மகாபாரதம் பதிவு -2 Lion Raja Ganesan
பாஞ்சாலி தசதலதய உருவிய துச்சாதனன் – பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலி சபதம்-25 தர்மன் அவனோட மனைவியான பாஞ்சாலிய பந்தயம் கட்டி விளையாடுறான் . இந்த டயமும் துரியோதனன்கிட்ட தோத்து போயிருக்குறான் . பொண்டாட்டிய வச்சி தோத்துட்டானேன்னு நாலு தம்பிகளும் அழுகுறாங்க . அப்போ பீமன் , " டேய் . துரியோதனா . இப்ப வரைக்கும் நீ செஞ்சதெல்லாம் சரி . ஃபஸ்ட் தர்மன் அவன வச்சி தோத்தா , பிறகு எப்படிடா இன்னொரு பொருள வச்சி விளையாட முடியும் ..?" னு கேக்கான் . அதுக்கு கர்ணன் , " டேய் . பீமா . தோத்த பிறகு உனக்கு ஏண்டா இந்த வேல ?" னு சொல்லிட்டு , " துரியோதனா .. இந்த பாண்டவ பயலுக எல்லாம் நம்ம அடிமைக , இவங்க எல்லாம் இங்க இருக்கானுக . நம்ம அடிமை பாஞ்சாலி எங்க இருக்கா ...? கூட்டி வர சொல்லு நண்பா .." னு சொல்றான் . துரியோதனன் தன்னோட தேரோட்டிய கூப்பிட்டு , பாஞ்சாலிய கூட்டி வர காண்டவிரஸ்த நாட்டுக்கு அனுப்புறான் . தேரோட்டி பாஞ்சாலிய பாத்து நடந்தத எடுத்து சொல்லி அஸ்தினாபுரத்துக்கு கூப்புடுறான் . அதுக்கு பாஞ்சாலி , ...