கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamilnadu-1

 


73 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார்.

மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.






18 ஆண்டு காலமும் கஜினிமுகமது போல் யுத்தம் நடத்தியதால் தான் அரியணையில் அண்ணாவால் அமர முடிந்தது.

1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பபட்டது. அதற்கு மறுநாள் திருச்சி நீதிமன்றத்தில் அண்ணாவுக்கு ஆறுமாதம் சிறை என்று தீர்ப்பு வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அவரால் எழுதப்பட்டு 15 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகிவிட்ட #ஆரிய_மாயை என்ற புகழ் பெற்ற புத்தகம் வகுப்பு வேறுபாட்டை விதைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது.

https://www.scribd.com/document/467472480/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%BE-pdf

புத்தகத்தை எழுதிய அண்ணாவுக்கும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிட பண்ணை

#கண்ணப்பனுக்கும் 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை கட்ட இவர்கள் இருவரும் மறுத்ததால் நான்கு மாதம் சிறை தணடனையை ஏற்றார்கள்.

இதை தொடர்ந்து திமுக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது, நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது

1957 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் 16லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்றது திமுக.ஆகிய 15 பேர் சட்டமன்றத்திற்குள் போனார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் திமுக முதன் முதலாக உள்ளே சென்று உட்கார்ந்த நாள் 1957 ஏப்ரல் 29. நாங்கள் இந்த சபைக்கு வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்கு நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம் என்று 1957 ஜூலை 4 ம் நாள் நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தில் அண்ணா பேசினார்.!

1,அண்ணா , 2,கலைஞர், 3,அன்பழகன்,4,சத்தியவானி முத்து,

5,ஏ.வி.பி ஆசைத்தம்பி,6,கடம்பூர் அண்ணாமலை, 7,ஆனந்தன்,

8,இருசப்பன் , 9,.கோவிந்த சாமி, 10,..சண்முகம், 11,பி எஸ் சந்தானம்

12.எம்.பி.சாரதி, 13,எம் பி சுப்ரமணியம், 14,எம்.செல்வராஜ், 15,ஜி.நடராஜன்

1962  சட்டமன்றத் தேர்தல்
அறிஞர் அண்ணா, அன்பழகன், ஏவிபி ஆசைத்தம்பி  போன்ற 14 பேர் அடுத்த 1962 தேர்தலில் ,காமராசர் நிறுத்திய பணக்காரர்கள் மூலம் பணமும் சில வாக்குறுதிகளும் சத்தியங்களும் பெறப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்  ஒருவருடையத் தலை மட்டும் தப்பியதுஅது நம்ம தல ஆனால் அவர் தனியாகப் போகவில்லைஉடன் 49 பேர்அதாவது 15 பேர் இப்போது 50 பேராக ஆகிவிட்டது 

தான் சந்தித்த இரண்டாவது பொதுத் தேர்தலியே எதிர்கட்சியாக உயர்ந்துவிட்டது திமுக.


1967 தேத்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது அண்ணா இரண்டாண்டுகள் ஆட்சிசெய்தார் அதன் பின் கலைஞர் கொண்டுவந்த செயல்திட்டங்கள்  

1967-1976 வரையில் திமுகவின் சாதனைகள் கீழ்கண்டவை:

அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அவரது வழிநின்று கழக ஆட்சி கலைஞர் தலைமையில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற முழக்கத்துடன் ஆற்றிய சாதனைகள் ஏராளம்.

குடிசை மாற்று வாரியம் ,ஆதிதிராவிடர்களுக்கு மக்களுக்கு இலவச வீடு கட்டி வழங்கும் திட்டம்


நகர்ப்புற கிராமப்புற ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மூலம் 

மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டம்

தொழுநோய் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்து அவர்களை வாழவைக்கும் திட்டம்

ஊனமுற்றோருக்கு உதவி அளித்து தொழில் பயிற்சி அளிக்கும் திட்டம்

சென்னை போன்ற நகரங்களில் தைரியத்தைக் கொடுத்து அந்த தொழிலாளர்களுக்கு இலவச சைக்கிள் #ரிக்ஷா வழங்கும் திட்டம்.


பள்ளி சிறுவர் சிறுமியருக்கு #காது கேட்கும் கருவிகள் வழங்கும் திட்டம்

ஆதரவற்ற சிறார்க்கு ஆலயங்களின் உதவியுடன் #கருணை இல்லங்கள் அமைத்து அவர்களுக்கு #கல்வி வழங்கும் திட்டம்

விதவைகள் மறுவாழ்வு திட்டம் கலப்பு மணங்களை ஊக்கப்படுத்தும் திட்டம்

இவைகள் மட்டுமேயல்லாமல்

விவசாய தொழிலாளர்களுக்கு

கூலி நிர்ணய சட்டம்

அவர்கள் குடியிருக்கும் மனைகளை அவர்களுக்கே #சொந்தமாக்கும் சட்டம்

தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு ஒப்படைப்பு செய்யும் சட்டம்



அரசுக்கு சொந்தமான நிலத்திலிருந்து #வீட்டுமனை ஒப்படை செய்யும் சட்டம்

பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு சட்டம்

பஸ்களை தேசியமயமாக்கும் சட்டம்

தனியாருக்கு சொந்தமாக இருந்த

மின் நிலையங்களை #நாட்டுடைமையாக்கும் சட்டம்

அனைத்து சாதியினரும் #அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம்



குதிரைப்பந்தய ஒழிப்புச் சட்டம்

பரிசு சீட்டு ஒழிப்பு மற்றும்

குடிநீர் வாரியம்

குறிப்பிட்ட காலத்துக்குள் #எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி செய்து கொடுத்தது

கிராமங்களை முக்கிய #சாலைகளை #இணைக்கும் #இணைப்பு சாலை திட்டம்

பல #நீர்தேக்கங்கள் அமைத்தது

புதிதாக #15லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுமாறு பாசன வசதிசெய்தது

அரசு ஊழியர்களை கவனிக்க இரண்டாவது #ஊதிய குழு அமைத்தது

இந்தியாவிலேயே முதன்முதலாக #போலீஸ் கமிஷன் அமைத்து



காவல் துறையினருக்கு #ஊதிய உயர்வு போன்ற பல பரிந்துரைகளை நிறைவேற்றியது

அரசு அலுவலர் ஒருவர் பணியில் இருக்கும் போது இறந்தால், #இறந்தவர் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பாதுகாப்பு நிதி அளித்தது

அரசு ஊழியருக்கு #திருமண கடன் தந்தது

அரசு ஊழியர்களின் பல்லாண்டு கால கோரிக்கையான #ரகசிய குறியீட்டு முறையை ஒழித்தது

#விபத்தில் உயிர் நீத்த

#விவசாய தொழிலாளி

#மரம் ஏறும் தொழிலாளி

#மீனவர் குடும்பத்துக்கு

உடனடி நிதி உதவி அளித்தது

பெண் போலீஸ் படையை தொடங்கியது

அண்ணா பிறந்த நாளன்று போலீசாருக்கு #விருது வழங்கும் நிகழ்ச்சியை உருவாக்கியது

பிற்படுத்தப்பட்டோர் நலன்கள் பற்றி ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு #குழுவை நியமித்து அதன் பரிந்துரைகள் பலவற்றை ஏற்றது

பிற்படுத்தப்பட்டோருக்கு

ஆதிதிராவிடர் நலனுக்கும்

தனித்தனியே துறைகளும் அமைச்சர்களும் என்ற நிலையை ஏற்படுத்தியது

தொழிற்கல்விகள் அதற்கு வசதியாக கல்லூரிகள்

வேலை வாய்ப்பு #இட ஒதுக்கீட்டில்

25% என்பதை 31 என்றும்

ஆதி திராவிடர்கள் 16 என்பதை 18% என்று உயர்த்தியது

பின்னர் பி.யு.சி. வரையில் எல்லா மாணவர்களுக்கும் #இலவசக் கல்வி என்று அறிவித்தது

புன்செய் #நில வரியை ரத்து செய்தது

நூற்றுக்கு ஐந்து ஏக்கர் வரையில் #வரியை விலக்கியது

இந்தியாவிலேயே முன்னோடியாக #மாநிலத் திட்டக்குழு கண்டது



ஆகஸ்ட் 15ல் கோட்டை முகப்பில் கவர்னருக்கு பதிலாக

#முதலமைச்சர் கொடியேற்ற வேண்டும் என்று கோரி அதிலேயே

நாம் வெற்றி கண்டது


முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு,

********************************.

#படித்துதெரிந்துகொள்ளுங்கள். இளம் தலைமுறையினரே..

யார் இந்த MGR?

மறைக்கப்பட்ட உண்மைகள்**

கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள்.

ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்?

இவர் சினிமாவில் நடிகராக உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்?

திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்.


வேடிக்கையா இருக்குமே

ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர்.

ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.

MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.

MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது. அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.

2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்?

மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்

1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?

1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?

1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா.

அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே.

அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை

எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது.

கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன

மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை.

ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.

விளைவு... 1977 ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி.

வழக்கம்போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

மத்திய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை.

இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.

மத்தியஅரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும்

அந்த கூட்டணி வென்றது.

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது.

1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.

அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார்

சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.

1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது.

மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.

இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது

இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள்

சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.

MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது

தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு

ஏற்படுத்தப்பட்டது.

********************************

இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது.

சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது.

இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.

லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன.

1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.

எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது

இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன

காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.

விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.

1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்

1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது

எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கோமல் சுவாமிநாதனின்தண்ணீர் தண்ணீர்நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும்பு நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது.

இதைத் தழுவி எடுக்கப்பட்ட

K. பாலசந்தரின்தண்ணீர் தண்ணீர்திரைப்படத்தை தடைசெய்ய்யக்

கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்....

திட்டங்கள் கூட தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும் சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பதும் உண்மை......

மக்களின் ஆதரவிருந்தும்தண்ணீர் தண்ணீர்ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது....

மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பணீயத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான் இந்த .கோ.இராமச்சந்திரன்.......

அதில் சில ஆதாரங்கள்.......

எரிசாராய ஊழலும் ரே கமிசனும்**

MGR ம் ஈழமும்

எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு

1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அவருக்கு எதிரா புலிகளை ஆதரித்தார்.

2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார்

இல்லாவிடில் பொத்திக்கொண்டு

மௌனமாகத்தான் இருந்திருப்பார்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான்

ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார்.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர்.

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டுக்கொள்ளவில்லை.

1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர்

#தலைவர் #கலைஞர் மட்டும் தான் .#நவீன_தமிழகத்தின் தந்தை

போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும்.

#தண்ணீர்/

குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.



காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர்
இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்



தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டம்


https://www.dinakaran.com/dreamproject_people_southtamilnadu_thamirabarani-karumeniyaru-nambiyaru_connectionproject_complete/ 



. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்
















Comments

Popular posts from this blog

அரசியலில், இலக்கியத்தில், காலம் தோறும் பெண்கள்-1

இன்றைக்கு பிஜேபி செய்கிற வேலைகளை ஆரம்பித்து வைத்த காங்கிரசின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்