண்ட புளூட்டோனியம் அணுகுண்டு, 1945 ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது வீசப்பட்டது.
ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய
விமானம் எனோலா கே (Enola Gay) என்ற B-29 விமானமாகும். அதனை இயக்கியவர் கர்னல் பால் டிபெட்ஸ் (Paul Tibbets Jr.). (கோகுரா விமானத்தின் இலக்கு அல்ல; அது நாகசாகி குண்டு
வீசுவதற்கான முதன்மை இலக்காக இருந்தது. வானிலை காரணமாக நாகசாகி மாற்று இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.)
1945 ஆம் ஆண்டுக்குள் நேரடியாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்புகளாலும் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர். அடுத்த பல ஆண்டுகளில் கதிர்வீச்சு
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சேர்த்தால், பல இலட்சம் மக்கள் இந்த அணுகுண்டுகளின் விளைவுகளை
அனுபவித்தனர்.
இந்தப் பெரும் அழிவை நிகழ்த்தியவர்களில் ஒருவர், ஹிரோஷிமா குண்டை வீசிய விமானத்தை இயக்கிய பால் டிபெட்ஸ். அவர்
தனது வாழ்நாளின் இறுதி வரை, எந்த வருத்தமும்
இல்லை எனத் தெரிவித்தார். அரசின்
உத்தரவை நிறைவேற்றியதையே அவர் கடமை எனக்
கூறினார். இது தான் அரசியல்
அதிகாரத்தின் மிகப் பெரிய வெற்றி: மனிதனின் மனச்சாட்சியை முற்றிலும் அடக்கி விடுவது.
மற்றொரு புறம், அணுகுண்டின் அறிவியல் தந்தை எனக் கருதப்படும் ஜே. ராபர்ட் ஒப்பன்ஹைமர், பகவத் கீதையின் வரிகளை மேற்கோள் காட்டினார். “இப்போது நான் மரணமாகி விட்டேன்; உலகங்களை அழிப்பவன்” என்ற அவரது சொல், அறிவியல், மதம், அதிகாரம் ஆகிய மூன்றும் எவ்வாறு ஒன்றோடொன்று கலக்கப்படுகின்றன
என்பதற்கான சின்னமாகும். மத நூல்கள் மனிதனை
நெறிப்படுத்துவதற்காக உருவானவை; ஆனால், அவை அரசியல் குற்றங்களை
நியாயப்படுத்தும் கருவிகளாக மாற்றப்படும்போது, அவற்றின் அடிப்படை நோக்கமே சிதைக்கப்படுகிறது.
இந்த முரண்பாடு இந்தியாவிலும் தொடர்ந்தது. 1974 ஆம் ஆண்டு இந்தியா
தனது முதல் அணு ஆயுத சோதனையை
நடத்தியபோது, அதற்கு “ஸ்மைலிங் புத்தா” என்று பெயரிடப்பட்டது. அஹிம்சையின் உலகளாவிய சின்னமாக விளங்கும் புத்தரின் பெயரில் அணு ஆயுதம் சோதிக்கப்படுவது,
அரசியல் இரட்டைத் தரத்தின் உச்சமாகும். புத்தர் போதித்த கருணையும் அஹிம்சையும், அரசியல் அதிகாரத்திற்கு முன்னால் வெறும் பெயராக மட்டுமே மாறின.
பகவத் கீதையோ, புத்த தத்துவமோ வன்முறையை ஊக்குவிப்பவை அல்ல. ஆனால், அவற்றைத் தங்களுக்கு ஏற்றவாறு விளக்கி, அதிகார அரசியல் தன் குற்றங்களை மறைக்க
முயல்கிறது. மதம் இங்கே மனிதனை
விடுவிக்கவில்லை; மாறாக, அதிகாரத்தின் கைப்பாவையாக மாறுகிறது. இதுவே மனுச்மிரிதி, கீதா போன்ற நூல்களை
மேற்கோள் காட்டி சமூக–அரசியல் ஆதிக்கத்தை
நிலைநாட்ட முயலும் அமைப்புகளின் அடிப்படை இயல்பாகும்.
அணுகுண்டுகள் விழுந்தது ஜப்பான் மீது மட்டும் அல்ல;
மனித நெறி, மனிதம், மனித சமத்துவம் ஆகிய
அனைத்தின்மீதும் தான். அந்த வெடிப்புகளின் கதிர்வீச்சு
இன்னும் உலக அரசியலில் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது—ஆயுதப் போட்டியாகவும், அணு அச்சுறுத்தலாகவும், “தேசிய பெருமை”
என்ற போலி மொழியாகவும்.
இந்த வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
ஒன்றே:
அதிகாரம் எப்போது மதத்தைத் தனது ஆயுதமாக மாற்றுகிறதோ, அப்போது மனிதகுலம் மிகப் பெரிய அழிவின் விளிம்பில் நிற்கிறது.
திருக்குறளில் “காவல்” என்ற கருத்து (போலீஸ்)
திருவள்ளுவர் ஒரு நாட்டின் முதன்மை கடமை மக்களை பாதுகாப்பது என வலியுறுத்துகிறார். காவல் என்பது தண்டனை வழங்கும் அமைப்பு மட்டுமல்ல; அநீதி, குற்றம், அச்சம் ஆகியவற்றை முன்கூட்டியே தடுக்கும் நெறி அமைப்பாகும்.
கொலைகொள்ளும் காழ்ப்புணர்ச்சி இல்லான் வலிகாவல்
செய்யும் அரசு.
பொருள்: கொடுமையான எண்ணங்களின்றி, நீதி வழியிலான வலிமையான காவலை மேற்கொள்ளும் அரசே சிறந்த அரசு.
👉 இக்குறள், காவல் அமைப்பு பழிவாங்கும் மனநிலையுடன் அல்லாமல், நீதியும் ஒழுக்கமும் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.
குடிமக்கள் காத்து குற்றம் தண்டித்து வடுவற்றான்
செய்வதே அரசு.
பொருள்: குடிமக்களை பாதுகாத்து, குற்றம் செய்தவர்களை நியாயமாகத் தண்டித்து, தன்னிலே குற்றமில்லாமல் நடப்பதே அரசின் கடமை.
👉 இக்குறள் இன்றைய போலீஸ் துறையின் மூலக் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது:
· மக்கள் பாதுகாப்பு
· சட்டத்தின் முன் சமத்துவம்
· அதிகார துஷ்பிரயோகம் இல்லாமை
திருவள்ளுவர் ஒரு நாட்டின் முதன்மை கடமை மக்களை பாதுகாப்பது என வலியுறுத்துகிறார். காவல் என்பது தண்டனை வழங்கும் அமைப்பு மட்டுமல்ல; அநீதி, குற்றம், அச்சம் ஆகியவற்றை முன்கூட்டியே தடுக்கும் நெறி அமைப்பாகும்.
கொலைகொள்ளும் காழ்ப்புணர்ச்சி இல்லான் வலிகாவல்
செய்யும் அரசு.
பொருள்: கொடுமையான எண்ணங்களின்றி, நீதி வழியிலான வலிமையான காவலை மேற்கொள்ளும் அரசே சிறந்த அரசு.
👉 இக்குறள், காவல் அமைப்பு பழிவாங்கும் மனநிலையுடன் அல்லாமல், நீதியும் ஒழுக்கமும் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.
குடிமக்கள் காத்து குற்றம் தண்டித்து வடுவற்றான்
செய்வதே அரசு.
பொருள்: குடிமக்களை பாதுகாத்து, குற்றம் செய்தவர்களை நியாயமாகத் தண்டித்து, தன்னிலே குற்றமில்லாமல் நடப்பதே அரசின் கடமை.
👉 இக்குறள் இன்றைய போலீஸ் துறையின் மூலக் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது:
· மக்கள் பாதுகாப்பு
· சட்டத்தின் முன் சமத்துவம்
· அதிகார துஷ்பிரயோகம் இல்லாமை
நாட்டின் பாதுகாப்பு – படையின் அவசியம்
திருவள்ளுவர் ஒரு நாட்டிற்கு தேவையான ஆறு முக்கிய அங்கங்களைச் சொல்கிறார். அதில் படை முக்கியமான ஒன்று.
படை குடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையது அரசு.
பொருள்: படை, மக்கள், பொருள் வளம், அமைச்சர்கள், நட்பு நாடுகள், அரண் (கோட்டை/பாதுகாப்பு) ஆகிய ஆறு உடையதே ஒரு முழுமையான அரசு.
👉 இக்குறள் ராணுவத்தை நாட்டின் அடித்தள அமைப்பாகக் காட்டுகிறது.
திருவள்ளுவர் ஒரு நாட்டிற்கு தேவையான ஆறு முக்கிய அங்கங்களைச் சொல்கிறார். அதில் படை முக்கியமான ஒன்று.
படை குடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையது அரசு.
பொருள்: படை, மக்கள், பொருள் வளம், அமைச்சர்கள், நட்பு நாடுகள், அரண் (கோட்டை/பாதுகாப்பு) ஆகிய ஆறு உடையதே ஒரு முழுமையான அரசு.
👉 இக்குறள் ராணுவத்தை நாட்டின் அடித்தள அமைப்பாகக் காட்டுகிறது.
படையின் பண்புகள்
எண்ணி துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம்
என்பது இழுக்கு.
பொருள்: ஒரு செயலை முன்கூட்டியே நன்கு ஆராய்ந்து துணிய வேண்டும்; துணிந்த பின் தயக்கம் காட்டுவது தோல்விக்கு வழி.
👉 இது ராணுவத் திட்டமிடல், தளபதி முடிவெடுப்பு, போர் நெறி ஆகியவற்றுக்கான அடிப்படை சிந்தனையாகும்.
எண்ணி துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம்
என்பது இழுக்கு.
பொருள்: ஒரு செயலை முன்கூட்டியே நன்கு ஆராய்ந்து துணிய வேண்டும்; துணிந்த பின் தயக்கம் காட்டுவது தோல்விக்கு வழி.
👉 இது ராணுவத் திட்டமிடல், தளபதி முடிவெடுப்பு, போர் நெறி ஆகியவற்றுக்கான அடிப்படை சிந்தனையாகும்.
ஒழுக்கமுள்ள படை
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தனை
வெல்லும் படை.
பொருள்: ஒழுங்கமைந்த, துன்பத்திற்கும் அஞ்சாத, ஒற்றுமையுள்ள படையே அரசனை வெற்றி பெறச் செய்யும்.
👉 ராணுவத்தின் பலம் ஆயுதங்களில் அல்ல; ஒழுக்கம், பயிற்சி, ஒருமைப்பாடு என்பதில்தான் உள்ளது என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தனை
வெல்லும் படை.
பொருள்: ஒழுங்கமைந்த, துன்பத்திற்கும் அஞ்சாத, ஒற்றுமையுள்ள படையே அரசனை வெற்றி பெறச் செய்யும்.
👉 ராணுவத்தின் பலம் ஆயுதங்களில் அல்ல; ஒழுக்கம், பயிற்சி, ஒருமைப்பாடு என்பதில்தான் உள்ளது என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.
காவலும் ராணுவமும் – அரசாட்சியின் இரு கண்கள்
திருக்குறளில் காவல் மற்றும் படை இரண்டும் தனித்தனியாக இல்லாமல், அரசாட்சியின் நீதி மற்றும் பாதுகாப்பு என்ற ஒரே நோக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
· உள்நாட்டு பாதுகாப்பு → காவல் (Police)
· வெளிநாட்டு மற்றும் எல்லை பாதுகாப்பு → படை (Army)
இரண்டும் அரசன் (அரசு) கட்டுப்பாட்டில், நீதியோடு செயல்பட வேண்டும்.
திருக்குறளில் காவல் மற்றும் படை இரண்டும் தனித்தனியாக இல்லாமல், அரசாட்சியின் நீதி மற்றும் பாதுகாப்பு என்ற ஒரே நோக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
· உள்நாட்டு பாதுகாப்பு → காவல் (Police)
· வெளிநாட்டு மற்றும் எல்லை பாதுகாப்பு → படை (Army)
இரண்டும் அரசன் (அரசு) கட்டுப்பாட்டில், நீதியோடு செயல்பட வேண்டும்.
நவீன காலத்துடன் ஒப்பீடு
திருக்குறள் கருத்து
நவீன விளக்கம்
குடிமக்கள் காத்தல்
Internal Security
குற்றம் தண்டித்தல்
Criminal Justice System
ஒழுக்கமுள்ள படை
Professional Army
அதிகார துஷ்பிரயோகம் தவிர்ப்பு
Human Rights & Rule of Law
👉 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்றைய அரசியல் அறிவியல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுடன் நேரடியாக பொருந்துகிறது.
திருக்குறள் கருத்து | நவீன விளக்கம் |
குடிமக்கள் காத்தல் | Internal Security |
குற்றம் தண்டித்தல் | Criminal Justice System |
ஒழுக்கமுள்ள படை | Professional Army |
அதிகார துஷ்பிரயோகம் தவிர்ப்பு | Human Rights & Rule of Law |
👉 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்றைய அரசியல் அறிவியல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுடன் நேரடியாக பொருந்துகிறது.






























Comments
Post a Comment