கலைஞர் கருணாநிதி சந்தித்த தேர்தல்கள்
- தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்
- பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்
இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் எ.கா. 1957 தேர்தலில் கோவை -2 தொகுதி இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித்தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து பின்வருமாறு உறுப்பினர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டனர்:முழுமையான எண்ணிக்கை அல்ல
மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 372 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
1957 கருணாநிதிக்கு இதுதான் முதல் தேர்தல். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8, 296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்தது திமுக. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராசர் தமிழக முதல்வரானார்.
https://www.hindutamil.in/news/tamilnadu/140829-.html
தமிழ்நாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத அத்தியாயமாக விளங்கியவர் திமுக தலைவர் கருணாநிதி. கலை, இலக்கியம், அரசியல் என பல்துறை வித்தகராக திகழ்ந்த அவர், விவசாயிகளுக்காக முதல் முதலில் நடத்திய நங்கவரம் போராட்டமும், அரசியலில் தடம்பதித்து முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றதும் அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் ,
காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்பு 40க்கு 60 அதாவது 100 ஏக்கர் நிலம் இருந்தால் 40 ஏக்கரை குத்தகைக்கு உழுது கொண்டிருந்தவர்களுக்கு கிரயம் செய்து கொடுக்க வேண்டும் ,அதை சரியாக செய்யவில்லை ,மூப்பனார் வாண்டையார் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் கோலோச்சிய காலம் குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட நங்கவரம் பேரூராட்சி கீழநங்கவரம், மேள நங்கவரம் சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், இங்கு மொத்த நிலமும் இரண்டு பண்ணை முதலாளிகளிடம் இருந்தது ,அவர்கள் பெயர் ரங்கநாத ஐயர் மற்றும் ராமநாத ஐயர் பெயர் சொன்னால் போதும் தரம் விளங்கும்
மொத்தம் 33 ஆயிரத்து 412 ஏக்கர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணை தொழிலாளிகள் வேலை செய்தார்கள் ஆண்டுக்கு மூன்று போகம் விளையும் காவிரி பாசனப்பகுதி இங்கு போராட்டத்தை அறிவித்தார் அண்ணா, தலைமை ஏற்று நடத்தினார் கலைஞர்,
நாடு பாதி நங்கவரம் பாதி " என்ற முழக்கத்தோடு ஆறு நாட்கள் வயலில் படுத்து போராட்டம் நடத்தினார் கலைஞர், பணிந்தார்கள் பண்ணையார்கள் விவசாயிகளுக்கு நிலம் உரிமையானது அந்தப் பகுதியின் ஹீரோவாக கலைஞர் கொண்டாடப்பட்டார் அதனால்தான் அவர் குளித்தலையில் போட்டியிட்டார் வென்றார்,
நான் ஊர்வலமாக அழைத்துச் சென்றேன் மிதிவண்டியை நானே
ஓட்டினேன் என்று
அவர்
பதிவு
செய்திருக்கிறார்,
1957
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0058632/TVA_BOK_0058632_Who_is_who_1957.pdf
2,ஆனந்தன் கள்ளக்குறிச்சியில் இருந்து வெற்றி பெற்றார் இது ஒரு ரிசர்வ் தொகுதி
3,அறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் இருந்து வெற்றி பெற்றார்
4,பேராசிரியர் அன்பழகன் சென்னை எழும்பூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்
5.அண்ணாமலை போளூர் நார்த்தார் காட்டில் இருந்து வெற்றி பெற்றார்
6,ஏவிபி ஆசைத்தம்பி ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்
7,கோவிந்தசாமி நாயகர் வளவனூர் சவுத் ஆற்காடு திமுக எம்எல்ஏ
8,இருசப்பன் திமுகவிலிருந்து வெற்றி பெற்ற தனித் தொகுதியின் இரண்டாவது எம்எல்ஏ சேலம் மாவட்டம் ஆத்தூர்
9,நடராஜன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ
தான் சந்தித்த இரண்டாவது பொதுத் தேர்தலியே எதிர்கட்சியாக உயர்ந்துவிட்டது திமுக.
தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்".... "நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்" என்று பரிசுத்த நாடார் சவால் விடுகிறார். இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்,
காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல் தயாரிக்கிறார்.
"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம். இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு தஞ்சையை தாருங்கள்" என்று வேண்டி விரும்பி #தஞ்சையில் போட்டி இடுகிறார் கலைஞர்.
தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர்.
ஆசைத்தம்பி, ஏ_கோவிந்தசாமி விருத்தாச்சலம் செல்வராஜ் மா.ப.சாரதி களம்பூர்அண்ணாமலை #நடிகர் ஆனந்தன் அன்பில்தர்மலிங்கம் மன்னைநாராயணசாமி பிஎஸ்சந்தானம் இசப்பன் என திமுகவின் மற்ற வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள்,
இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் கருணாநிதி. 32,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் (காங்கிரஸ்) 1, 928 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வியை தழுவினார்.
1971
1971 - தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை வென்றார்.
தனக்கு இணையாக எதிரிகளை உருவாக்கியதில் கலைஞரின் ராஜதந்திரம் என்ன அந்த சைதாப்பேட்டையில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கம் புகைப்படம் கிடைக்கவில்லை
கருணாநிதியை ஆட்சியில் அமர்த்திய தேர்தல் இது. புற்று நோய் பாதிப்பில் இருந்து மீளாமல் அண்ணா எதிர்பாராமல் இறந்ததையடுத்து முதல்வர் பொறுப்பேற்றார் கருணாநிதி. 1969 ம் ஆண்டின் மத்தியில் காங்கிரஸ் கட்சி இ.காங்கிரஸ் என்றும், தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு காங்கிரஸில் ஸ்திரமற்ற அரசியல் சூழல் ஏற்பட்டது.
தேர்தல் முடிவு, கருணாநிதிக்கு சாதகமாகவே வந்தது. போட்டியிட்ட 201 இடங்களில் 183 இடங்களை பெற்று ஆட்சியமைத்தது திமுக.
கலைஞருக்கு தெரியும் எந்த ஒன்றும் ஒரு கட்டத்துக்கு மேல _ போயிரும் அப்படி எம்ஜிஆர் வருவார் என்று தெரிஞ்சி அவரும் இவரும் சேர்ந்து பேசி ஏன்னா அவங்க ரெண்டு பேரும் ஒரு தட்டில் சாப்பிட்டு ஒரே கட்டில் ___ எல்லாம் இருந்தவர்கள் அப்படித்தான் என்ன தோன்றுகிறது
பெரும்பான்மை தொண்டர்களால் பலமான எதிர்ப்பை கருணாநிதிக்கு தந்தார் எம்.ஜி.ஆர். 1973- திண்டுக்கல் பாராளுமன்ற தொதியில் முதல் களம் கண்ட அதிமுக, அதில் வெற்றியும் பெற்று களிப்பில் இருந்தது. திமுகவிற்கு அது கிலி கொடுத்தது. இந்தியாவில் எமர்ஜென்சியை அறிவித்திருந்த இந்திராவின் போக்கு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் 1977 தேர்தல் வந்தது.
திமுக ஒரு அணியாகவும், அதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் நின்றன. 3வது அணியாக காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி கண்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதிமுக 130 இடங்களை வென்று, முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. திமுக 48 இடங்களை மட்டுமே வென்றது. திமுகவிற்கு வனவாசம் தந்ததாக அமைந்தது எம்.ஜி.ஆரின் இந்த வெற்றி
அந்த சுனாமியிலும் கருணாநிதி, தான் போட்டியிட்ட அண்ணா நகர் தொகுதியில் 43, 076 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி பெற்ற வாக்குகள் 26, 638. திமுக மீதான சர்க்காரியா உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள், எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட எழுச்சி, எம்.ஜி.ஆரின் வலுவான பிரசாரம் ஆகியவைதான் கருணாநிதியை வனவாசத்திற்கு அனுப்பிய காரணங்கள்.
1977 தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் தனித்து விடப்பட்ட கருணாநிதி, அடுத்த 2 வருடங்களில் இந்திராவுடன் நட்பை புதுப்பித்துக்கொண்டார். இதன் காரணமாக 1980 ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உருவானது. மத்தியில் வெற்றிபெற்று பிரதமரான இந்திரா,
யாரும் எதிர்பாராதவகையில் 9 மாநிலங்களின் ஆட்சியை கலைத்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது.
1977 ல் மத்தியில் ஆண்ட ஜனதா அரசு, காங்கிரஸ் கட்சி ஆண்ட 9 மாநிலங்களை கலைத்தது குறிப்பிட்டத்தக்கது.
1980
இதனையடுத்து 1980 ல் தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, ஜனதா கட்சி என மும்முனைப் போட்டி நிலவியது. திமுக அணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், அதிமுக அணியில் இ.கம்யூனிஸ்ட், வ.கம்யூனிஸ்ட், கா.கா.தே.கா, தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. ஜனதா கட்சி தனித்து நின்றது.
மக்களிடையே கேள்வி எழுப்பி எம்.ஜி.ஆர் செய்த பிரசாரம் ஆகியவையே எம்.ஜி.ஆருக்கு வெற்றியை எளிதாக்கியது.
1989
1989 சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நான்குமுனை போட்டியில் வென்று கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.
- துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 41, 632 வாக்குகளில் வென்றார்.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் ஏற்பட்ட குழப்பமான அரசியல், முந்தைய நிலையற்ற அரசு, முந்தைய ஆண்டு சட்டமன்றத்தில் அதிமுகவின் இரு அணியினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் மக்களிடையே அதிமுக மீது ஏற்பட்ட வெறுப்பு போன்றவையே திமுகவின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன. தேர்தல் முடிவுக்குப்பின் ஜானகி அணி, ஜெ அணி இணைந்தது குறிப்பிடத்தக்கது.
1991
1991 - சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் கருணாநிதி வென்றார்.
திமுக வேட்பாளர்களில் கருணாநிதியும் துறைமுகம் தொகுதி பரிதி இளம்வழுதியும் எழும்பூர் மட்டுமே வென்றது திமுக வரலாற்றில் அதிர்ச்சி தோல்வி. ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.
1996
1996 - சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கருணாநிதி. மீண்டும் தமிழக முதல்வரானார்.
2001 சட்டமன்றத் தேர்தல்
சேப்பாக்கம் தொகுதியில் நின்ற கருணாநிதி 29,836 வாக்குகள் பெற்று வென்றார். வாக்கு வித்தியாசம் 4834.
2006
இந்த தேர்தலில் திமுக 31 இடங்களை மட்டும் பெற்றது. அதிமுக கூட்டணி 203 இடங்களை பெற்று ஆட்சிக்கு வந்தது. கருணாநிதி, தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு
1,09, 014 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் எம். இராசேந்திரனை தோற்கடித்தார். வாக்கு வித்தியாசம் 50,
249.
2011
- சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2016
- சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை தோற்கடித்தார். 2016-ஆம் தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.























.jpg)
Comments
Post a Comment