இதுதான் மஹா..பாரத கதை Lion Raja Ganesan
மகாபாரதக் கதையும் அதை எழுதி பரப்பியவர்களின் அறிமுகமும் ! பராசர மகரிஷியின் மகனான வேத வியாசர் , எப்படியாவது இந்த பூலோகத்திற்கு மகாபாரதக் கதையை எழுதிப் பரப்ப வேண்டுமென்று பிரம்மனை வேண்டி நிற்கிறார் . கல்விக் கடவுள் சரஸ்வதிக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த பிரம்மன் , " யார்ரா இந்த நேரத்தில் ?" என்று வியாசருக்குக் காட்சி தந்து , " என்னப்பா உனக்கு பிரச்சினை ?" என்று கேட்கிறார் . " மகாபாரதக் கதையை நீங்கள்தான் எழுத வேண்டும் " என்று சொல்கிறார் வியாச முனிவர் . " மகாபாரதத்தை என்னால் எழுத முடியாது . அது பெரிய கதை , ரொம்பக் கதாபாத்திரங்கள் இருக்கும் . அப்பப்போ அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி கிருஷ்ணன் வந்து போவான் . அதை எழுதுற அளவுக்கு திறமையும் , தகுந்த பேனாவும் ( தந்தமும் ) விநாயகனிடம் தான் இருக்கு . நீ அவனைப் பிடிச்சு எழுதிக்கோ " என்று சொல்லிவிடுகிறார் . உடனே வியாசர் , சித்தி - புத்தியோடு இருந்த விநாயகரைத் தன் தவத்தால் அழைக்கிறார் . " இந்த நேரத்தில் எவன்டா கதவைத் தட்டுனது ?...