சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் தலித் தலைவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் ஒரு பார்வை
Lion Raja Ganesan அந்த காலத்தில் பம்பாய் வடக்கு தொகுதி “ இரட்டை உறுப்பினர் தொகுதி ” ஆக இருந்தது . அதாவது மக்கள் இரண்டு வாக்குகள் போடலாம் — ஒரு பொதுத் தொகுதி வேட்பாளருக்கு , ஒரு தலித் தொகுதி வேட்பாளருக்கு . அம்பேத்கர் தலித் தொகுதியில் போட்டியிட்டார் . அவருக்கு எதிராக காங்கிரஸ் , அவரோடு நீண்ட காலம் இருந்த நாராயண் கஜ்ரோல்கரை நிறுத்தியது . ஆனால் அம்பேத்கர் பின்னர் கூறியது என்னவென்றால் : “ என்னை தோற்கடித்ததில் காங்கிரஸ் மட்டும் காரணமில்லை ; டாங்கே செய்த அரசியல் மிகப் பெரிய காரணம் ” என்பதே . கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கே என்ன செய்தார் என்றால் : “ உங்கள் இரண்டு வாக்குகளையும் எனக்கே போடுங்கள் ” என்று பிரச்சாரம் செய்தார் . ஆனால் சட்டப்படி ஒரே வேட்பாளருக்கு இரண்டு வாக்குகள் போட்டால் அதில் ஒரு வாக்கு செல்லாது ஆகிவிடும் என்பது அவருக்குத் தெரியும் . அதன் விளைவு என்ன ? ஆயிரக்கணக்கான வாக்குகள் வீணானது . அந்த வாக்குகள் அம்பேத்கருக்கு சென்றிருக்க வாய்ப்பு இருந்தது . அம்பேத்கர் கணக்குப்படி சுமார் 39,000 வாக்குகள்...