woman's day 2025

 

உலகிலேயே முதன் முதலில் காதலுக்காக மன்னர் பதவியை துறந்தவர் புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவர் தொண்டமான் என்னும் தமிழ்நாட்டில் வாழ்ந்த பிரான்சில் செத்துப் போன அரசர் இவருக்கு பெண்கள் தினத்திற்கான ஒரு சிறப்பான அந்தஸ்து இருக்கிறது அது வேறொன்றுமில்லை 40 வயதான


 

இந்த மன்னர் 20 வயதான ஆஸ்திரேலியா எமிலி  பிங்க் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அந்த காதலை இந்தியாவிலிருந்து இவர் அரண்மனையில் வேலை செய்த சத்தியமூர்த்தி அய்யர் 

இந்து கருத்தியல்வாதி எதிர்த்தார் அதை ஆங்கிலேயரும் ஆதரித்தனர் எப்படி ஒரு ஆங்கிலேய பெண்ணை அருகில் அமர்த்த முடியும் என்பது அவர்களின் எண்ணம் இதற்காக போராடி இவள்தான் என் மனைவி இவள் என் அருகில் தான் இருப்பாள் அதற்காக வேண்டுமானால் நாட்டை விட்டு நான் வெளியேறுகிறேன் எனக்கு நாட்டை விட என் காதல் தான் முக்கியம் என்று அன்றைய மதிப்பில் 20 லட்சம் ரூபாய் சொத்தோடு பிரான்சில் குடியேறி வாழ்ந்து இறந்து போய்விட்டார் ஆனால் அவர் காலத்தில் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி இவருடைய சமஸ்தானம் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற போது தனி இருக்கை உருவாக்கி இவள் தனியாக படிக்கும் படியும் முத்துலட்சுமி வகுப்புக்கு வந்த போதும் முன்னரும் திரை கட்டப்பட்டது இது வரலாறு ஆனாலும் அந்தப் பெண் படித்து மருத்துவராகி 7 தங்கமிடல்களோடு தேர்ச்சி பெற்றார் இவர் தான் உலகின் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாத காலத்திலேயே முத்துலட்சுமி மாநில சமூக நல ஆலோசனைக் குழு தலைவராக முதல் பெண் ஹவுஸ் சர்ஜன் இவரது தாயார் ஒரு தேவதாசி இவர் தந்தைக்கும் தாயாருக்கும் கிட்டத்தட்ட 19 வயது வித்தியாசம் 

சட்டமன்ற மேலவையின் முதல் தலைவர் இவரது தந்தை எஸ் நாராயணசுவாமி ஐயர் மகாராஜா கல்லூரியில் முதல்வராக இருந்தார் இவரது தாய் ஒரு தேவதாசி இருவருக்கும் 19 வயது வித்தியாசம் முத்துலட்சுமி தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசியல்வாதி முதல் மருத்துவர் சட்ட மேலவையின் துணை தலைவர் ஒரு சென்னை மாநகராட்சியின் முதல் பெண் உறுப்பினர் இவர் தந்தை நாராயண சுவாமி ஐயர் மகாராஜா கல்லூரியில் முதல்வராக இருந்ததால் இவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டது என்பது மட்டுமல்ல இவர் ஒரு தேவதாசியின் மகள் என்பதுதான் அதற்கான இன்னொரு காரணம் எப்பவும் தேவதாசிகள் கல்வி அறிவு கலை அறிவு இரண்டும் பெற்று இருந்ததா அவர்கள் எளிதாக ஆண்களோடு ஆண்களைப் பற்றி அறிந்ததால் எளிதில் ஜெயிக்க முடிந்தது அப்படி இந்தியாவில் வெற்றிக்கொடி நாட்டிய பாடகி லதா மங்கேஷ்கர் ஒரு தேவதாசி 

1907 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் பெண்மணி அடுத்த மூன்று ஆண்டுகளில் தான் மகளிர் தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது அவர்களுக்கு தெரியாது முத்துலட்சுமி வரலாறு தமிழ்நாட்டுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட வரலாறு 

முத்துலட்சுமி தனது 28 வயதில் தான் சுந்தரா ரெட்டியை மணந்தார் பிரபல தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் முத்துலட்சுமி ரெட்டியின் அண்ணன் மகன் ஆவார்


சர்வதேச மகளிர் தினம் மார்ச் மாதம் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது இதற்கு காரணமாக இருந்தவர் கம்யூனிஸ்ட் போராளி கிளாரா ஜெட்கின் ஒரு ஜெர்மானியர் 1910 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது இதற்கு அமெரிக்க பெண்கள் ஆதரவளித்தார்கள் காரணம் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை அமெரிக்க அரசு 1787 ஆம் ஆண்டின் சுதந்திரம் பெற்றது ஆனால் எல்லா பெண்களுக்குமான ஓட்டுரிமை வந்தது 1965 ஆம் ஆண்டு தான் எவ்வளவு பெரிய இடைவெளி அதனால் தான் அமெரிக்க அதிபராக ஒரு பெண்மணி வர முடியவில்லை. முதலில் அவர்கள் வாக்களிக்கும் உரிமைக்காக போராடினார்கள்


https://www.teenvogue.com/story/when-women-got-right-to-vote-united-states   

இருபதாம் நூற்றாண்டு தொழில் புரட்சி ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு ஒரு ஒரு நாளைக்கு இரண்டு டாலர் ஊதியம் என்றால் அதே வேலையைச் செய்யும் பெண்களுக்கு ஒரு டாலர் ஊதியமாக வழங்கப்பட்டது அதை எதிர்த்து 15 ஆயிரம் பெண்கள் போராடினார்கள் அதன் விளைவாக ஊதியம் உயர்வு அளிக்கப்பட்டது 1910 முதல் மகளிர் தினம்


 கொண்டாடப்பட்டாலும் அவை ஐநா நீதிமன்றத்தில் 1975 இல் தான் அந்த தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டது வளர்ந்த நாடுகள் எவ்வளவு பிற்போக்குத்தனமாக சிந்திக்கிறது 

மதங்கள் அனைத்தும் பெண்களுக்கு எதிராகவே இயங்குகின்றன கிறிஸ்தவ மதம் ஒரு ஆண் திருமணமானவன் கன்னிப் பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அவளுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்கிறது அதே விலைக்கி  வைக்கப்பட்ட ஒரு மனைவியோடு தொடர்பில் இருப்பவன் அவனும் விபச்சாரம் செய்கிறான் என்கிறது 

கிறிஸ்தவ தலைமை பீடமான போப் ஆண்டவருக்கும் ஆட்சி தலைமை பீடமாக இருந்த இங்கிலாந்து மன்னர் எட்டாவது ஹென்றி இருவருக்குமான சண்டை மிக முக்கியமானது வாங்க ராஜா கதை கேட்போம் 


பதினாறாம் நூற்றாண்டின் முதல் ஆண்டு 1501 ஆம் ஆண்டு லண்டன்ல உள்ள செயபால் தேவாலயத்தில் ஒரு திருமணம் தொடங்குகிறது நவம்பர் 14ஆம் தேதி லண்டன் மன்னர் ஏழாவது ஹென்றி மகன் ஆர்தர் மற்றும் ஸ்பெயின் இளவரசி கேத்தரின் ஆகியோரின் திருமணம் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கொண்டாடியது 

எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ராஜாக்கள் அதை தவிர்ப்பதற்காக சண்டைக்காரன் வீட்டில பெண் எடுக்குற வேலை அப்பவே இருந்தது அப்படித்தான் சண்டையா இருந்த இரண்டு நாடுகளும் திருமணத்தின் மூலம் ஒன்று சேர்ந்தனர் 


ஹனிமூன் போன தம்பதியில ஒருத்தர் அன்னைக்கு வந்த ஒரு பெரிய வியாதி சமீபத்தில் கொரோனா மாதிரி ஆர்தர் இறந்து போனார் ஆடம்பரமான லுட்லோ கோட்டையில் கேத்தரின் தனியாக அழுது கொண்டிருந்தார் இதை அறிந்து அவரது தகப்பனார் ஸ்பெயினுக்கு அழைத்தார் இல்லை நான் வாழ்ந்தால் ராணியாக தான் வாழ்வேன் மங்கம்மா சபததுக்கு  எல்லாம் முன்னாடியே இந்தம்மா சபதம் போட்டாங்க அவங்க அப்பாவும் ஒத்துக்கிட்டாரு சரிமா இங்கேயே நீ ஒரு ஸ்பெயினின் அம்பாசிடராக இரு அப்படின்னு சம்பளம் கொடுத்தார் அதுக்குள்ள வயசான மன்னருக்கு இந்த அம்மாவை திருமணம் பண்றதுக்கு ஒரு ஏற்பாடு நடந்தது அவர் ஒத்துக்கல சரின்னு சொல்லிட்டு ஆர்தரின் தம்பி ஹென்றி VIII  தன்னைவிட வயதில் குறைந்த தடியனை கட்டிக்கிட்டா  இரு வீட்டார் சம்மதம் குறுக்க வந்தது போப்பாண்டவர் என்ன சொன்னார் தெரியுமா என்ன இருந்தாலும் உன் அண்ணனின் மனைவியின் நிர்வாணம்   உண்நிர்வாணம் போன்றது இது பைபிள்ல இருக்கு

https://biblehub.com/leviticus/18-16.htm

வரலாற்றில் பெண்களுக்கு ஆதரவானவனும் இந்த இங்கிலாந்து மன்னன் எட்டாவது ஹென்றி, எதிராகவும் செயல்பட்டான் அவன் தன் மனைவி நான்கு பேரை தலையை துண்டித்துக் கொன்றான் அதெல்லாம்  நான் சொல்றேன் 

இந்த கேத்தரின் எவ்வளவு பெரிய பரம்பரைன்னா இவங்க அக்கா இத்தாலியில ராணி. இன்னொரு அக்கா ரோம்ல மகாராணி இவங்க குடும்பமே உலகம் புல்லா உள்ள ராஜ குடும்பத்தில் எல்லாம் பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தவங்க அதனால இந்த அம்மா போப் ஆண்டவரையே காலில் எட்டி உதைச்சிருச்சு என்ன சொன்னது தெரியுமா இந்த கேத்தரின் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆனாலும் ரெண்டு பேருக்குள்ள நடக்க வேண்டியது ஒன்றும் நடக்கல அதுக்கு நான் தான் சாட்சி இது பெரிய குண்டு, போப்பாண்டவர் நடுங்கி போயிட்டாரு வேற வழி இல்ல திருமணத்துக்கு அனுமதி அம்மா ராணி ஆயிருச்சு அத்தோடு கதை முடியல பிறந்தது நாலு குழந்தைங்க ஒன்னு பொழைச்சு மிச்சமெல்லாம் செத்துச்சு ,

கதையில வில்லன் ஹென்றி இன்னொரு பெண்ணை காதலித்தான் அவள் பேரழகி பெரிய அறிவாளி அவள் உருவாக்கியதுதான் இங்கிலாந்து சாம்ராஜ்ஜியம் அதற்கு முதல் பெண் ராணியாக விக்டோரியாவின் தாயார் தான் இந்த அன்னை போலின் இவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய மீண்டும் போப் ஆண்டவர் முட்டுக்கட்டை போட்டார் இப்போது இவருக்கு ஆதரவாக இருந்தது இங்கிலாந்தில் இருந்த பிஷப் பிறகு இவரின் மன்னர் ஆட்சிக்கு கீழே இருந்த முதலமைச்சர் ரெண்டு பேரும் தாமஸ் இந்த மூணு பேர் கூட்டணிக்கு அம்மையாரும் துணைக்கு வந்தாங்க அடிச்சு நொறுக்கிட்டாரு, போப்பாண்டவர் ஒரே ராத்திரியில கிறிஸ்தவ மதத்தின் மொழி மாற்றப்பட்டது தலைவர் மாற்றப்பட்டார் மன்னர் தான் இனிமேல் திருச்சபையின் தலைவர் அப்புறம் என்ன இந்த பொண்ணோட கல்யாணம் பண்ணிக்கிட்டார் அவருக்கு வேண்டியது ஆண் வாரிசு, அது கிடைக்கல என்ன கொடுமைனா இந்த ஹென்றி இவருக்கு ஆதரவாக தாமஸ் கிராமர் தலையை வெட்டிக் கொன்றார், பிறகு என்ன காதல் திருமணம் செய்த அன்னை போலின் தன் சொந்த சகோதரனோடு தகாத உறவுகள் இருந்ததாக அவர்கள் இருவரையும் தலையை வெட்டிக் கொன்றார், ஆனால் அவர் தெளிவாக தன் மகளை அரசியல் சொல்லி வளர்த்தார் அதனால் தான் இங்கிலாந்தின் முதல் பெண் அரசி திருமணம் செய்து கொள்ளாத அந்த அரசி உருவாக்கியது தான் இங்கிலாந்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யம் அவள் பேரில் தான் வெர்ஜின்லாண்ட் அதாவது கன்னி மேரி என்று அமெரிக்காவில் ஒரு மாநிலம் உருவாக்கப்பட்டது

இங்கதான் ஒரு விஷயத்தை நம்ம கவனிக்கணும் பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான மிகப்பெரிய பிரச்சாரத்தை மார்ட்டின் லூதர் செய்து வைத்திருந்தார் கிட்டத்தட்ட கிறிஸ்தவ மதத்தின் எல்லா பூட்டுகளின் சாவியும்  அவர் வைத்துக் கொண்டு ஒன்றாகத் திறந்தார் 
400 வருடங்களுக்கு பிறகு கத்தோலிக்க மதம் பெரிய பிளவை சந்தித்தது அதன் விளைவாகத்தான் அமெரிக்கா முழுவதும் ப்ராட்டஸ்டண்ட் பரவியது அதற்கு இன்னொரு காரணம் உண்டு அதாவது 15 ஆம் நூற்றாண்டில் இருந்த போப்பாண்டவர் அலெக்ஸாண்டர் அமெரிக்காவில் யாரெல்லாம் குடிகார வேண்டும் என்பதற்காக ஒரு கோடு போட்டார் அது போர்ச்சுக்கல் மற்றும் ஐரிஸ் காரர்களுக்கான ஒப்பந்தம் அதை மீற வேண்டிய அவசியம் வந்ததால்தான் நாங்கள் புராட்டஸ்டண்டுகள் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்

https://en.wikipedia.org/wiki/Treaty_of_Tordesillas 

19ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் பிறந்த ஒரு பார்ப்பன பெண் ரமாபாய் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவரை திருமணம் செய்து கொண்டார் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார் பெண் கல்வி குறித்து முதலில் பேசியவர் இவர் தான் வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது 20 வயதில் பெற்றோரை இழந்த போதிலும் 25 வயதில் கணவரை இழந்த போதிலும் அவர் தைரியத்தை இழக்கவில்லை மாறாக அவர் இறக்கும் வரை 40 ஆண்டுகள் தனது லட்சியங்களுக்காக பெண் கல்வி குறித்து நிறைய சேவை செய்தார் குறிப்பாக இளம் விதவைகளுக்கு அதை தடுத்தவர் திலகர் நமக்கு திலகரை தெரியும் இந்த ரமா அபாய தெரியாது

https://en.wikipedia.org/wiki/Pandita_Ramabai


வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னொரு பார்ப்பன பெண் ஆனந்தி பாய் கோபால் ராவ் ஜோஷி இவர் மார்ச் 31 1865 இல் பிறந்தார் 9 வயதில் திருமணம் 14 வயதில் ஒரு குழந்தை பத்து நாள் போராடி சரியான மருத்துவம் கிடைக்காமல் இறந்து போகிறான், இவரை விட 30 வயது கூட இருந்த கணவர் இவரின் ஆர்வத்தை தூண்டி இவரை மருத்துவம் படிக்கச் சொல்கிறார் கல்கட்டாவில் முதலில் படிக்கிறார் அப்போதைய வசதிகள் அமெரிக்காவில் இருந்ததால் அமெரிக்கா நியூஸர்ஜி ஒரு கிறிஸ்தவ மிஷனரி உதவியுடன் இவருடன் சேர்ந்து மூன்று ஆசியா கண்ட பெண்கள் மருத்துவம் பயின்று பேருந்து நாடு திரும்பினர் 


https://en.wikipedia.org/wiki/Anandi_Gopal_Joshi 

இப்போது இருப்பது போல எம்பிபிஎஸ் இல்லை அப்போது அது ஒரு நர்ஸ் கோர்ஸ் இரண்டு ஆண்டுகள் அப்போது இருந்த ஆங்கில மருத்துவத்தின் வசதிகள் அவ்வளவுதான் வியாதிகள் வளர்வது போல மருத்துவ வசதிகளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது இந்தியன் மருத்துவத்துறை 1970 களில்தான் ஐந்தாண்டு மருத்துவத்துறையை பயிற்சி உடன் சேர்த்து கட்டமைத்தது அதனால் தான் எவ்வளவு வயதானாலும் அவர் பயிற்சியாளர் தான் வழக்கறிஞர்களைப் போல

இவர் மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய போதும் அப்போது காச நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலம் நேருவின் மனைவி முதல் முகமது ஜின்னா வரை இந்த நோய் கொன்றது, இவரையும் 21 வயதில் பிப்ரவரி 26 1887 அன்று இவரை எரித்து சாம்பலை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே இவருக்கு சமாதி செய்து வைத்திருக்கிறார்கள்

ஒரு கசப்பான உண்மையை சொல்லியே ஆகணும் இங்கிலாந்து கிறிஸ்தவத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டு விட்டது ஆனால் இந்தியாவில் மனு ஆட்சியில் இருந்தது, அதை ஆங்கிலேயர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள் இங்கிலாந்தில் மகாராணி ஆட்சி ஆனால் இந்தியாவில் எந்த பெண்ணுக்கும் வேறு கணவரை தேர்ந்தெடுக்க குழந்தையை தத்தெடுக்க முடியாமல் செய்தது இந்தியாவில் பார்ப்பனர்கள் வகுத்து வைத்த மனுநீதி தான் அதனால் பாதிக்கப்பட்டவர் தான் ஜான்சி ராணி என்று சொல்லப்படுகிற மணிகர்ணிகா இன்னொரு மகாராணி கர்நாடகாவில் இதில் விதிவிலக்காக சிவகங்கை மன்னர்கள் போராடி ஏற்கனவே ராணி மங்கம்மா ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று பேசி லண்டன் வரை போய் ஆட்சியை மீட்ட கதையெல்லாம் தனியா பேசுவோம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுரண்டுவதற்கு மட்டுமே வந்தார்கள் ஒரு சிலர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் போல பெண் கல்விக்காக தனது வாழ்நாளை நான் சம்பாதித்த பணத்தை ஜான் எலியட் ட்ரிங்க் வாட்டர் பெட் தூன் என்பவரை யாரும் கண்டு கொள்வதில்லை இவர் தான் பெண் கல்வி குறித்து கவலைப்பட்ட முதல் ஆங்கிலேயர் மெக்காலே பேசி இங்கிலாந்திடம்  நிதி வாங்கினார் ஆனால் இந்த ஜான் எலியட் ட்ரிங்க் வாட்டர் பெட் தூன்

நேட்டிவ் கேர்ள்ஸ் என்று பெண்களுக்கான பள்ளியை துவங்கினார் இலவச கல்வியை வழங்கினார் பெரும்பாலும் ஜாதியால் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்கு பள்ளிக் கல்வியை வழங்கினார் 

சிலர் அவர் மேல் சந்தேகம் கொண்டனர் அதை தீர்ப்பதற்காகவே இங்கு சமஸ்கிருதமும் சொல்லிக் கொடுக்கப்படும் பெண் ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படும் மதம் மாற்றப்படாது போன்ற நிபந்தனைகளுடன் 

பெற்றோர் விரும்பினால் மட்டுமே ஆங்கிலம் கற்று வைக்கப்படும் கடைசியா சொன்னது தான் பெருசா நின்னது பாப்பம்பூரா படிச்சான் கல்கட்டா இந்தியாவின் அறிவுசார் தலைநகரமாக வளர்ந்ததற்கு இந்த வெள்ளைக்கார பயபுள்ள செஞ்ச வேலைதான் எல்லா பாப்பாத்தியும் படிச்சு முன்னேறிட்டால் 

அதற்கு என்ன சாட்சின்னு கேக்கறீங்களா? சமஸ்கிருத பண்டிட்டு மதன் மோகன் அவருடைய இரண்டு மகள்களையும்  மாலா மற்றும் குந்தன் மாலாவை அழைத்து வந்த பிறகுதான் பிரசாதிக்காரங்க வந்தாங்க

அவர் இறந்த பின்பு இன்னொரு ஆங்கிலேயர் மாணவர்களிடம் பணம் வசூலிக்கலாம் என்றார் அதற்காக பெத்துனை அறிந்த ஒரு வெள்ளைக்காரர் பெயர் தெரியவில்லை. அவரின் நோக்கம் இலவசமாக கல்வி கொடுப்பது பெண்களுக்கு என்று வாதாடினார் அப்படியே தமிழ்நாட்டுக்கு வருவோம் படிக்கிற பெண்களுக்கு இலவச உடை இலவச சைக்கிள் மாதம் தோறும்  ஆயிரம் ரூபாய் ,முதல் தலைமுறைக்கு பட்டதாரிக்கு 5 மார்க் எல்லாம் செஞ்ச திமுகவ இந்த பெண்கள் நினைச்சு பார்ப்பாங்கன்னு நான் நினைக்கிறேன்,



உலகில் பெண்களுக்கான முதல் மருத்துவக் கல்லூரியை உமன் மெடிக்கல் காலேஜ் ஆஃப் பென்சில்வேனியா ஒரு பணக்கார பையன் சாமுவேல் கிரிகோரி அவன் எதுக்கு இது ஆரம்பிச்சானா அவன் பொண்டாட்டிக்கு பிரசவம் பாக்குறதுக்கு ஒரு ஆண் மருத்துவர் வந்துட்டான் அது அவனுக்கு புடிக்கல அதனாலதான் அவனே செலவழிச்சு ஒரு காலேஜ் கட்டி கொஞ்சமா 12 பேர் மட்டும் படிக்க வச்சான்

முதுகலை பட்டம் காந்திய சிந்தனைகள் படித்தவன்  நான் சொல்கிறேன்,
காந்தியார் நடத்தி வைத்த மூன்று காதல் திருமணங்கள் ஒன்று அவங்க பையன் தேவதாஸ் காந்தி, தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் அவருக்கும் தமிழ் தெரியும் காந்திக்கும் தமிழ் தெரியும் இது நீங்க எங்கேயும் முடிச்சு போடக்கூடாது தில்லையாடி  வள்ளியமைக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தமோ அப்படித்தான் காந்திக்கும் தமிழுக்குமான சம்பந்தம் 
இந்தி பிரச்சார சபைக்காக தமிழகத்தில் தங்க வைக்கப்பட்ட காந்தியின் மகன் ராஜாஜியின் மகள் லட்சுமி யோடு  காதலித்தார்  அது காந்திக்கு தெரிஞ்சு அஞ்சு வருஷம் ரெண்டு பேரும் பேசக்கூடாது அப்படி இருந்தா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன், அப்படின்னு ஒரு கண்டிஷன் போட்டார் அப்படித்தான் அவர்கள் நடந்து கொண்டார்கள் காந்திக்கு இதே வேலைதான் காதலர்களுக்கு கண்டிஷன் போடுவது இன்னொரு கல்யாணமும் இப்படித்தான் பண்ணார் இருவருக்கும் 18 வயது வித்தியாசம் மிக எளிமையாக நடத்தப்பட்ட திருமணம் இந்து முறைப்படி அதை நான் இங்கே சொல்லியே ஆகணும்

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஏன் ஒரு ஜனாதிபதியை எதிர்த்து நிற்கும் வேட்பாளராக கூட இருந்தார்கள் ராஜாஜி 
காந்தியோடு சம்பந்தம் போட்டது வேற கதை அது தனியா பேசுவோம்
***************************************************************************


நேருவின் மகள் இந்திராவுக்கும் அவங்க அம்மாவுக்கு காசநோய் வைத்தியத்துக்கு உதவி செய்ய வந்த பெரோஸ் கான் என்கின்ற பார்சி நண்பருக்குமான காதல் அதை நேரு எதிர்த்தார், காந்தி ஆதரித்தார், விளைவு இரண்டு பேருக்கும் திருமணம் மிக எளிய முறையில் இந்து முறைப்படி நடந்தது எதையும் சொல்லனும் இல்ல ஃபெரோஸ் கான் எப்படி பெரோஸ் காந்தியானார் 1000 பேர் ஒன்று சேர்ந்து பேருக்கு பின்னால் காந்தியை சேர்த்துக் கொண்டார்கள் இவர் தான் என் தந்தை என்பதாக எதுக்கு சொல்றேன்னா நேரு குடும்பத்திலயும் நிறைய காதல் திருமணங்கள் நடந்திருக்கு விஜயலட்சுமி பண்டிட் குடும்பத்துல நிறைய காதல் யாரும் காந்தி பெயரை சேர்க்கவில்லை அதனால இது ஒரு ஸ்பெஷல் மகாத்மா காந்திக்கு அப்படியே நிறுத்திடுவோம்


காந்தியார் நடத்தி வைத்த மூன்றாவது காதல் திருமணம் தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் அதிபர் சவுத் இந்தியாவுல எல்லா பொறம்போக்கு இடத்தையும் 99 வருஷத்துக்கு குத்தகையா வாங்கி பெரிய வாகன சந்தையை உருவாக்கிய ஐயா கதைய தனியா பேசணும்,

 இப்ப வேண்டாம் டிவிஎஸ் ஐயங்கார் குடும்பத்துல அவருக்கு பின்னாடி ஒரே பெண் வாரிசு அந்தம்மாவுக்கு 14 வயசு இருக்கும் போது சவுந்தர்ராஜன் என்கிற டாக்டர் அவருக்கு திருமணம் அவரும் கொரோனா மாறி அன்னைக்கு வந்த ஒரு பிளேக் நோய்ல வந்த நோயாளியை காப்பாத்திட்டு இவரு நோயிலிருந்து தப்பிக்க முடியாமல் இறந்து போயிட்டார் சாவதற்கு முன்னாடி மனைவி கிட்ட சொல்லிட்டு செத்துபோய்ட்டர்  என்னை போல மருத்துவராக மாறி சேவை செய்ய வேண்டும் ஆகட்டும் டும் டும் அப்படின்னு சொல்லிட்டு காந்தியார் உதவி கேட்டு 

சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் கலந்துக்க வேண்டாம் நேரா மருத்துவராய் இருங்க அப்படின்னு காந்தி சொன்னது டெல்லியில் லேடி ஹார்ட்டிங் மெடிக்கல் காலேஜில் தங்கப் பதக்கம் வென்றார், நமக்கு முத்துலட்சுமி ரெட்டி பேரு ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது 1936 ஆம் ஆண்டில் தனது 32 வது வயதில் மருத்துவப் படிப்பை முடித்தார் காந்தி உதவி செஞ்சார் இல்ல இப்ப அந்த அம்மாவுக்கு என்ன பிரச்சனை டிவிஎஸ் சுந்தரம் ஐயங்காருக்கு என்ன பிரச்சனை சொத்துக்கு வாரிசு இல்லை அய்யங்காருக்கும் முடியல நேரா காந்தியார்கிட்ட  போய் நின்னாங்க அவர் சொல்லிட்டாரு,

பெண்களின் இரண்டாவது திருமணத்திற்கு மந்திரம் இல்லை அது கூட பரவால்ல ஒரே ஒரு பார்ப்பான் கூட 32 வயது பெண்ணை கட்டிக் கொள்ள தயாராக இல்லை அப்பா மடியில உட்கார வச்சு ஒன்பதிலிருந்து பத்து வயசுக்குள்ள கல்யாணம் பண்றது தான் அவங்க வழக்கம் காந்தி பார்த்தார் கேரளாவை சேர்ந்த பட்டியல் இன மருத்துவர் ஜி ராமச்சந்திரன் அவர ஏற்கனவே காந்தி இந்த அம்மாவோட பழக விட்டார் பழகி பழகி அது திருமணமா வந்து நின்னுச்சு அவருடைய ஆசிரமத்தில் தொன்னையில பாயாசம் கதர்ல நெஞ்ச வேட்டி சட்டை அந்த அம்மாவுக்கும் கதர் புடவை மொத்தமே 30 ரூபாய் செலவில் நடந்ததுதான் காந்தி யார் நடத்தி வைத்த மூன்றாவது திருமணம் இதை  எவனுமே சொல்ல மாட்டேங்குறான் அதனால தான் நான் அழுத்தி சொல்றேன்



Comments

Popular posts from this blog

அரசியலில், இலக்கியத்தில், காலம் தோறும் பெண்கள்-1

கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamilnadu-1

இன்றைக்கு பிஜேபி செய்கிற வேலைகளை ஆரம்பித்து வைத்த காங்கிரசின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்