சமூகவியல் என்றால் என்ன? Lion Raja Ganesan

 


பீட்டர் எல். பெர்கர் என்பவர் மதம் பற்றி ஆழமாக ஆய்வு செய்த ஒரு பெரிய சமூகவியலாளர். அவர் சொல்வது என்னனா
மதம் என்பது கடவுள் கொடுத்த ஒன்று இல்லை; மனிதன் தானே உருவாக்கிக்கொண்ட ஒருஉலகை புரிந்து கொள்ளும் முறை”.

1. மதம் ஏன் உருவானது?

மனித வாழ்க்கை குழப்பமாக இருக்கிறது.
பிறப்பு, மரணம், துன்பம், சந்தோஷம்எல்லாமே புரியாத விஷயங்கள்.

இந்த குழப்பத்துக்கு ஒரு ஒழுங்கு (order) கொடுக்க மனிதன் மதத்தை உருவாக்கினான்.
மதம் உலகை ஒருபுனித குடை” (Sacred Canopy) மாதிரி மூடி,
இதுதான் வாழ்க்கை”, “இதுதான் உண்மை”, “இப்படி தான் வாழ வேண்டும்என்று அர்த்தம் கொடுக்கிறது.

2. சமூகம் எப்படி உருவாகிறது?

பெர்கர் சொல்வது:

  • முதலில் மனிதன் சில நம்பிக்கைகள் உருவாக்குகிறான் (புறவயமாக்கல்)
  • அது சமூகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்படுகிறது (புறநிலைப்படுத்துதல்)
  • பிறகு அந்த நம்பிக்கையை ஒவ்வொருவரும் உள்ளே எடுத்துக்கொள்கிறார்கள் (அகவயமாக்கல்)

இந்த முழு செயலிலும் மதம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அது சமூக ஒழுங்குக்குதெய்வீக முத்திரைபோடுகிறது.

3. நவீன உலகில் மதம் எப்படி மாறியது?

முன்னாடி ஒரு ஊரில் ஒரு மதம் தான். எல்லாரும் அதையே பின்பற்றுவார்கள்.
ஆனா இப்போ உலகம் மாறிவிட்டது.

பல மதங்கள், பல கருத்துகள், பல நம்பிக்கைகள்.

இப்போ மக்கள்:

என் அப்பா பின்பற்றின மதம்என்பதற்குப் பதிலாக
எனக்கு பிடித்த மதம்என்று தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால் மதங்கள்சந்தை போட்டிமாதிரி மாறிவிட்டது.

4. பெர்கரின் கருத்து மாறியது

1960களில் அவர் நினைத்தார்:

நவீன உலகில் மதம் மெதுவாக குறைந்து போய்விடும்.

ஆனா 1990க்கு பிறகு அவர் சொன்னார்:

நான் தவறாக நினைத்தேன். உலகம் இன்னும் மதத்தில் தான் இருக்கிறது.”

மேற்கு நாடுகள் கொஞ்சம் மதச்சார்பற்றதாக இருந்தாலும்,
மீதமுள்ள உலகம் இன்னும் தீவிரமாக மதத்தை பின்பற்றுகிறது.

இதையே அவர்மதச்சார்பின்மை நீக்கம்” (Desecularization) என்று சொன்னார்.

5. மதம்அடையாளம்

உலகம் முழுக்க மனிதர்களை மத அடையாளத்தின் மூலம் தான் அடையாளப்படுத்துகிறார்கள்:

  • இந்தியாஇந்து, முஸ்லீம், கிறித்தவர், பௌத்தர், சிக்கள்...
  • மற்ற நாடுகளிலும் அதே நிலை.

மதம் என்பது:

  • ஒரு கருத்தியல் அமைப்பு
  • ஒரு அடையாள அமைப்பு

இரண்டும் சேர்ந்து மனிதனை வழிநடத்துகிறது, சில நேரங்களில் ஆட்டிப்படைக்கவும் செய்கிறது.

6. அரசு & மதம்

பெரிய அளவில் மனிதனை கட்டுப்படுத்தும் இரண்டு அமைப்புகள்:

அரசுஅரசியல் தளத்தில்
மதம்பண்பாட்டு தளத்தில்

அரசு உருவாகும் முன்பே மதம் மனிதனை நெறிப்படுத்திக் கொண்டிருந்தது.

மதம் இல்லாமல் இருந்திருந்தால்,
இன்றைய மாதிரி ஒழுங்கான சமூகம் உருவாகி இருக்குமா? என்பது கேள்வி.

7. மதம் தேவையா?

இந்த கேள்விக்கு நேரடி பதில் இல்லை.

ஆனா ஒரு உதாரணம்:

ஒருவனுக்கு பேய் பிடித்திருக்கிறதுஎன்று அவன் நம்பினால்,
பேய் ஓட்டுபவன்கூட உருவாகிவிடுகிறான்
.

அதாவது, நம்பிக்கை இருக்கிற இடத்தில் அதற்கான அமைப்பும் உருவாகும்.

8. இந்தியாவின் தனித்தன்மை

இந்தியாவை சுற்றி இருக்கும் பல நாடுகள் ஒரு மதத்தை சார்ந்த நாடுகள்.
ஆனா இந்தியா மட்டும் மதச்சார்பற்ற நாடு.

இதற்கு காரணம்:

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டம்.

அதனால் தான் இந்தியாவில் எல்லா மதத்தினரும் சமமாக வாழும் உரிமை பெற்றுள்ளனர்.

சுருக்கமாக சொன்னால்:

மதம் என்பது கடவுள் கொடுத்தது இல்லை.
மனிதன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க உருவாக்கிய ஒரு பெரிய அமைப்பு.

அது மனிதனை வழிநடத்துகிறது.
சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறது.
அதே நேரத்தில் மனிதனை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

https://openwa.pressbooks.pub/tccsoc101/chapter/__unknown__/

 



ஒரு நாளில் மும்பையில் மட்டும் பல லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள் யாரையும் யாருக்கும் தெரியாது சமூகம் என்பது சேர்ந்து வாழும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டுமே அறிமுகமானவர்கள்

முதன்முதல் ஆங்கிலேயரின் ரயில் வண்டி விட்டபோது எங்க ஊர் என் எஸ் கிருஷ்ணன் பாடினார் ,பல்லு பறையனோடு எல்லா சாதி ஆண்கள் பெண்கள் அனைவரையும் ஒற்றுமையாக ஏற்றிச் சென்று ஜாதியை ஒழித்த ரயிலே ரயிலே என்று பாடி இருப்பார்

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த போது ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை வழியில் தென் ஆப்பிரிக்காவில் சில வெற்றிகளை பெற்றிருந்ததால் இந்திய காங்கிரசுக்கு தலைமை ஏற்க எல்லோரும் சேர்ந்து அவரை வற்புறுத்தினார்கள்,

காந்தி உடனே அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக இரண்டு ஆண்டுகள் மரப்பலகைகள் மட்டுமே இருந்த ரயிலில் பயணம் செய்தார்,

நுட்பமாக ஒன்றை கவனித்தார் மூன்று ரயில் நிறுத்தங்கள் வரை தான் சமூகம் அதாவது ஜாதி இறுக்கமாக இருக்கிறது அதற்குப் பிறகு யாருக்கும் யாரையும் தெரிவதில்லை குறிப்பாக ஒரு ரயில் நிலையத்தில் ஏறுபவர் எல்லாம் ஒரே மாதிரி இருப்பார்கள் கூடை நிறம் உணவு எந்த ஊர் யாருடைய மகன் என்று கேட்டு அவருடைய ஜாதிகளை கண்டுபிடிக்க முடியும் மூன்று ரயில் நிறுத்தங்களை தாண்டி விட்டாள் யாரையும் எந்த ஜாதிக்காரன் என்று கண்டுபிடிக்க முடியாது,

அதில் நுட்பமாக காந்தி ஜாதி என்பது அவனவன் மூளைக்குள்ளே புகுத்தப்பட்டிருக்கிறது அதிலிருந்து வெளியேற்ற வேண்டியது நம்முடைய கடமை என்றார் இதுதான் அம்பேத்கருக்கும் காமராசருக்கும் பிணக்கு வந்தது இதில் நான் காந்தி பக்கம் நிற்கிறேன் அவர் குறித்து நம்ம தோழர்களுக்கும் சரியான புரிதல் இல்லை காந்தி அம்பேத்கரை விட சமூகத்தை அறிந்தவர் உடனே எதையும் மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்


திருநெல்வேலி மாவட்டத்துல "புதிரை வண்ணான்"னு ஒரு சாதி இருக்குறாங்க.சாதி இந்துக்களோட துணிகள வெளுக்குறதுதான் இவங்களோட தொழில்.இந்த வேலைக்கு இவங்களுக்கு கூலியெல்லாம் கிடையாது.தொவச்ச துணிய கரிப் பெட்டியில இஸ்திரி போட்டு டோர்டெலிவரி பண்றப்ப
அரிசியோ,பருப்போ இல்ல, பழைய சாதமோ குடுப்பாய்ங்க அத வெச்சி வயித்த கழுவிக்கனும்.வண்ணான்கள் பொட்டு கறையில்லாம வெளுத்த சொக்காவ மாட்டிட்டு பண்ணையாரு வெளிய திரியிற அதே நேரம் வெள்ளாவி பானையில வெந்த வண்ணான் பகல்ல வூட்ட விட்டு வெளிய வரக்கூடாது!.ஏன்னா;புதிரை வண்ணான் சாதியினர் "பகலில் நடமாட தடை".கடைக்கு போகனும்,கக்கூஸ் போகனும்,காய்ச்ச மாத்திர வாங்கனும்னு எதா இருந்தாலும் மேற்க மறைஞ்ச சூரியன் கிழக்க உதிக்கிறதுக்குள்ள முடிச்சிக்கனும்.இந்த நேரத்துல துணிகளையும் தொவச்சி அடுத்த நாளைக்கு தயாரா வைக்கனும்!.



கர்நாடகா நிலமை!.கர்நாடகாவுல "அன்டீ பொடா"னு ஒரு சாதி.கூடைகள் பின்றதுதான் இவங்களோட தொழில்.இவங்க அங்கிட்டும்,இங்கிட்டும் நடக்குறப்ப ரோட்டுல எச்சி துப்பி அந்த எச்சிய ஒசந்த சாதிக்காரன் மிதிச்சி தீட்டாகாம இருக்க இன்னா பண்ணனும்னா; "அன்டீ பொடா" சாதியை சார்ந்தவர்கள் கழுத்துல கலையத்த கட்டிக்கனும்.


மகாராஷ்ட்ராவுல இன்னும் ஒரு படி மேல போயி,1783ல அப்போதைய மராத்தா அரசாங்கம் ஒரு சட்டமே போட்டுச்சி இன்னானா; "ஹலால் கோர்" ங்குற சாதிகாரங்க காத்தால 9 மணிக்கு மேல வூட்ட விட்டு வெளிய வரக்கூடாது ஏன்னா;இவுங்க விடுற மூச்சு காத்தால காத்து தீட்டாயிருமாம்.அம்புட்டு ஏன் தீண்டதகாவங்களோட "நிழல்" பட்டா சாதி இந்துகளுக்கு தீட்டாயிரும்னும்,தாழ்ந்த சாதிகாரங்க நடக்குறப்ப எழும்புற தூசி பட்டு ஒசந்த சாதிகாரனுக்கு தீட்டாயிரும் அதனால இடுப்புல தொடப்பத்த கட்டிட்டு நடக்கனும்னும் இவனுங்க போட்ட தீண்டாமை,அண்டாமை,

காணாமை,பேசாமை லிஸ்ட்டு கணக்கே இல்லாம நீளுது!.

மேலாடை அணிய தடை,சாணிப்பால்,
சவுக்கடி,கரும்புள்ளி செம்புள்ளி,ரெட்டை டம்ளர் முறைனு ஒடுக்கப்பட்ட மக்கள் மேல இம்புட்டு கொடுமையான வன்முறைய நடத்தியிருக்கானுங்களே இதையெல்லாம் எதிர்த்து மக்கள் போராடலையா.
போராட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் "இதெல்லாம் மாத்தவே முடியாது எல்லாம் விதி!"ங்குற மைண்ட் செட்டு மக்களுக்குள்ள ஆழமா ஊறிப் போயிருந்தது!.பத்தாததுக்கு இந்து மதம் இந்த ஒடுக்குமுறைகள கடவுள் பேரால புனித முலாம் பூசி நியாயப்படுத்தவும் செஞ்சிது!."ஒரு அடிமையிடம் சென்று நீ அடிமை எனச் சொல்.அவன் தன் அடிமைத்தனத்துக்கு எதிராக அவன் போராடுவான்"னு அம்பேத்கர் சொல்றாப்புல. ஏன் நான் போயி அவனுக்கு சொல்லனும் அது அவனுக்கே தெரியாதா..!?.சத்தியமா தெரியாது ஏன்னா கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்க முன்னாடியே தோன்றுன மூத்த குடிக்கே "சுய மரியாதை" னா இன்னானு கத்து குடுக்க ஒருத்தர் தேவைபட்டாருங்குறதுதான் யதார்த்தம்!.



ஒட்டுமொத்த இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் 

அவர்கள் மூன்று சதவீதம் இன்றைக்கு இந்தியாவிற்கும் பார்ப்பன சதவீதம் போன்றது தான் ஆனால் அவர்கள் ஒரு முடிவு செய்தார்கள் 

வெள்ளைக்காரன் இந்தியாவில் கொடியேறி வாழ்ந்த காலங்களில் அவர்களுக்கான உடைகளை துவைத்து அழகாக கொடுப்பதற்காக 

மும்பையில் சென்னையில் ,சில பகுதிகளில் துணி துவைக்கும் ஜாதியினரை அவர்கள் பணம் பொருள் கொடுத்து மன்னர்களுக்கு செய்து கொண்டிருந்த சேவைகளை இந்த வெள்ளைக்கார அதிகாரிகள் அவர்களுக்காக செய்து கொள்ள வைத்தார்கள் அப்படித்தான் மும்பையில் இருக்கிற டோபிகாட் சென்னையில் இருக்கிற வண்ணாரப்பேட்டை பெங்களூரிலும் இருக்கிறது இதுதான் உண்மை







Comments

Popular posts from this blog

Language, Communication, and the Story of Migration

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan

காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )