(மனு) நீதி மன்ற தீர்ப்புகள்
‘ இருபிறப்பாளர்கள் ’ என கருதிக்கொள்ளும் பர்ப்பனர்கள் தங்களை இந்நாட்டின் தொல்குடி மக்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள கைக்கொள்ளும் பல அணுகுமுறைகளில் ஒன்றுதான் தங்கள் உடம்பின் குறுக்கே அணியும் கயிறு. இந்த ’ பூணூல் ’ என்பது ஒரு சாதாரண கயிறாக மட்டுமே இல்லை. அது ஆதிக்கத்தையும் , இன இழிவையும் குறிப்பதாகவே இருக்கிறது. பார்ப்பனியத்தைக் கடை பிடிப்பது மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.சாதியை கடை பிடிப்பது என்பது பார்ப்பனியத்தின் கொள்கையே.பார்ப்பனர்கள் என்பவர்கள் பார்ப்பனியத்தை கடை பிடிப்பவர்களே.எனவே சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக்கொள்வதும் , சாதி அடையாளங்களை ஏற்று வாழ்வதும் பச்சைப்பார்ப்பனியம். இந்நாட்டில் சாதி என்பது ஒருவனுக்கு எத்தகைய சமூக நிலையை வழங்குகின்றது என்பதை அதை அனுபவிப்பவர்கள் உணர்வார்கள் . சாதி என்பது ஒருவரின் தேர்வு அல்ல . அது பிறப்பால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பர்ப்பனப் பட்டம் என்பது வெறுமனே ஓர் இணைப்பு சொல் அல்ல . அது பார்ப்பனர்களுக்கு வழங்கிய உரிமைகள் , சலுகைகள் , வசதிகள் , வாய்ப்புகள் வரலாறு நெடுகிலும் ஏராளம் உள்ள...