காந்தி பற்றிய மறைக்க பட்ட செய்திகள் ( The Hidden Chapters of Gandhi’s Journey )




காந்தி  குறித்த தெரியாத செய்திகள் 

“1920–25 காலகட்டத்திலேயே மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியின் அமைப்பை மொழிவாரி அடிப்படையில் தெளிவாகப் பிரித்தார். அதன்படி ‘தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற பெயரும் அவர் காலத்திலேயே உருவானது. அண்ணாதுரை ‘தமிழ்நாடு’ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக முன்வைப்பதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே காந்தி அந்தப் பெயரை நடைமுறையில் கொண்டு வந்திருந்தார். தெலுங்கு பகுதிகள், மும்பை, கல்கத்தா உள்ளிட்ட இடங்களிலும் அந்தந்த மக்களின் மொழி அடையாளத்தை மதித்து அமைப்புகளுக்கு பெயர் சூட்டினார் . மொழி, மக்கள், பண்பாடு ஆகியவற்றை மதித்த இந்த அணுகுமுறையே சில சக்திகளுக்கு ஏற்றதாக இல்லாமல் போனது. அதுவே அவருக்கு எதிரான ஆழமான விரோதத்தின் பின்னணியாக அமைந்தது.”

சென்னை மாகாணத்தின் பிரதமர் அப்போது பிரதமர் என்று தான் அழைப்பார்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி இவர்தான் இந்தியாவின் முதல் பிரதமராக வரவேண்டும் என்று காந்தி விரும்பினார்,
ஒரு விவசாயி தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் ஆனால் நேரு போன்ற வக்கீல்கள் அவருக்கு உதவியாக இருக்கலாம் என்று என்று காங்கிரஸ் கட்சிக்குள் பேசிக் கொண்டிருந்தார்,ஓமந்தூர் ராமசாமி ரெட்டி முதல்வர் பதவியை துறந்த  வள்ளலார் வழியில் வாழ்ந்து சொத்துக்களை ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளித்து இறந்து போனார் 

இன்னொன்றையும் சொன்னார் முதல் நிதி அமைச்சராக அமெரிக்க பொருளாதாரத்திற்கு அறிவுரை சொன்ன தமிழன் நிரந்தர பொருளாதாரம் என்ற புத்தகத்திற்கு சொந்தக்காரன் சி குமாரப்பா இவர்தான் நிதியமைச்சராக வரவேண்டும் என்று காந்தி விரும்பினார் அது நடக்காமல் போனது காந்தி குறித்து முழுவதும் வாசித்தவருக்கு தெரியும் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு,

ஜோசப் கொர்னேலியஸ் செல்லத்துரை குமரப்பா இதுதான் இவரின் முழு பெயர் இவரை காந்தி நன்றாக பயன்படுத்தினார் பொருளாதார குறித்து டாக்டர் பட்டம் பெற்றவர் காந்தியடிகள் தோற்றுவித்த குஜராத் வித்தியா பீடம் என்ற அமைப்பில் இவரை பொருளாதார பேராசிரியராக நியமித்தார் 
காந்தியடிகள் நடத்திய என் இந்தியா பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார் காந்தி தேர்ந்தெடுத்த இரண்டு பேரும் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் வந்திருந்தால் இந்தியாவின் வரலாறு இன்றைய தமிழகம் போல இருந்திருக்கும் அது தெரியாமல் நமது நண்பர்கள் சில கூமுட்டைகள் பாரதியும் காந்தியையும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்


காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு போனார் எல்லாருக்கும் தெரியும் யார் கூட்டிட்டு போனது அன்றைக்கு 20 கப்பல் வைத்திருந்த  அவர் தாதா அப்துல்லா & கோ என்ற இந்திய வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிவதற்காக அங்கு சென்றார்.

இந்த நிறுவனம் தாதா அப்துல்லா ஷேத் என்பவருக்கு சொந்தமானது. அவர் டர்பன் (நட்டால்) பகுதியில் வாழ்ந்த இந்திய முஸ்லிம் வியாபாரி.

ஒரு இந்திய வர்த்தகர் டையப் ஹாஜி கான் என்பவருடன் ஏற்பட்ட சிவில் வழக்கில் சட்ட உதவி வழங்குவதற்காக, காந்தி அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்


20 ஆண்டுகள் பணி செய்தார் கூட இருந்தவங்க எல்லாம் தமிழர், தில்லையாடி வள்ளியம்மை கதையெல்லாம் எல்லாருக்கும் தெரியும் மகாத்மா காந்தி என்னைய விட நல்லா தமிழ் பேசுவார், 

வ உ சிதம்பரம் பிள்ளை நல்லா தொழில் செஞ்ச வக்கீல் ஒரு சின்ன பிரச்சனை  நான் கப்பல் ஓட்ட போறேன் அப்படின்னு ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆரம்பிச்சு ஒரு பங்கு 25 ரூபா எல்லாம் சரி இவரால 25000 ரூபா கூட தேத்த முடியல கப்பலோடதான் தூத்துக்குடி போவேன் இல்லையென்றால் கடலில் விழுந்து சாவேன் என்று சொன்னார் அப்ப இவருக்கு உதவி செஞ்சது பக்கீர் முகமது . . சிதம்பரம் பிள்ளை  1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று 'சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை' (SSNCO) தொடங்கிய போது, அதற்குப் பெரும் நிதி உதவி செய்தவர்களில் ஹாஜி முகமது பக்கீர் ராவுத்தர் (Haji Mohammed Rowther Sait)   பத்து லட்ச ரூபாய்க்கு அவர் பங்குகளை வாங்கி கப்பல் வாங்க காரணமாக இருந்தவர் இந்த செய்தி எல்லாம் ஆங்கிலேயர் காலத்திலும் அதன் பிறகு பார்ப்பனர்களாலும் மறைக்கப்பட்டது, 

*****************

ஆட்சி மாற்றத்தின் சின்னம்: இந்தியா சுதந்திரம் அடைந்ததும், புதிய அரசாங்கத்திற்கு யார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது, எப்படி அதிகாரப் பரிமாற்றம் நடப்பது என்ற குழப்பம் இருந்தது

அப்போது, ராஜாஜி, தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது ராஜகுரு செங்கோல் கொடுப்பார், அதுவே அதிகார மாற்றத்தின் அடையாளம். அதுபோல, சுதந்திர இந்தியாவுக்கு ஒரு சின்னம் வேண்டும் என்று கூறினார்.

காந்தியின் ஒப்புதல்: ராஜாஜியின் கருத்தை காந்தி ஏற்றுக்கொண்டார்.

ஆதீனத்தின் பங்கு: தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி, சோழர் காலத்தில் இருந்து வந்த வழக்கம் இது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 20-வது மடாதிபதி, ஸ்ரீ--ஸ்ரீ குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், செங்கோலை வடிவமைத்து, அதன் புனிதத்தன்மையை உணர்த்தி, அதை நேருவிடம் வழங்கினார்

முஸ்லிம்களிடமிருந்து ஆட்சி மாறியது என்ற கூற்றுக்கு மறுப்பு: செங்கோல் வழங்கியது, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்திய மக்களிடம் அதிகாரம் கைமாறியதைக் குறிக்கிறது, இஸ்லாமியர்களிடமிருந்து கைமாறியதைக் குறிக்கவில்லைபுகைப்படம் மற்றும் சான்றுகள்: இந்த நிகழ்வின் புகைப்படங்கள் உள்ளன. லார்ட் மவுண்ட் பேட்டன், நேரு மற்றும் ஆதீனப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

வரலாற்றுப் பெருமை:இந்த செங்கோல், சோழ மன்னர்களின் அதிகாரப் பாரம்பரியத்தையும், தமிழ்நாட்டின் ஆன்மிகப் பெருமையையும், சுதந்திர இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தையும் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. 


இந்தியாவுக்கு வந்தவுடன் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயரை எதிர்த்து அகிம்சை முறையில் போராடி வென்றவுடன் அதே பாணியில் இங்கேயும் போராட்டம் செய்ய வேண்டும் அழைப்பெல்லாம் சரி காந்தி உடனே ஒத்துக்கல, நான் இந்தியாவுல பயணம் பண்ண வேண்டிய இடம் இருக்கு என்று ரயிலில் அன்று முதல் வகுப்பு இரண்டாம் வகுப்புகள் இல்லை மூன்றாம் தர நெஞ்சில் உட்கார்ந்து இந்தியாவை மூன்று முறை குறுக்கும் நெடுக்குமாக அளந்து பார்த்துவிட்டு தலைவர் பதவியைஒத்துக் கொண்டார் ,  

https://www.bbc.com/tamil/india-58645087 

உத்தமர் காந்தி எந்த அதிகார மையங்களையும் நோக்கிச் சென்றதில்லை. நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் பார்க்காத அண்ணல் காந்தி, சென்னையில் செயல்பட்ட சென்னை ராஜதாணியில் மேலவையில் வந்து விவாதங்களை கவனித்தது முக்கிய நிகழ்வாகும்.

நாட்டின் விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் நடத்திய இந்த மேலவையில் சில்வர் டங், வி.எஸ்.சாஸ்திரி போன்றவர்கள் மேலவையில் உரையாற்றியதை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்து கேட்டுச் சென்றார். அப்படிப்பட்ட இந்த மேலவை தமிழகத்தில் எம்.ஜி.ஆர் காலத்தில் ஒழிக்கப்பட்டது,  

1986-ல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியபோது முதலமைச்சர் எம்ஜிஆருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தேர்தலில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. அப்போதைய தமிழக சட்டமன்ற மேலவையில் மொத்தம் இருந்த 63 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் நிரப்பப்படும் என்பதால் திமுக-வின் வெற்றியால் எம்ஜிஆருக்கு நெருக்கடி ஏற்பட்டது. 
அந்த சமயத்தில் மேலவை உறுப்பினர்கள் நால்வரின் பதவிக்காலம் முடிந்தது. காலியான 4 இடங்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றநிலையில் திமுக-வும் சுயேச்சைகளும் தலா இரு இடங்களில் வென்றதால் எம்ஜிஆருக்கு மேலும் கவலை ஏற்பட்டது. 
 அச்சூழலில் ஆளுநர் நியமிக்கும் நேரடி உறுப்பினர் பதவிக்கு நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா-(இயற்பெயர் ஏ. பி. சாந்திவை எம்ஜிஆர் அரசு பரிந்துரைத்தது. ஆனால் கடன் பிரச்னையால் திவால் நோட்டீஸ் தந்தவர்,
https://tamil.filmibeat.com/news/cheyyar-balu-shared-shock-information-about-vennira-aadai-nirmala-114799.html 

அந்த காலத்தில், நமக்குத் தெரிந்த டிராபிக் ராமசாமி போல, எதற்கெடுத்தாலும் வழக்கு போடும் நபராக சைதாப்பேட்டை கோபால்சாமி இருந்தார். அவர் நடிகை வெண்ணிலாடை நிர்மலாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் பெற்றார்.

இந்த விவகாரம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் குரானா கடிதம் எழுதினார்.

10 லட்சம் ரூபாய் கடன் பாக்கியைச் செலுத்தினால் மட்டுமே எம்எல்சி பதவி தொடர முடியும் என்று நீதிமன்றம் கூறியது. அதன்படி வெண்ணிலாடை நிர்மலா அந்த தொகையைச் செலுத்தினார். ஆனால், கடனில் தத்தளித்த ஒருவர் ஒரே நாளில் 10 லட்சம் ரூபாயை எப்படி செலுத்தினார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து நிர்மலா தனது எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின் மேலவையை கலைக்க அதிமுக அரசு முடிவு செய்தது. 14.5.1986 அன்று சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நான் உறுப்பினராக இருப்பதாலேயே மேலவை கலைக்கப்படுகிறதென்றால், நான் ராஜினாமா செய்யத் தயார்என்று கருணாநிதி கூறினார். மேலவையை கலைக்க வேண்டாம் என்று அதன் தலைவர் மாபொசி உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். ஆனால் இவற்றை எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ரௌலட் மசோதா விவகாரத்தில், இரண்டு சட்ட முன்வடிவுகள் இந்திய சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றை சட்டமாக்க வேண்டாம் என்று மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டார்.

இந்த சட்ட முன்வடிவுகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதம் நடந்த நாளில், காந்திஜி பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து விவாதங்களை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த அனுபவம் குறித்து மகாத்மா காந்தி பின்னர் கூறியதை இப்போது கேட்போம். 

இந்திய சட்டசபை கூட்டத்திற்கு எனது வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் போய் இருக்கின்றேன். அது ரெளலட் மசோதாவின் பேரில் அந்த சென்னை ராஜதானி சட்டமன்றத்தில் (மேலவை மட்டுமே இருந்தது)விவாதம் நடந்தபோது தான். அப்போது வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் ஆவேசமாகப் பேசினார். அரசுக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார். வைஸ்ராய் வியப்பும் திகைப்பும் அடைந்த நிலையில் அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தார்."சாஸ்திரியார் மிகுந்த நாவன்மையுடன் பேசிக்கொண்டிருந்த போது வைஸ்ராய் கண்ணிமைக்காமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சில் உண்மையும் உணர்ச்சியும் இருந்தன."

மகாகனம் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார், வைஸ்ராயால் நியமிக்கப்பட்ட உறுப்பினராய் இருந்தும் தயவு தாட்சண்யம் காட்டாமல் இந்திய அரசினை எதிர்த்து சட்டசபையில் முழக்கம் செய்தார். அவரது பேச்சைக் கேட்க ஒரே நேரத்தில் காந்திஜியும், வைஸ்ராயும் இந்திய சட்டசபையில் இருந்தார்கள்.

இப்படிப்பட்ட 1908 ஆம் ஆண்டு குற்றவியல் (திருத்தச்) சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனும் தீர்மானத்தினை இன்னொரு புதிய சட்ட முன்வடிவின் மூலம் அறிமுகப்படுத்திய டி.டி. கிருஷ்ணாமாச்சாரி மேலும் கூறுகையில், தனிநபர் சுதந்திரத்தையும், உரிமையையும் பறிப்பதாக உள்ளதான இச்சட்டம் தொடர்ந்து அமலில் இருப்பதனை எதிர்த்தார். இந்நாட்டு மக்கள், வெளிநாட்டு, ஏகாதிபத்தியத்தினால் கொடுமைபடுத்தப் படுவதன் காரணமாக உரிமைக்குரலை எழுப்ப

வேண்டும் என குரல்கள எழுந்தன.


காந்தி இந்தியாவில் ரயிலில் பயணம் செய்தார் அப்போது அவர் தெரிந்து கொண்டது மூன்று நிறுத்தங்கள் அதாவது ரயில்வே ஸ்டேஷன் 3 ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் தான் ஜாதி இருக்கு ,மூன்றாவது ரயில்வே ஸ்டேஷன்ல ஏறவன் எந்த ஊர் என்று கேட்பான் இவனுக்கு அவன் சொல்ற ஊர் தெரியாது அதனால தான் காந்தி ஜாதி என்பது மூன்று ரயில் நிலையங்களுக்கு இடையே தான் இருக்கிறது இதை மாற்ற வேண்டியது , எந்த வசதியும் இல்லாதவர்கள் இடம்பெற வேண்டியதை சொல்லாமல் சொன்னார்,

 ஆனால் பஞ்சம் வந்தபோது கன்னியாகுமரியில் இருந்து மும்பை போனவர்களும் சரி கோவை போனவர்களும் சரி அங்கேயும் ஒரு தலித் சேரி ஆரம்பித்தார்கள் அங்க தான் காந்திக்கும் அம்பேத்கருக்குமான பிணக்கு காந்தி என்ன சொல்றாருன்னா ஜாதி உங்க மூளைக்குள் இருக்கு   அதை எடுத்து வெளியே போடுங்க அம்பேத்கர் அதை ஒத்துக்கல வட்டமேசை  மாநாடு அந்த கலாச்சாரம் எல்லாருக்கும் தெரியும் காந்தியை அம்பேத்கர் புரிந்து கொள்ளாமல் போன இடம் இதுதான்,

************
காந்தி தென்னாபிரிக்காவில் இருந்தபோது அமெரிக்க அரசியல் எல்லாம் உள் வாங்கி இருக்கிறார் அதனால் தான் இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை உழைக்கும் மக்களையும் உள்ளடக்கிய போராட்டமாக மாற்றினார் அவருக்கு தெரியும் ஆங்கிலேயர் இந்திய மக்களை வைத்து நம்மை அடக்கி விடுவார்கள் துப்பாக்கி முனையில் அதனாலதான் அகிம்சை வழியை அவர் பின்பற்றினார் சவுரி சவுரா போன்ற இடங்களில் நடந்த வன்முறையை அவர் ஆதரிக்கவில்லை, காரணம் அவர் பின்னால் திரண்டது சாமானிய மக்கள் காங்கிரஸ் கட்சியில் காமராசர் போன்றவர்கள் தலைவர் ஆனதற்கு காந்தியின் அந்த அரசியல் தான் காரணம் வெளியில் தெரியாத ஒரு ஒப்பந்தம் இருந்தது காமராஜர் போன்ற படிப்பறிவு இல்லாதவர்களை ஜெயிலில் அடைத்த போதும் அவர்களுக்கு ஆங்கிலம் போதிக்கப்பட்டது காமராசர் தெளிவாக ஆங்கிலம் பேசுவார் இதை எனக்குச் சொன்னது ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்த வலமாவூர் கிருஷ்ணதேவர்.

**************** 

மகாத்மா காந்தி நடத்தி வைத்த மூன்று காதல் திருமணங்கள்

காந்தி  நடத்தி வைத்த முதல்  திருமணம் 

1933ஆம் ஆண்டு ஜூன் மாதம்

அவர் குடும்பத்துக்குள்  அவர்  மகனை ராஜாஜி வீட்டில் தங்க   வைத்தது அங்கே நெருப்பு பத்திக்கிச்சு 

காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி.
அவர் ஆப்பிரிக்காவில் வேலை செய்தபோது பிறந்தவர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, பல நாட்கள் சிறையில் இருந்தார்.

பத்திரிகையாளராக வாழ வேண்டும் என்பது அவரது ஆசை.
அதனால் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றினார்.

1918ஆம் ஆண்டு, காந்தி தமிழகத்தில் தொடங்கிய தென்னிந்திய இந்தி பிரச்சார சபையின் முதல் ஆசிரியராகவும் போதகராகவும் தேவதாஸ் காந்தி சென்னைக்கு அனுப்பப்பட்டார்.
அப்போது அவர் ராஜாஜியின் வீட்டில் தங்கினார்.

அந்த காலத்தில், இளம் வயதான ராஜாஜியின் மகள் லட்சுமி, தேவதாஸ் காந்தியை காதலித்தார்.
மகன் காதல் திருமணம் செய்து மாமனாரே இந்தி கத்துக்க முடியாது போடா என்று சொன்னதாக மாபோசி அவர் வாழ்க்கை வரலாறு எழுதி வைத்திருக்கிறார்

ஆனாலும், ராஜாஜியின் குடும்பம் உடனடியாக திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை.பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

1933ஆம் ஆண்டு ஜூன் மாதம், பூனாவில் பெரிய சடங்குகளுடன் திருமணம் நடந்தது. அதற்கு முன், தேவதாஸ் காந்திக்குசுத்திஎனப்படும் சுத்திகரிப்பு சடங்கு செய்யப்பட்டது.
அவருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு, புரோகிதர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதினர்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மகாத்மா காந்தி படுத்திருந்த நிலையிலேயே அந்த திருமணத்தை ஆசீர்வதித்தார்.

ஆனால்இவர்களது காதல் தங்கள் நட்புறவையும்போராட்ட  களத்தையும்  பாதித்துவிடுமோ என்ற அச்சம் காந்திக்கு இருத்ததுஆகினும்தங்கள்காதலில் உறுதியாக இருந்தனர் தேவதாசும்லட்சுமியம்அச்சமயம்தேவதாஸ் வயது 28 மற்றும்லட்சுமியின் வயது 15.


லட்சுமியின் வயதை சுட்டிக்காட்டி காந்தி மற்றும் ராஜாஜிநீங்கள்  இருவரும் 5 ஆண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல்பேசிக் கொள்ளாமல்  இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தனர்இதுஇவர்கள்  காதலை   இவர்களுக்கு ராஜ்மோகன் காந்திகோபால் கிருஷ்ணா காந்திராமச்சந்திர காந்திதாரா காந்தி என நான்கு   குழந்தைகள் பிறந்தனர்ராஜ்மோகன் காந்தி ஒரு வாழ்க்கை   வரலாற்றாசிரியராக விளங்கினார்ராமச்சந்திர காந்தி தத்துவவாதியாக   திகழ்ந்தார்இவர், The Availability of Religious Ideas (1976), Sita's Kitchen, a Testimony of Faith and Inquiry (1992), Svaraj: A Journey with Tyeb Mehta's Shantiniketan Triptych (2003), Muniya's Light (2005) போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

அடுத்த மகன் கோபால கிருஷ்ணா தேவதாஸ் காந்தி ஓர் ஐஏஎஸ் அதிகாரி   ஆவார்இவர் இந்திய ஜனாதிபதியின் செயலாளராகவும்பீகார் மற்றும்   மேற்குவங்காள மாநில கவர்னராகவும் பணியாற்றி இருக்கிறார். 2017ம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கையா நாயுடுவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

******************

காந்தியார் நடத்தி வைத்த இரண்டாவது  திருமணம்

1940 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் 

தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரத் தொழில்அதிபர் டிவிஎஸ்           ஐயங்கார் உடைய மகள் இவர் காந்திகிராமத்தில் காந்தியாருக்கு உதவியாக இருந்தார் சௌந்தரம் அம்மா, மிகப்பெரிய சேவையாளர் இவருக்கு 14 வயதில் சௌந்தரராஜன் என்கிற மருத்துவரை திருமணம் செய்து வைத்தார்கள் இப்போது வந்த கொரோனா போல அப்போது பிளேக் நோய் பரவியது இதில் அவர் பலியானார்,

ஆனால் அவர் இறக்கும் முன்பு நீ படித்து மருத்துவராகி மறுமணம் செய்து கொள்ள வேண்டும் அவரும் மருத்துவராக இருக்க வேண்டும் என்னை போன்ற சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், காந்தி அவர்களுக்கு உதவி செய்தார் அந்த அம்மையார் அதன் பிறகு டெல்லியில் லேடி ஹார்ட்டிங் மெடிக்கல் காலேஜில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாமல் மருத்துவராக தங்கப்பதக்கம் வென்றார், மருத்துவர் சுசீலா நய்யார் அறிமுகத்தோடு மகப்பேறு மருத்துவம் குழந்தை மருத்துவம் போன்றவற்றை படித்து வெளியேறி வந்தவர்



1936 ஆம் ஆண்டில் தனது 32 வது வயதில் மருத்துவப் படிப்பை முடித்து காந்தி சேவா மையத்தில் சேவை செய்து கொண்டிருந்தார் இந்த நிலையில் அவர் சார்ந்த பிராமண வகுப்பு ஆண்கள் யாரும் அவரை மறுமணம் செய்ய முன்வராததால் ,

கேரளாவைச் சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஜி ராமச்சந்திரன் என்னும் மருத்துவரை இவருக்கும் பிடித்துப் போனதால் இவர்கள் காதலுக்கு காந்தி பச்சைக்கொடி காட்டினார்,

மிக எளிய முறையில் ஒரு தொண்ணையில் பாயாசம்  20 பேருக்கு எளிய உணவு தமிழகத்தின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண்மணிக்கு காந்தி ஆசிரமத்தில் காந்தியார் முன்னிலையில் நடந்த திருமணம் வெளியில் தெரியாது தெரியாமல் செய்து கொண்டார்கள் அன்றைக்கு இருந்த பத்திரிகை ஆசிரியர்கள்,



ஏனென்றால் அன்றைக்கு இருந்த பத்திரிகைகள் அனைத்தும் பார்ப்பனர்கள் நடத்தியது ஏன் பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் வேண்டாம் என்றார்கள் என்றால் சமஸ்கிருத மந்திரத்தில் இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி இல்லை அதற்கான மந்திரங்கள் எழுதப்படவில்லை,

டிவிஎஸ் சுந்தரம் ஐயங்காரும் இந்த காதலை ஆரம்பத்தில் எதிர்த்தார் காந்தியார் வற்புறுத்தலில் ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் தான் இந்த திருமணம் நடந்தேறியது

இவர் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தில் துணை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கிக் கௌரவித்தது

1940 ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் தன் மனைவி நூற்ற கைத்தறி புடவை தான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி அந்த கைத்தறி புடவை அணிந்து எளிய முறையில் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் காந்தி 1967 ஆம் ஆண்டு வீசிய திராவிட புயலில் திண்டுக்கல் தொகுதியில் தோல்வி கண்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்

காந்தியார் நடத்தி வைத்த மூன்றாவது   திருமணம்

மார்ச் 26,1942  

நேருவின் மகள் இந்திரா காந்திக்கும் அவரை காதலித்த பெரோஸ்   கான் என்கிற பார்சி இனத்தவர் பின்னாலில் இவர் காங்கிரஸ் எம்பி ஆக இருந்து நேரு மந்திரி சபையில் நடந்த ஊழல்களை   வெளிக்கொண்டு வந்தவர்,

நேருவின் மனைவிக்கு காச நோய் சிகிச்சைக்காக உதவியாக    வந்தவர்தான் பெரோஸ் கான் இவர் மீது இந்திரா காந்திக்கு காதல்   வந்தது நேரு அதை எதிர்த்தார்,

ஆனால் காந்தியார் ஆதரித்தார் பெரோஸ் கான் என்கிற பார்சி   மகாத்மா காந்தி மீது கொண்ட ஈடுபாட்டால் அவருடன் ஆயிரம்   பேரை சேர்த்துக்கொண்டு பேருக்கு பின்னால் இருந்த சாதி பட்டத்தை துறந்து காந்தி என்று போட்டுக் கொண்டார்கள்,


அப்படித்தான் பெரோஸ்(கான் காந்தி)யாக மாறினார் இன்றும் அவர் குடும்பத்திற்கு எல்லோருக்கும் காந்தி சேர்ந்தது அப்படித்தான்   இந்தத் திருமணம் எளிய முறையில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு வேதம் ஓதப்பட்டது,


ஆனால் ஆடம்பரம் இல்லாத எளிய திருமணமாக காந்தியார் நடத்தி வைத்தார் நேரு குடும்பத்தில் விஜயலட்சுமி பண்டிட் அவங்களும்   மூன்று ஜாதியில அடுத்தடுத்த தலைமுறை திருமணம் செய்து   கொண்டது ஒருத்தர் சிங்கு அவங்க எல்லாம் காந்தி பேர் போடல 

https://www.bbc.com/news/world-asia-india-60013807 


நாடு சுதந்திரம் பெற்றதும் காந்தி பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 11 லட்சம்  பணத்தை வற்புறுத்தி வாங்கி கொடுத்தார் கல்கத்தாவில் இஸ்லாமியர் தாக்கப்பட்ட போது நவகாலியில் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார், பார்ப்பனர்கள் மீது தாக்குதல் தொடுத்தார் நீங்க பூஜை தானே செய்யணும், ஏன் இன்ஜினியராக டாக்டராக ஆக வேண்டும் என்று நேரடியாக கேள்வி கேட்டார் அதை பொறுக்க முடியாமல் தான் ஆர்எஸ்எஸ் நாதுராம் கோட்சே தலைமையில் ஐந்து முறை முயற்சி செய்து அவரை கொன்றார்கள்        அவரைக் கொல்வதற்கு முன் நாதுராம் கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டார் அது மட்டுமல்ல சுன்னத்து பண்ணி கொண்டார் 


முதல் நிகழ்வு ஜூன் 25, 1934

அன்றைய தினம் கஸ்தூரிபாயோடு பூனே கார்ப்பரேஷன் பொது அரங்கிற்கு உரையாற்ற புறப்படுகிறார். காரில் செல்லும்போது, ரயில்வே லெவல் கிராஸ்சிங்கில் வண்டிகள் நிற்கின்றன. அவர் பயணம் செய்த காரைப்போலவே முன்னே சென்ற கார், ரயில்வே கேட்டை தாண்டி அந்தப்பக்கம் சென்றது. தாமதமாக வந்ததால், காந்தியின் கார் இந்தப்பக்கம் நின்றது. காந்தி பயணம் செய்த கார் என தவறுதாக எண்ணி, அந்தப்பக்கம் சென்ற கார் மீது கையெறி குண்டு போட்டு வெடித்து சிதறியது. பூனே கார்ப்பரேஷன் மூத்த அதிகாரி மற்றும் பல போலீஸார்கள் பலத்த காயமுற்றனர். இதைப் பற்றி பின்னர் விசாரணை நடத்தியதில் தெரியவந்ததுகொலையாளிகள் இந்துத்துவா தீவிரவாதிகள்.

இரண்டாம் நிகழ்வு ஜூலை, 1944

காந்தி மலேரியாவால் நோய் வாய்ப்பட்டிருந்தார். சிகிச்சை மற்றும் ஒய்வுக்காக பூனே அருகில் இருக்கும் பஞ்சகணி என்ற இடத்திற்கு புறப்பட தயாராக இருந்தார். இருபது நபர்கள் சட்டென அவர் வீட்டுக்கு எதிரில் குழுமி, காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். அதில் ஒருவன் கத்தியுடன் கொல்ல காந்தியை நெருங்கும்போது, உடன் இருந்தவர்கள் தடுத்ததால், காந்தி பிழைத்தார். கத்தியோடு வந்தவனை தன்னிடம் இருக்குமாறு காந்தி மன்றாடினார்..காந்திக்கு தன் மேல் ஏன் அவனுக்கு வெறுப்பு? என்பதை தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவனை நல்வழிப்படுத்த முடியும் என நம்பினார். ஆனால், அந்த இளைஞனோ,அவரை சட்டை செய்யாமல், அவரை உதாசீதனப்படுத்தினான். அன்றைய தினம் கும்பலாக காந்திக்கு எதிராக கோஷமிட்டவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகள். கத்தியோடு கொல்ல முயன்ற இளைஞனின் பெயர் நாதுராம் கோட்சே.

மூன்றாம் நிகழ்வு செப்டம்பர் 1944  

முகமது அலி ஜின்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்த காந்தி தயாராகுகிறார். சேவாகிராம் ஆசிரமத்திலிருந்து காந்தி புறம்படும்போது, ஒரு கும்பல் அவரை போகவிடாமல் தடுத்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு காந்தி போகக்கூடாது என்பதில் அந்தக் கும்பல் முனைப்பு காட்டியது. அந்தக்கும்பலின் தலைவன் காந்தியை நெருங்கியபோது, ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் தடுத்து அவனை சோதனையிட்டபோது அவனிடம் இருந்தது குறுங்கத்தி. இந்துமகா சபையை சேர்ந்தவர்கள் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். குறுங்கத்தியை வைத்திருந்த இளைஞனின் பெயர் நாதுராம் கோட்சே.

நான்காம் நிகழ்வு ஜூன் 1946

பூனே அருகில் ரயிலில் பயணித்தபோது, நெருல்,கஜ்ரட் ரயில்வே நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்துக்கு அடியில் குண்டு வைத்து சிதறடிக்கபட்டது. அவர் பயணம் செய்த கோச் அதிருஷ்டவசமாக தப்பியது. அவருக்கு முந்தைய கோச்சுகள் பலத்த சேதமுற்றன. விசாரணையில் இந்துமகாசபை இளைஞர்கள் இதில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்தது.

அடுத்த நாள் பிராத்தனைக் கூட்டத்தில் இதைப்பற்றி பேசும் போது, ஏன் தன் மேல் இவ்வளவு கொலை வெறி தாக்குதல்கள் நடக்கிறது எனப்புரியவில்லை என்றும், தப்பித்தேன் என சிரித்துக்கொண்டேக்கூறி, கடவுளின் கருணையால் 125 வயது வரை வாழ்வேன் என பேசியுள்ளார்.

ஐந்தாம் நிகழ்வு ஜனவரி 20 1948

பிர்லா ஹவுஸில் ஏழு பேர் வருகிறார்கள் அவர்களின் பெயர்மதன்லால், நாரயண் அப்தே, விஷ்ணு கர்கரே, திகம்பர், கோபால், சங்கர் மற்றும் நாதுராம் கோட்சே. அனைவரும் பிராத்தனைக் கூட்டத்தில் நிற்கிறார்கள், மதன்லால், புகைப்படக்காரராக தன்னை மாறுவேடம் பூண்டு காந்தி அமரும் மேடைக்கு பின்புறம் செல்கிறார். சுவரில் வெடிகுண்டை வைத்தாலும் அது சரிவர வெடிக்கவில்லை. அதற்குள் அனைவரும் தப்பிவிட்டனர். ஆனால் மதன்லால் பிடிபட்டான், விசாரணையில் எழுவரின் சதிதிட்டம் தெரியவந்தது.

ஒன்பது நாட்கள் கழித்து ஜனவரி 29ம் தேதி நாதுராம் கோட்சே, நாராயண் அப்தே டில்லி பிர்லா ஹவுஸுக்கு வருகிறார்கள் கையில் பெரெட்டா (Beretta Gun) துப்பாக்கி, 11 ரவை குண்டுகளுடன் காத்திருக்கிறார்கள்..

ஆறாம் நிகழ்வு ஜனவரி 30 1948

ஏகப்பட்ட விருந்தினர்கள் அவரை காண்பதற்கு காத்திருக்கிறார்கள். காந்தி மிகப்பெரிய தீர்க்கதரிசி….அன்று நடந்த இரண்டு உரையாடல்களில் தன் முடிவை அவர் கணித்துள்ளார்.

அன்று காலை முதல், கத்தியவார் தலைவர்கள் அவரை பார்க்க காத்திருக்கிறார்கள்.அன்று காந்தி பல தலைவர்களை ஒருவர்பின் ஒருவராக சந்தித்ததால், பலர் கால வரையின்றி காத்திருந்தனர். அவர் பேத்தி மனுபாய்காந்தி, அவருக்கு கத்தியவார் தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என நினைவூட்டுகிறார். அதற்கு காந்தி, “ நான் உயிரோடிருந்தால் இன்று மாலை, பிராத்தனைக் கூட்டத்திற்கு பிறகு சந்திக்கலாம்என்கிறார்.

அன்று மதியம் 2 மணிக்கு, அமெரிக்காவின் LIFE இதழின் பெயர் பெற்ற புகைப்பட நிபுணர் மார்க்ரெட் ஒயிட் உடன் காந்தியின் நேர்காணல் நடந்தது. மார்க்ரெட், காந்தியிடம்நீங்கள் 125 ஆண்டுகள் வாழ ஆசைப்படுவதாக சொல்லியுள்ளீர்கள். எதன் அடிப்படியில் இதை கூறினீர்கள்? எதற்காக இவ்வளவு ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு காந்திஅதை நான் சொன்னது உண்மைதான், ஆனால் இப்போது எனக்கு விருப்பமில்லை. இப்போது நடக்கும் சகிப்புதன்மையற்ற வன்முறைகள் என்னை நிம்மதி இழக்க செய்கின்றன. நான் விரைவில் விடைபெறுவதையே விரும்புகிறேன்என்றார்.

பட்டேலுடன் நடந்த உரையாடல் நீடித்து, பத்து நிமிடம் தாமதமாக பிராத்தனைக் கூட்டத்திற்கு காந்தி வருகிறார். மாலை 5.17 மணிக்கு, இந்துத்வா தீவிரவாதி நாதுராம் கோட்சே அவர் நெஞ்சை நோக்கி குறிபார்த்து மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான்..

காந்தி வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர் அல்லவா..தன் மரணத்தின் மூலம் இந்துத்வா அடிப்படைவாதியின் விருப்பத்தையும் பூர்த்தி செய்தார்.



தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி 1910 இல் நிறுவிய ஆசிரமம் தான் 'டால்ஸ்டாய் பண்ணை'. டிரான்ஸ்வால் மாகாணத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிரான அவரது சத்தியாக்கிரக இயக்கத்தின் தலைமையகமாக இது செயல்பட்டது. 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன. இங்கு வள்ளியம்மையும் சில காலம் தனது தாயுடன் வசித்துள்ளார்.
"இந்தப் பண்ணை அமைதியான இடமாக இருந்தது, அங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ்ந்தனர். இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் வயதுக்கு ஏற்ற எந்த வேலையையும் செய்தனர்" என டால்ஸ்டாய் பண்ணை குறித்து 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' நூலில் வள்ளியம்மை விவரிக்கிறார்.

காந்தியின் மகன்ஹரிலால் காந்தி ஒருகட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்தார்.

1936இல் அப்துல்லா காந்தி என்ற பெயருடன் முஸ்லீம் மதத்தைத் தழுவினார். சில ஆண்டுகளில் மீண்டும் இந்துவானார். காந்தி அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க இயக்கம் நடத்திய நிலையில் இவர் அந்நியப் பொருள்களை விற்பனை செய்தார். விடுதலைப் போராட்டத்தைவிட ஹரிலால் காந்தியைச் சமாளிப்பது கூடுதல் பிரச்சினையாக இருந்ததை காந்தி தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார்ஹரிலாலின் மகள் மனுபென் காந்தி 1943 முதல் காந்தியின் உதவியாளராக இருந்தார். காந்தி என் தாய் (Bapu My Mother) எனும் நூலை எழுதினார்

ஜூன் 18, 1948இல் பம்பாயில் உள்ள முனிசிபல் மருத்துவமனையில் 55 வயதில் காசநோயால் இறந்தார். பம்பாய் காமாதிபுராவில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் காந்தியின் மகன் என்று அங்கு யாரிடமும் கூறவில்லை. இறந்தபிறகு அவரது பையில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது


https://www.youtube.com/watch?v=kUuEE36tsbo






இரா ,கணேசன் முதுகலை காந்திய சிந்தனைகள்






Comments

Popular posts from this blog

Language, Communication, and the Story of Migration

தமிழ் உலகின் செம்மொழி Lion Raja Ganesan