Posts

பாரதி ஒரு பார்வை Lion Raja Ganesan

Image
  பாரதி வாழ்ந்த காலத்தில் முன்னுக்குப் பின் முரணாக எழுதி இருக்கிறான், இப்படி எழுதுவது ஒன்றும் தவறில்லை இது அனைவருக்கும் பொருந்தும் ஒரு வழக்கில் மூன்று நீதிமன்றங்களில் மூன்று விதமான தீர்ப்புகளை பெறுவதில்லையா, ஓஷோ இப்படி ஒரு கேள்வியை எதிர் கொண்டார் அதற்கு அவர் சொன்ன பதில் நான் வாழ்கிறேன் என்பதற்கு இதுதான் சாட்சி , பாரதி முதலில் தூக்கி எறிந்தது பார்ப்பன அடையாளங்கள் முடி வெட்டிக் கொண்டார், மீசை வளர்த்தார் ஆங்கிலேயன் போல நல்ல கோர்ட் போட்டுக் கொண்டார் ,  காந்தியிடம் கேட்டார்கள் நீங்கள் முன்பு பேசியதை இப்போது மறுத்து பேசுகிறீர்கள் என்று , நான் அன்று பேசியதும் உண்மை இப்போது பேசுவது உண்மை எப்பவும் என்ன பேசினேன் என்று நான் யோசிப்பது இல்லை நான் பேசுவது காலத்தின் தேவை , என்று பதிலளித்தார் மூன்று ஆண்டுகள் உண்மை என்பது என்ன வென்று ஆராய்ச்சி செய்தவர் காந்தி , தன் வீட்டில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே உலகம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிராமத்து மனிதன், பெரும் கூட்டத்தை பார்த்து எதற்காக இவ்வளவு பே...