அமெரிக்க அரசியல் வரலாறு -1

https://www.britannica.com/topic/Commission-on-Presidential-Debates 

அமெரிக்க வரலாறு என்பது வென்றவர்கள் எழுதி வைத்தது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்வது நாய் தோலில் வடிகட்டிய பொய் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் 

கொலம்பஸ் அமெரிக்காவை சென்றடைந்தது 1492 இல் இதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு 


லீப் எரிக்சன் lelf eriksson என்பவர் கி பி 1075 ஐஸ்லாந்தில் பிறந்து தந்தை இறந்தபின் கிரீன்லாந்து நாட்டில் குடியேறி, அந்த நாட்டின் இனக்குழு தலைவனாக வளர்ந்தவர்,, அவர் தலைமையில் அமெரிக்காவின் வடபகுதியில் உள்ள கடலோரத்தில் முதல் ஐரோப்பா குடியேற்றத்தை  துவக்கி வைத்தவர் கிரீன்லாண்டில் இருந்து நேராக கனடா வந்தார் ,அது அவ்வளவு ஒன்றும் தூரம் இல்லை 

https://en.wikipedia.org/wiki/Leif_Erikson


இதே காலத்தில் சோழர் கடற்படைவைத்திருந்தது இன்றைக்கு இருக்கும் இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து ,பர்மா , கம்போடியா, போன்ற பகுதிகளை எல்லாம் பிடித்து அங்கே இவரின் ஏஜெண்டுகளை கவர்னர்களைப் போல ஆக்கிவிட்டு வந்ததாக உறுதிப்படாத தகவல்கள் சொல்கிறது, ஆனால் சில ஆதாரங்கள் அந்தப் பகுதிகளில் இருக்கிறது அந்த நாட்டு மக்கள் ஒரு கொள்ளைக்காரனாக கூட சோழப் பேரரசனை ஏற்றுக் கொள்ளவில்லை,


1492 இல் கொலம்பஸ் நாலு கப்பல்ல வந்து மூன்றை சூறாவளியில் இழந்து ஒரு கப்பலில் அதுவும் கொலம்பஸ் வந்து இறங்கியது தென் அமெரிக்கா அப்போது அந்தப் பெயர் இல்லை கியூபாவுக்கு மேலே மியாமிக்கு கீழே bhamas என்ற தீவு அங்கு தான் அவர் வந்து இறங்கினார்

அடுத்தடுத்து அமெரிக்காவின் சில பகுதிகளை கண்டுபிடித்து ஆயுதங்களோடு வந்து அங்கு இருந்த ஆதி மக்களை அடித்த துரத்தியது கொலம்பஸ் செய்த வரலாற்றுப் பிழை,அமெரிக்காவில் ஐரோப்பியர்களை சட்டபூர்வமாக குடியேற்ற நடந்த போராட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கும் கொலம்பசுக்கும் பிணக்குகள் வந்து அவர் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்து பின்பு அவரும் அவரது நண்பர்களும் விடுவிக்கப்பட்டனர், இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கிறேன் என்று துவங்கி அமெரிக்காவை கண்டுபிடித்தாலும் கொலம்பஸுக்கு அவர் கண்டுபிடித்த காலத்தில் அதற்கு அமெரிக்கா என்ற பெயர் கிடையாது


தனது கடைசிக் காலத்தில் கொலம்பஸ் தனக்கு ஸ்பானிய அரசிடமிருந்து பத்து விழுக்காடு புதிய தீவுகளிலிருந்து லாப ஈட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கேட்டு வந்தார். ஆனால் ஸ்பானிய அரசர் இதை நிராகரித்தார்.மே 20, 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது. முதலில் வல்லா டோலிட்இலும், பின் செவில்-இலும் பின்னர் அவருடைய மகன் டியெகோ, அப்போதைய ஹிஸ்பானியோலாவின் ஆளுநர், அவரது முயற்சியில் ஸாண்டா டோமிங்கோவிற்கு அவரது உடல் 1542-இல் கொண்டு வரப்பட்டது1795-இல் பிரெஞ்சு அதைக்கைப்பற்றியதால்ஹவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898 போருக்குப்பிறகு கியூபா தனித்த நாடானதும், அவருடைய உடல் மறுபடியும் ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்டு செவிஜா (Seville) ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பலர் இன்னும் அவரது உடல் ஸாண்டா டோமிங்கோ வில் இருப்பதாக நம்புகின்றனர்.


கொலம்பஸுக்குப் பிறகு அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் தான் இது ஆசியா கண்டத்தில் ஒரு பகுதி அல்ல, இது ஒரு புதிய கண்டம் என்னும் வகையில் இலத்தீன் மொழியில் புதிய கண்டம் என்பதை அமெரிக்கசு என்று அழைப்பார்கள் அது தான் அமெரிக்கா என்று ஆனது, தன் பயணங்கள் எல்லாம் புதிய உலகம் என்ற புத்தகமாக எழுதி ஐரோப்பா முழுவதும் அமெரிக்காவில் இருக்கும் செல்வங்கள் குறித்து புரிதல் வளமான அந்த பூமி குறித்து இவர் சொல்லித்தான் மிச்சம் இருந்த நாட்டுக்காரர்கள் எல்லாம் அமெரிக்கா மீது கப்பல் பயணம் வந்து அவரவர் காலனி கடலோர செழிப்பான பகுதிகளில் தனித்தனி குடியிருப்புகள் ஆரம்பமானது இப்படித்தான்


போர்ச்சுக்கல் நாட்டவர் ஆங்கிலேயருக்கு முன்பாகவே தென் அமெரிக்காவின் ஒரு பகுதியான பிரேசிலை நூறாண்டுகள் அவர்கள் காலனியாக வைத்திருந்தார்கள், போர்ச்சுக்கல் அமெரிக்காவில் 1570களில் பெரும் காலணிகளை உருவாக்கி விட்டாலும் ,

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தான் இங்கிலாந்து கப்பல்கள் அமெரிக்க கரை ஒதுங்கின

https://education.nationalgeographic.org/resource/treaty-tordesillas



Jun 7, 1494 CE: Treaty of Tordesillas On June 7, 1494, the governments of Spain and Portugal agreed to the Treaty of Tordesillas, which divided their spheres of influence in the "New World" of the Americas.

1494 இல் அலெக்சாண்டர் அப்போது இருந்த Pope Alexander in 1494 அப்போது இருந்த மேப் அதில் ஒரு கோடு போட்டார்,, இதற்கு கிழக்குப் பகுதி முழுக்க போர்ச்சுக்கலுக்கு பிரேசில் தவிர்த்து ,மேற்குப் பகுதி முழுக்க Spain னுக்கு இதில் என்ன விந்தை என்றால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் ஜெர்மன் ரஷ்யா இன்னும் சில குட்டி நாடுகள் கூட மொத்தமாக படையெடுத்தனர் வேறொன்றும் இல்லை அமெரிக்காவின் வளம் அப்படி நீர் பஞ்சமில்லை மிகப் பெரிய நிலப்பரப்பு அந்த பூர்வகுடி செவிந்தீர்கள் விவசாயம் செய்து கொண்டிருந்த பகுதிகளில் துப்பாக்கி முனையில் அவர்களை அடித்து விரட்டி விட்டு இவர்கள் குடியேறினார்கள் 

ஸ்பானியர்கள் ப்ளோரிடா மெக்ஸிகோ எல்லாவற்றையும் ஆக்கிரமித்த போது

1607 இல் தான் பிரிட்டிஷ் கப்பல் அமெரிக்காவை சென்றடைந்தது இங்கிலாந்தில் இருந்து வந்த ஆங்கிலேயருக்கு போப் ஆண்டவர் பேச்சை மீற முடியாது என்பதால் ஒரு முடிவு செய்து எல்லோரும் புராட்டஸ்டண்டாக மாறினார்கள்

காலப்போக்கில் ஸ்பெயினும் போர்ச்சுக்களும் அமெரிக்காவில் செல்வாக்கை இழந்தது அதற்கு வேறு காரணம் ஒன்றும் இல்லை, அன்றைக்கு இருந்த இங்கிலாந்தின் செல்வாக்கு குள்ளநரித்தனம்,



அமெரிக்காவுக்கு கடைசியா வந்தது இங்கிலாந்து ஏன் அவங்க கடைசியா வந்தாங்க அதுக்கு காரணம் இருக்கு,
 அங்க மன்னர்களுக்கும் போப்பாண்டவர்க்கும் பிரச்சனை ,
அதை ஒரு வழியா சரி பண்ணா மந்திரி சபைக்கும் மன்னருக்கும் பிரச்சனை, இத கதை மாதிரி சொல்லணும், 
எப்படின்னா 15 ஆம் நூற்றாண்டின் முதல் ஆண்டு அதாவது 1501 லண்டன்ல உள்ள பெரிய தேவாலயம் செயின்ஸ் பால் அங்க 
நவம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி மன்னர் மகன் ஆர்தர் மற்றும் ஸ்பெயின் இளவரசி கேத்தரின் இருவருக்கும் திருமணம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு இரண்டு பேரும் ஹனிமூன் போனாங்க போன இடத்துல மாப்ள செத்துப் போயிட்டார்,



 கொரோனா வந்தது மாதிரி அந்த காலத்துல ஒரு வியாதி வந்தது ஆர்த்தர் கேத்தரின் திருமணம் ஆகி ஹனிமூன் போனது இங்கிலாந்து மன்னருக்கு சொந்தமான ஒரு உல்லாச பங்களா லுட்லோ கோட்டை அங்க நோய் பாதிக்கப்பட்டு ராஜா செத்து போயிட்டார் ஆனால் இளவரசிக்கு ஒன்னும் ஆகல, அதற்கு ப்ளேக்ன்னு சொல்லுவாங்க நம்ம ஊர்ல எதிரி வீட்டில் சம்பந்தம் போடுவாங்க பெரும் பணக்காரங்க ஏன்னா எதிரி நம்மள வந்து தாக்கிட கூடாதுன்னு நினைச்சு அது மாதிரி சில மன்னர்கள் படைத்தளபதிகள் மகள்களை திருமணம் செய்து கொள்வார்கள், இது ராஜதந்திரம் ஆனால் எல்லா ராஜதந்திரத்தையும் இயற்கை காலாவதியா பண்ணிடுச்சு, 

இந்த சூழல் ஸ்பெயின் மன்னர் தனது மகளை ராஜாவுக்கு கட்டி வைக்கிறதுக்கு கூட ரெடியா தயாரா இருந்தார் ஆனால் மகள் ஒத்துக்கல 
நிறைய வரதட்சனை கொடுத்து இருக்கிறார் அதை சரி பண்ண வேண்டி செத்துப்போன மாப்பிள்ளைக்கு தம்பி இருக்கான் அவன் பேரு எட்டாம் ஹென்றி ஏன் இரண்டாம் மூன்றாம் எட்டாம் அப்படி எல்லாம் வருதுன்னா நாலு பேரு தான் அதைத்தான் இவங்க மாத்தி மாத்தி வச்சிருக்காங்க தாத்தா பேர பேரனுக்கு வைக்கிறது மாதிரி 



இங்கே ஒரு சிக்கல் வருது ,அந்த சிக்கல் சண்முகம் வேற யாரும் இல்லை போப்பாண்டவர் அவர் என்ன சொல்கிறார் என்றால் கிறிஸ்தவ மதத்தில் அண்ணனின் மனைவி ஆடையை திறந்து பார்க்க கூடாது அது உன் அண்ணனை பார்ப்பது போல அப்படின்னு சொல்லிட்டார் 'உன் சகோதரனின் மனைவியை நிர்வாணமாக்காதே; அது உன் சகோதரனின் நிர்வாணம்' (லேவியராகமம் 18:16) என்று பைபிள் சொல்கிறது. மன்னர்களும் அவர்களது குடும்பங்களும் கூட கத்தோலிக்க சட்டங்களை கடைபிடிப்பதில் விதிவிலக்கல்ல.
உலகமே அசந்து போன காய் நகர்த்தல்கள் அப்போதுதான் நடந்தது எட்டாம் ஹென்றி எல்லாத்துக்கும் ரெடி ஆயிட்டான் அவன கட்டிக்கிபோற பொண்ணு அதைவிட கெட்டிக்காரி மதமாவது மயிராவது எல்லாத்தையும் புடுங்கி வீசிரலாம் என்ற எண்ணத்தில் 
போப் ஆண்டவருக்கு ஆப்ப சொருகி வச்சுட்டா நாங்க ஆறு மாதமா ஒண்ணா இருந்தோம் ஆனா எங்களுக்குள்ள நடக்க வேண்டியது நடக்கல அதுக்கு நான் தான் சாட்சி அப்படின்னு சொல்லிட்டா 
கத்தோலிக்க திருச்சபை எப்படி அண்ணன் பொண்டாட்டியை கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொன்னச்சோ அதே மாதிரி ,அசிங்கமா இருக்கும் உன் நடு விரலை உள்ள விடலைன்னா அது உன் மனைவி இல்லை அப்படின்னு அதே கிறிஸ்தவன் தான் சொல்லி இருக்கு ,போப்பாண்டவர் ஜெர்க் ஆயிட்டார் ஸ்பெயின் மன்னர் மகளை இங்கிலாந்து ராணியாக தான் பார்க்க வேண்டும் என்று அவர் நடத்திய கதையை யாராவது படம் எடுத்தா 500 நாள் ஓடும் அவ்வளவு பெரிய கதை அது பொண்ணு விதவை ஆயிட்டா ஆனா அவ சொல்றா நான் ராணியா தான் வருவேன் ராஜாவுக்கு ஒன்னும் புரியல சரி அந்த ஊர்ல உன்னை அம்பாசிடரா ஆக்கிரேன் அப்படின்னு சொல்லி அங்கே ஒரு மாளிகை அவளுக்கு சம்பளமும் கொடுத்து இருந்தார் இது ராணி மங்கம்மா சபதத்துக்கு முன்னோடி இந்த வழியில் போராடி, கேத்தரின் 1509 இல் இளவரசர் ஹென்றி VIII இன் கையைப் பிடித்தார். அவரும் அதே ஆண்டு ராணியானார்.
கேத்தரினுக்கு அடுத்தடுத்து குழந்தைகள் , ஆனால் அனைவரும் பெண்கள்.மேரி என்ற பெண் குழந்தையைத் தவிர மற்ற அனைத்தும் பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டன.

 இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் எட்டாம் ஹென்றி அவன் தான் ஹீரோ. அவனே தான் வில்லன் அப்படித்தான் வரலாறு சொல்லுது,அவன் போப்பாண்டவரை எதிர்த்து இனி  கிருஸ்தவ தேவாலயங்கள் மன்னருக்கு மட்டுமே கட்டு பட்டவை   அந்த காலத்துல ரொம்ப பெரிய விடயம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம் 
இவருக்கு ஆண் வாரிசு வேண்டும் அது மட்டும் இல்லாம இவருக்கு இன்னொரு பெண் மேல காதல் இரண்டாவது திருமணம் செய்வதற்கு சமஸ்கிருதத்தில் மந்திரம் இல்லை அதே மாதிரி தான் கிறிஸ்தவத்திலும் மந்திரம் இல்லை 
சரியான நேரத்துல இரண்டு பேர் கூட இருக்காங்க ஆலோசனை சொன்னாங்க இவரும் காய் நகர்த்திட்டார் என்னன்னா ஆகப்பெரும் அழிச்சாட்டியம் பண்ணி கல்யாணம் பண்ணிய அன்னே போலின் ராணிக்கு ஆண்குழந்தை பிறக்கவில்லை ஆனா அவங்க தனக்கு பிறந்த பெண் பிள்ளையை தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் அவள்தான் இங்கிலாந்தின்  முதல் ராணி அவள் தான் ஒட்டுமொத்த இங்கிலாந்து சாம்ராஜ்யத்தையும் கட்டமைத்தவள்


அப்போ இந்த எட்டாம் ஹென்றிக்கு உதவி செஞ்சது ரெண்டு பேரு அதுல ஒருத்தர் வந்து தாமஸ் குரோம் வெல், இவர் இங்கிலாந்துக்கான கத்தோலிக்க பேராயர் அதாவது பிஷப், இன்னொருத்தர் தாமஸ் கிரைனர் இவர் வந்து மன்னரோட மந்திர சபையில் முதலமைச்சர் இரண்டு தாமஸ் சேர்ந்து ராஜாவை குதிரையில் உட்கார வச்சு காதல் தேர்ஓட்டிட்டாங்க

 

கேத்தரின் மூத்த சகோதரி, ஸ்பெயின் ராணி.

ரோமானியப் பேரரசர் ஐந்தாம் சார்லஸின் நெருங்கிய உறவினர் இவர்களது திருமணங்களைப் பார்த்தால் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கும்.

கேத்தரின். கத்தோலிக்க நாடுகள் அவளுக்குப் பின்னால் ஒருமித்து திரண்டன. போப் வன்முறை தாக்குதல்களை அனுப்பினார். ஸ்பெயினும் ரோமானியப் பேரரசும் கோபமடைந்து, தங்கள் பெண்களைக் கைகழுவுவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும்படி படைகளைச் சேகரித்தனர்.

தாமஸ் க்ரோம்வெல் வில்லத்தனம் செய்வதற்கான ஒரு யோசனையைக் கொண்டு வந்தார்.

கிரானரின் ஆதரவும்  இருந்தது. அந்த யோசனை இதுதான். பேசாமல் கத்தோலிக்க மதத்தை விட்டு வெளியேறினால் என்ன ?

இந்த யோசனை ஆரம்பத்தில் தீவிர கத்தோலிக்கரான ஹென்றியை அமைதிப்படுத்தவில்லை.

ஆனால் ராஜாவை சமாதானப்படுத்துவதற்காக குரோம்வெல்லுடன் அன்னே போலின் சேர்ந்தார்.

'அன்புக்கு முன் கடவுளை துண்டிக்க வேண்டும்' என்று அரசனும் ஒப்புக்கொண்டான்.

இந்த முடிவுக்கு காதல் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.

பதினைந்தாம் நூற்றாண்டில் கத்தோலிக்க எதிர்ப்பு உணர்வு கிறிஸ்தவர்களிடையே மெதுவாகப் பரவியது, பதினாறாம் நூற்றாண்டில் அது வடிவம் பெற்றது.


ஊழல் மற்றும் வழிபாட்டு சீர்கேடு கத்தோலிக்க மதத்தை பாதித்ததால், அதை சீர்திருத்த கத்தோலிக்கத்திலிருந்து மாற்று சிந்தனையாளர்கள் தோன்றினர்.

மார்ட்டின் லூதர் ஜெர்மனியிலும் வடக்கு ஐரோப்பாவிலும் சுற்றித் திரிந்தபோது ஒரு புராட்டஸ்டன்ட் சூறாவளியை உருவாக்கினார்.

அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் புராட்டஸ்டன்ட்டுகள் என்று அழைக்கப்பட்டனர்.

கத்தோலிக்க பாதிரியாரான மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மதத்தின் அனைத்து ரகசிய அறைகளின் சாவியையும் வைத்திருந்தார். ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினார்.

அவரது செல்வாக்கு உயர்ந்தது. மார்ட்டின் லூத்தரால் கட்டவிழ்த்து விடப்பட்ட புயலின் மூலம் குதிரை வண்டியில் இலவச சவாரி செய்யும் யோசனையை குரோம்வெல் வழங்கினார்.

இதன் விளைவாக, நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு கத்தோலிக்க மதம் மீண்டும் ஒரு பெரிய பிளவை சந்தித்தது.

சர்ச் ஆஃப் இங்கிலாந்தை உருவாக்கி அதன் தலைவராக எட்டாம் ஹென்றி மன்னரை நியமித்து வாடிகனைத் தூக்கி எறிந்த குரோம்வெல், அவரது விதியின் முரண்பாட்டைக் கொஞ்சம் கூடக் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஹென்றி பின்னர் குரோம்வெல்லைக் கொல்ல உத்தரவிட்டார், இவை அனைத்திற்கும் பிறகு, அன்னே போலின் எலிசபெத் என்ற மகளை பெற்றெடுத்தார். ஆனால் ஹென்றியின் காதல் குறையவில்லை. ஆண் குழந்தைக்காக தவம் செய்தார். வாடிகனின் , சாபமோ, ஐரோப்பிய மன்னர்களின் சாபமோ, பட்டம் பறிக்கப்பட்ட கேத்தரின் சாபமோ தெரியவில்லை.ஆனி பொலினின் காதலும் முடிவுக்கு வந்தது. அதுவும் ஒரு கோரமான முடிவு.

கேத்தரின் வெளியேறுவதற்கான ஒரே காரணம் அவரது குடும்ப செல்வாக்கு.

இல்லை என்றால் அவளையும் கொன்றிருப்பான்.

ஆனி பொலினின் தலையை துண்டிக்க ஹென்றி உத்தரவிட்டார்.

தங்களுடைய சொந்த சகோதரனுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறி சகோதரியும் சகோதரனும் தலை துண்டிக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் புராட்டஸ்டன்ட்  மதம். பல நூற்றாண்டுகளாக வேர்களை பரப்பிய கத்தோலிக்க மடங்கள் மற்றும் வானத்தில் உயர்ந்த தேவாலயங்கள் மறுபெயரிடப்பட்டன மற்றும் கத்தோலிக்க மதம் ஒரே இரவில் மங்கிவிட்டது. '

ஹென்றி 'மதத்தை கைவிட்டதால்' நாடு முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அவருக்கு எதிராக எழுந்தனர். ஆனால், உடம்பில் மட்டுமல்ல, அதிகாரத்திலும் பலமாக இருந்த ஹென்றியை யாராலும் எதிர்க்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த கத்தோலிக்கப் புரட்சிகளை ராணுவத்துடன் வீழ்த்தினார்.

காதலிப்பதும் மனைவிகளின் தலையை உருட்டுவதும் ஹென்றியின் விருப்பமான பொழுதுபோக்காக மாறியது. அன்னே பொலினுக்குப் பிறகு, ஒருவர் மட்டுமே அவரது வாளிலிருந்து தப்பினார், நான்கு மனைவிகளைக் கொன்றார். ஒரு பெண் மட்டும் ஆண் வாரிசைப் பெற்றெடுத்தார்.

வாரிசுக்கு எட்வர்ட் VI என்று பெயரிடப்பட்டது.

1547 ஆம் ஆண்டில், ஹென்றி VIII மரணப் படுக்கையில் விழுந்தபோது, ​​அவரது இரண்டு ஒன்றுவிட்ட சகோதரிகளான மேரி மற்றும் எலிசபெத் ஆகியோர் உடனிருந்தனர். ஒரு பதினாறு வயது மகன் ஆண் வாரிசாக அரியணைக்கு வந்தான். அப்படி வந்த பையன்

அப்பா படுத்தால் வீட்டில் உள்ள பல்லியும் சத்தமாக 'உச்' செய்யும் என்பது பழமொழி.

அந்த நேரத்தில், இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள கார்ன்வாலில் இருந்து ஒரு கத்தோலிக்க இராணுவம்,

லண்டனை நோக்கி ஆவேசமாக அணிவகுத்துச் செல்லவிருந்தது.

மதம் கலந்த மொழிப் பிரச்சனையே காரணம். அதுவரை பிரார்த்தனை மொழியாக இருந்த லத்தீன் மொழிக்குப் பதிலாக ஆங்கிலத்தையே நியமித்த அரசை கவிழ்க்க ஏழாயிரம் புரட்சிப்படையினர் தயாராக இருந்தனர்.

அவர்களின் வழியில் புராட்டஸ்டன்ட்கள் அழிந்தனர்.

ஹென்றி VIII இன் மகள் முதலாம் எலிசபெத் மகாராணி, தனது காலத்தில் ஆங்கிலேயக் கடற்படையை விரிவுபடுத்தி, இடையில் ஏற்பட்ட குறைபாடுகளை விரைவாகச் சரிசெய்ய எண்ணினார்.

கடற்கொள்ளையர்களை ஊக்குவிப்பதன் மூலம் நிறைய பணம் வந்தது, இங்கிலாந்து நாடு கடத்தப்படுவதற்கான விருப்பம் முன்னெப்போதையும் விட அதிகமாக இருந்தது.

இந்த காலகட்டத்தில்தான் இங்கிலாந்து ஒரு பெரிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தது.

அமெரிக்காவில் வர்ஜீனியா என்ற ஒரு பகுதி அவளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. கடைசி வரை அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை

அவளுக்காக காத்திருந்த பல மன்னர்கள் முதுமை அடைந்து திருமணம் செய்து கொண்டனர்.

கன்னி என்றால் ஆங்கிலத்தில் வர்ஜீனியா என்று பொருள், அவள் ஒரு கன்னிப் பெண்ணாக இருந்ததால், இந்த பெயரை அமெரிக்க மாநிலத்திற்கு வைத்தனர்

அவரது காலத்தில்தான் சிறந்த கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்களை எழுதி குவித்தார், இலக்கியமும் அவற்றை ஆதரித்தது.

1603 ராணி எலிசபெத் இறந்தால், அதாவது இந்தியாவில் அக்பர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்பர் என்று ஏன் பெயரிட்டார், முகலாயப் பேரரசின் விரிவாக்கத்தில் அவர் முக்கியமானவர்

ஆங்கிலேயர்களுக்கு அரசன் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பழமொழி.


அதாவது அவர்கள் போப்பை காலாவதி ஆக்கிவிட்டாலும் 

வழிபடுவதற்கு ஒரு அரசன் வேண்டும் என்று மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்

ராணி முதலாம் எலிசபெத் செத்துட்டாங்க அவங்க தான் கல்யாணமே பண்ணலையே அப்புறம் எப்படி வாரிசு ,

ஆனா இங்கிலாந்து காரனுக்கு  வீட்ல யாரையாவது ஒருத்தரை கும்பிட்டு தான் வேலை ஆரம்பிக்கணும், நம்ம ஊர்ல பிரேயர் என்று சொல்லுவாங்க அவங்க கும்பிடுவதற்கு ஏதாவது ஒன்னு வேணும் ,அப்படி முடிவு பண்ணி ஸ்காட்லாந்து மன்னர் இவங்களுக்கும் அவங்களுக்கும் ஏற்கனவே வாக்கா வரப்பு தகராறு இருந்தும் அவனை கூட்டிட்டு வந்து ராஜாவா உக்கார வச்சுட்டாங்க, முதல்ல ஜேம்ஸ் அவருக்கு பிறகு வந்த சார்லஸ் ஒன்னு அவர் வந்து தெளிவா இருந்தாரு என்னை வந்து இயேசு சொல்லி அனுப்பி இருக்கார் நீதான் இவங்கள ஆளணும் என்பதற்காக எனக்கு கீழ மந்திரிகள் எல்லாம் இருக்க கூடாது நான் சொல்றதுதான் நீங்க மூடிட்டு கேக்கணும் இல்லைன்னா உங்கள எல்லாம் வெட்டி கொன்னுருவேன் அப்படின்னு கரரா சொல்லி ,

12 மாதங்கள் யாரும் இல்லாம வெறும் வாய் உத்தரவு ஆட்சி நடந்தது ஆனால் அங்க ஒருத்தன் முளைச்சு வந்துட்டான் உலகத்தின் மன்னர் ஆட்சிக்கு எதிராக கழகம் செய்தவன் அவன் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது இங்கிலாந்தில் குரோம்வெல் ஏப்ரல் 25  1599 இல் பிறந்தான் கொஞ்சம் பணக்கார குடும்பம் அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனை விட அதிக செல்வாக்கு உள்ள இவங்க அப்பன் ஏன் சொல்றேன்னா அன்னிக்கு இங்கிலாந்தில் இருந்த பிரபுக்கள் சபைக்கு சாமானியெல்லாம் போக முடியாது இவன் ரெண்டு வாட்டி போயிருக்கான்


 

1628 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் என்பது இன்றைக்கு இருப்பது போல மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல பெரும் பணக்காரர்கள் பெரும் வியாபாரிகள் கூடிய சபை அது மன்னரைப் பார்த்து பயப்படாது கிட்டத்தட்ட நம்ம நீதிக்கட்சி மாதிரி 

மன்னருக்கு ஒரு ஓலை அனுப்புனாங்க இனிமே நீ எது செய்றதா இருந்தாலும் எங்களை  கேட்டு தான் செய்யணும் இதன் பொருள் மன்னர் இனிமேல் பாராளுமன்றத்தை கேட்டு தான் எதையும் செய்ய வேண்டும், 

ராஜா என்ன பண்ணாரு தெரியுமா  பாராளுமன்றத்தை கலைச்சிட்டார் இனிமே என்னை எதிர்த்து எவனும் கேள்வி கேட்கக் கூடாது அடுத்த 12 ஆண்டுகள் அவர் பாராளுமன்றத்தை கூட்டவே இல்லை நானே ராஜா நானே மந்திரி இந்த வார்த்தை அவருக்கு தான் பொருந்தும் 


இவரு ஸ்காட்லாந்தில்  இருந்து தான் இங்கிலாந்துக்கு மன்னரா வந்திருக்கார் ஆனா இவங்க பிறந்த ஊர்ல கிளர்ச்சி இங்கிலாந்துக்கு எதிரா அதை அடக்குவதற்கு இவர்கிட்ட காசு இல்ல நிதி திரட்டணும்னா அமைச்சரவை கூட்டணும் அமைச்சரவை என்பது ஒன்றுமில்லை பணக்காரங்க 

நாங்க உங்களுக்கு பணம் தருவோம் ஆனா நீங்க எங்களுக்கு ஒரு உறுதி தரணும் கேட்டார்கள் ராஜா ஒத்துக்கல 

அங்க ரெண்டு குரூப் உருவாச்சு ஒன்னு பணக்கார மந்திரிகள் இன்னொன்னு ராஜாவுக்கு கூஜா தூக்குற சில ஆள்காட்டிகள் ரெண்டு பேருக்கு நடுவுல நாலு ஆண்டு சண்டை ராஜா தோத்துட்டார் கூட்டிக் கொண்டு வந்து மரியாதையா அரண்மனையில் அடைத்து வைத்திருந்தார்கள் 

1646 ல சண்டை முடிஞ்சு சமாதானமா போகலாம்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க ஆனா மன்னர் அவருக்கு இருந்து ஆதரவோட தப்பிச்சு போயிட்டார் 

போனொரு சூடு பட்ட பூனை கொஞ்சம் வேகமா சண்டை போட்டது எல்லாம் 1649 ல ஒரு முடிவுக்கு வந்திருச்சு உலகம் முதன் முதலில் ஒரு மன்னரை பத்தாயிரம் பேர் முன்னிலையில் தலையை வெட்டியது, இவன் தலைய வெட்டின கதையை புத்தகமா வச்சிருக்காங்க கடைசியா குடித்த He drank a glass of claret wine  அவர் தன்னை வெட்ட போற கொலையாளி இடம் பேசிய கனிவான வார்த்தைகள் நான் மன்னன் தான் இருந்தாலும் என் தலைமுடி உனக்கு தொந்தரவாக இருக்கும் அதனால் இதை மலித்து தொப்பியோடு சேர்த்து வைத்துவிட்டு எனக்கு வலிக்காமல் ஒரே வீச்சில் வெட்டி விடு என்பது போன்ற நிறைய பேசியிருக்கிறார் 


அவர் பேசிய உணர்ச்சிகரமான பிரசங்கம் தலையை வெட்டியவன் வழக்கமாக செய்ய வேண்டிய மக்களிடம் தலையை தூக்கி காண்பித்து குற்றவாளியின் தலை இதுதான் என்று சொல்ல மறந்து விட்டான், அவனையும் மயக்கி விட்டார் மன்னர் அடுத்த 12 ஆண்டுகள் இவன் மகன் மன்னர் ஆகி விட்டான் என்ன கொடுமை தெரியுமா இவரை தலையை வெட்ட காரணமாக இருந்த மந்திரி Cromwell died of malaria in London in 1658.

 செத்து பொதச்சி பல வருஷம் ஆச்சு ஆனா அவன் பிணத்தை தோண்டி அவன் மண்ட ஓட்ட தூக்குல போட்டான் என்ன ஒரு வன்மம் இதெல்லாம் பாத்துட்டு தான் அமெரிக்காவுக்கு வந்தாங்க நம்ம ஆண்ட பரம்பரை அதனாலதான் இவங்க மன்னரும் வேண்டாம் மரியாதையான மந்திரிகள் போதுமுன்னு முடிவுக்கு வந்தாங்க

-------------------------------------------------------------
அமெரிக்காவுக்கு  முதல்ல போர்ச்சுகீஸ்தான் வந்தாங்க அதாவது நம்ம கோவாவில் இருக்கிற நாட்டுக்காரங்க அப்புறம் ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி ஏன் ரஷ்யா கூட நான்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் இன்றைக்கும் வாழ்கிறார்கள் அமெரிக்காவின் பூர்வ கூடிய செவிந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அடித்து துரத்தி ஒரு மூளையில் தள்ளி வைத்து விட்டார்கள் இதில் என்ன கொடுமை என்றால் இங்கிலாந்தில் சிறையில் வசதிகள் இல்லாமல் தன் நண்பன் ஒருவனுக்கு பெரியம்மை நோய் வந்து பாதிக்கப்பட்டதால் அது குறித்த விசாரணை அதிகாரியாக ஜேம்ஸ் வக்ளத்தோப் என்பவர் நியமிக்கப்பட்டு அவர் ஒரு அறிக்கை கொடுக்கிறார் இங்கே சிறையில இடம் இல்லாததால இந்த கைதிகளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ கொண்டு போய் தங்க வைக்கலாம் அங்கே நிறைய இடம் இருக்கிறது 



சிறை மீண்ட  குடிகளின் புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட்ட இடம்தான் ஜார்ஜியா இதே போல ஆஸ்திரேலியாவிலும் நடந்தது 

1607ல் மரியாதையான காலனி நாடாக இங்கிலாந்து உருவாக்கியது வெர்ஜினியா அதாவது இங்கிலாந்து மகாராணியின் பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு பிரதேசம் செளிமையான மண்வளம் மிக்க அந்தப் பகுதியில் புகையிலை பயிர் செய்கிறார்கள் இந்தியாவுக்கு கிழக்கு இந்திய கம்பெனி எப்படி கஞ்சா உற்பத்தி செய்து சீனாவுக்கு கடத்தியது அதில் முக்கியமான பங்கு நம்ம டாடாவுக்கு இருக்கு அதை பற்றி தனியா பேசுவோம் ஆனா 17 வது நூற்றாண்டில் அமெரிக்காவில் புகையிலை என்ற ஒரு போதையை அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து தான் 


அமெரிக்காவுல எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா வந்து ஆதிக்குடி செவிந்தியர்களை துரத்தினார்கள் அதில் சில  பேர வரலாறு மறக்க முடியாது சுனி பெரோசரா இந்த நாய் தான் இங்கிலாந்துக்கு ஒரு தகவல் அனுப்பி இங்க இருக்க ஆதிவாசி பெண்களை கற்பழிக்கவும் மதமாற்றம் செய்யவும் அனுமதி வாங்கியது 

இதெல்லாம் நடந்தது இன்றைய கலிபோர்னியாவிலும் அன்றைய ஸ்பானிஷ் கிறிஸ்தவ மதத்தால் நடத்தப்பட்டவை


மிஸ்ஸஸ் மேரி ரோல் அண்ட் சன் என்னும் அன்றைய பத்திரிகையாளர் இவர் கைதியாக ஆதிவாசிகளால் பிடித்துக் கொண்டு போகப் பட்டார் ஆனால் கண்ணியமாக நடத்தப்பட்டார் எந்த ஆண்களும் இவரை சந்திக்கவில்லை

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வந்து இறங்கிய ஆங்கிலேயருக்கு அப்போது அந்த பகுதியில் இருந்து ஆதிவாசிகளின் தலைவன் அவர் பெயர் இல்லை இது அவருடைய பதவியின் பெயர் நெசஸ் சூட் இவர் கொஞ்சம் இணக்கமாக இருந்ததால் அவரை ஆங்கிலேயர் மதித்தார்கள் ஆனால் இவர் மகன் பிலிப் எதுவும் ஆங்கிலேயர் வைத்த பெயர் தான் எதிர்த்தார் விளைவு இரு பக்கமும் நிறைய இழப்புகள் ஆங்கில கை ஓங்கியது அமெரிக்காவில் முதல் காலனி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது,

https://www.history.com/topics/native-american-history/tecumseh

அமெரிக்க பழங்குடி இன மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் Tecumseh

 தேக்கும் சே என்னும் மாமனிதர் முயன்றார் ஆனால் ஆங்கிலேயர் துப்பாக்கி முன்னாள் தோற்றுப் போனார்கள்

ஆண்ட்ரூ ஜாக்சன் இவர் அமெரிக்காவின் அதிபராகவும் இருந்தவர் துப்பாக்கி முனையில் ஆதிவாசிகளை இடம் பெயர்ந்தவர் அதனால் தான் இவர் பெயர் வரலாற்றில் மறைக்கப்பட்டது இப்படி புலம்பெயர்ந்து போன போது பல நூறு நாட்கள் பல ஆயிரம் மைல்கள் வழியில் நிறைய இறந்து போனார்கள் அதைக் குறிக்கும் வகையில் trail of tears என்று இன்றும் நினைவு கூறுகிறார்கள்

உலகப் போர் நடந்த போது அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து அவர்களோடு செவ்விந்திய வீரர்கள் 40 ஆயிரம் பேருக்கு மேல் போராடி வெற்றி பெற்று திரும்பிய பிறகு அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை அவர்களுக்கென்று தனியாக நிலங்கள் கொடுக்கப்படவில்லை ஓய்வு ஊதியம் இன்றி அனாதையாக தத்தளித்த வரலாறும் உண்டு

https://www.youtube.com/watch?v=Q7ZLyykdVjw 

ஓநாய் உடன் ஒரு நடனம் என்ற பெயரில் ஹாலிவுட், எடுக்கப்பட்ட படம் நிறைய விருதுகள் பெற்றது இந்த திரைப்படத்தில் பூர்வகுடி அமெரிக்க செவ்விந்தியர்களின் போர் முறை 50 சதவீதத்திற்கும் மேல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது இணையத்தில் படமும் கிடைக்கிறது 



Sand creek, பழங்குடியினர் இட ஒதுக்கீடு மூலம் பெற்று அமைதியாக வாழ்ந்த பகுதியில் குண்டுகளை வீசி காலி செய்த மட்டமான போர் இதற்கு உத்தரவிட்டவர் ஒரு கிறிஸ்தவ பாதர் அவர் பெயர் ஜான் ஜின்ஸ்டன்,

அமெரிக்காவின் மிகச்சிறந்த தளபதி என்று சொல்லப்படக்கூடிய ஆபிரகாம் லிங்கன் காலத்தில் கூட அவர்களுக்கு உணவு ரேஷனில் கிடைக்கவில்லை என்று போராடிய போது ஆதிவாசிகள் 35 பேரை பொதுமக்கள் முன்னிலையில் ஒரே நேரத்தில் தூக்கு போட்டது 

https://www.zinnedproject.org/news/tdih/execution-dakota/

லார்ட் நார்த் என்னும் பிரிட்டிஷ் நிதி அமைச்சர் உருவாக்கிய சட்டம் காலனி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு வரி விதிப்பு துறைமுகத்திலேயே வரி வசூலிக்கப்படும் இதில் இந்தியாவிலிருந்து ஓராண்டுக்கு தேவையான தேயிலை நான்கைந்து கப்பல்களில் பாக்ஸ் அண் துறைமுகத்திற்கு வந்திருந்தது செவ்விந்தியர்கள் போல உடை அணிந்து கொண்டு அமெரிக்க போராளிகள் அந்த தேயிலை மூட்டைகளை அள்ளிக் கடலில் எறிந்தார்கள் வரலாற்றில் இதுதான் பாக்சன் தேநீர் விருந்து என்று கூறப்படுகிறது   13 காலணிகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொன்றும் தமிழகம் அளவு சிறப்பான பொருளாதாரம், இதை பார்த்த இங்கிலாந்து அரசுக்கு அவர்களை சுரண்ட வேண்டும் என்று தோன்றிய திட்டம்தான் முத்திரை சட்டம் 1765 ஆம் ஆண்டு கிரேன் வில் Grenville என்ற பிரிட்டிஷ் அமைச்சர் கொண்டு வந்த சட்டம் நுட்பமானது அமெரிக்காவில் அவர்களின் எல்லா அரசு உத்தரவுகளும் பிரிட்டிஷ் முத்திரை குத்தப்பட்ட தாளில் இருக்க வேண்டும் என்பதுதான் அது

அதை எதிர்த்து அமெரிக்க இங்கிலாந்து மக்கள் எங்களுக்கு பாராளுமன்றத்தில் உரிமை இல்லாதபோது எங்களுக்கு எதிராக நீங்கள் எந்த சட்டமும் ஏற்ற முடியாது என்று வாதிட்டனர்


No taxation without representation https://en.wikipedia.org/wiki/No_taxation_without_representation

பின்னர் வந்து அமைச்சர் ராக்கிங் ஹாம் இது ரத்து செய்தார் ஆனால் குடியேற்ற நாடுகள் மீது வரி விதிக்கும் உரிமை பிரட்டனுக்கு உண்டு என்றார்

சட்ட அமைச்சர் பிரிட்டனுக்கு தேவையான நிதி உங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் ஏனென்றால் உங்களுக்கு ராணுவ பாதுகாப்பு கடற்படை எல்லாம் எங்கள் செலவில் போகிறது Paxon Tea Party பாக்சன் துறைமுகத்தில் தேயிலை பெட்டிகள் கடலில் எறியப்பட்ட பிறகு மசாசு அளிக்கப்பட்ட அத்தனை உரிமைகளையும் பிரிட்டன் ரத்து செய்தது இது போருக்கான அதிகாரப்பூர்வ காரணம்

https://en.wikipedia.org/wiki/Boston_Tea_Party

ஒருவழியாக குடியேற்ற நாடான 13ம் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் படையுடன் மோதின அப்போது அவர்களுக்கு ஒரு தளபதி தேவைப்பட்டார் தேடிப்பிடித்துக் கொண்டு வந்தவர் தான் ஜார்ஜ் வாஷிங்டன், இவரின் சிறப்பு என்னவென்றால் இங்கிலாந்து படை, அமெரிக்காவில் அவர்கள் எதிர்த்து போராடும் அமெரிக்க படை இரண்டும் ஒரே இனம் இன்றைக்கு போன்று தொடர்பு சாதனங்கள் இல்லாத காரணத்தால் இவர் பிரிட்டிஷ் இங்கிலாந்து ராணுவ உடை அணிந்து இங்கிலாந்து கொடி ஏந்திக்கொண்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கொள்ளையடித்தார் நுட்பமாக வரலாற்று ஆசிரியர்கள் இதை பதிவு செய்கிறார்கள் , இப்போது ஏனைய பிற நாட்டு காலனி இவரிடம் ஒத்துழைக்கவில்லை இவர்கள் கை ஓங்கிய பிறகு வேறு வழியின்றி பிரான்ஸ் ,ஜெர்மன், போர்ச்சுகல், ஐரோப்பிய ,சிறு குரு காலனிகள் அனைத்தும் உதவிக்கு வந்தன ,

ஆதிவாசிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வந்து நிலம் ரவுடிகள் வசனம் போனது அதிக விலைக்கு விற்பனையானது

https://www.nam.ac.uk/explore/american-war-independence-key-battles#:~:text=But%20the%20defeat%20finally%20convinced,independence%20of%20the%20United%20States

இங்கிலாந்து தன் காலனி நாடுகளுக்கு என்னென்ன அரசியல் சாணக்கியத்தனத்தை அறிமுகப்படுத்தியதோ அதையெல்லாம் திருப்பி செய்தார்கள், அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்து போராளிகள் அதிலும் குறிப்பாக தலைக்கு விலை பேசுவது அதிகாரத்தை ஏலம் இடுவது இது இங்கிலாந்து அரசு செய்ததை விட ஒரு படி மேலே எப்படி என்றால் இங்கிலாந்து படையை எதிர்த்து சண்டை போட்ட தளபதி தான் அன்றைக்கு இருந்த காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் தலைவர் பின்னர் அவர்கள் தான் கவர்னர் ஆனார்கள் இப்படி 30 கவர்னர்கள் அதில் சில பேர் ஓராண்டு முறையில் அதிபராகவும் இருந்தார்கள் அவர்கள் பெயர் வரலாற்றில் இல்லை அவர்கள் தான் இந்த ஏழு பேரும் எட்டாவது நபராகத்தான் ஜார்ஜ் வாஷிங்டன் வருகிறார் ஆனால் ஏன் இவரை முதல்வராக அமெரிக்கா சொல்கிறது என்றால் மீதம் ஏழு பேரும் நியமனப் பதவியில் வந்தவர்கள் யாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை அவர்கள் கட்சிக்குள் ராணுவ தளபதி மூன்று பேர், பெரும் செல்வந்த தொழிலதிபர் 4 பேர் இந்த ஏழு பேரில் பணக்காரர்கள் அதிகம் ஆண்டதால் அதற்கடுத்து வந்த ஜார்ஜ் வாஷிங்டன் பெரும் பணக்காரர் வாஷிங்டன் டேனியல் பார்க் கஸ்டிஸின் விதவையான மார்த்தா டான்ட்ரிட்ஜை (ஜனவரி 6, 1759) மணந்தார். அவர் அவரை விட சில மாதங்கள் மூத்தவர், இரண்டு குழந்தைகளின் தாய் மேலும் வர்ஜீனியாவின் கணிசமான செல்வங்களில் ஒன்றைப் பெற்றிருந்தார்.


 ஆனால் இவருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை ,இப்படி உலகத்திற்கு தெரியாமல் அந்த ஏழு பேரையும் மறைக்க வேண்டிய அவசியம் வேறொன்றும்   இல்லை 1783 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற அமெரிக்கா அப்போது ஜனநாயகம் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை ,என்னவென்றே தெரியாது மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் முறை என்று ஒன்றை உலகத்திற்கு சொல்லிக் கொடுத்தது, ஜார்ஜ் வாஷிங்டன் தேர்வின் போது தான், அப்போதும் ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில இருந்தது போல வரிக்கட்டும் நபர்கள் பெரிய மனிதர்கள் மட்டும்தான் ஓட்டு போட்டார்கள், வரும் தேர்தலில் கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளி பெண் நிற்கிறார் தேர்தலில் நிற்கும் இரண்டாவது பெண்மணி இதற்கு முன்பு கிளாரி கிளின்டன் போட்டியிட்டார் அதிக ஓட்டு பெற்றார் புள்ளி இரண்டு சதவிகிதம் அதிகம் ஆனாலும் எலெக்ட்ரோல் முறைப்படி அவருக்கு அதிக ஓட்டு இருக்கும் இடம் எதிராகப் போனதால் அவர் தோல்வியை சந்தித்தார் இப்ப ஏன் இது என்கிறீர்களா அது ஒன்றும் இல்லை அங்கே பெண்களுக்கு ஓட்டுரிமை 1920 இல் தான் வந்தது ஆப்பிரிக்க அடிமை வம்சத்துக்கு ஓட்டுரிமை வழங்குவதில் மாகாணங்கள் நிறைய அழிச்சாட்டியம் செய்தார்கள்

1789 ஆம் ஆண்டு தான் ஒரு ஏப்ரல் மாதம் ஜார்ஜ் வாஷிங்டன் பதவி ஏற்றார் உண்மையில் முதல் அதிபர் ஜான் ஹான்சன் அவர் 1783 ஆம் ஆண்டு பதவியேற்றார் இந்த ஓராண்டு பதவியில் கடைசியாக  Gyrus Griffin என்ற நபர் தான் அமெரிக்க காங்கிரஸ் கூட்டமைப்பின் நியமன கடைசி அதிபர் இவர் அதன் பிறகு வழக்கறிஞராக சில காலம் வெர்ஜீனியா மாகாண நீதிபதியாகவும் பணியாற்றினார்

அமெரிக்க வரலாற்றில் மறைக்கப்பட்ட முதல் அதிபர் ஜான் ஹான்சன் இவரைப் பற்றி ஏன்னா அழுத்திச் சொல்றேன்னா அப்போது உலகத்தில் மன்னர்களுக்குள் சண்டை நடந்து கொண்டு இருந்தது, ஆனால் இவரு ஐரோப்பா கண்டத்தில் இருந்து அத்தனை பேரும் அமெரிக்காவில் வந்திருந்தான் ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தை சும்மா தட்டி விட்டுட்டு வெறும் 13 மாநிலம் இவங்க எல்லாம் இங்கிலாந்து இருந்து வந்தவர்கள் இவங்களை வச்சு ஒட்டு மொத்த அமெரிக்காவுக்கும் ஒரு கரன்சியை உருவாக்கி ஒரு கொடியையும் உருவாக்கி இன்னைக்கு இருக்குற பென்டகன் கட்டிடத்தை உருவாக்கி அமெரிக்கா என்ற ஒரு தேசத்தை கட்டமைத்த மாமனிதன் அதனாலதான் இவனுங்க முக்கியமான இடத்துல அவருக்கு சிலை வைத்திருக்கிறார்கள்








 


Thomas Mifflin, Richard Henry Lee , Nathaniel Gorham, Arthur St. Clair, Cyrus Griffin,

Cyrus Griffin a Virginia lawyer and politician, was the final President of the Congress of the Confederation and first United States district judge of the United States District Court for the District of Virginia.[

 

https://en.wikipedia.org/wiki/President_of_the_Continental_Congress

 

https://www.britannica.com/event/American-Revolution/Conflict-begins-in-Massachusetts

https://en.wikipedia.org/wiki/John_Hanson

 

 

1804 இல் பன்னிரண்டாவது திருத்தம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு வாக்காளர்களும் இரண்டு வெவ்வேறு வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியானார், அதே நேரத்தில் இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்

துணை ஜனாதிபதி ஆனார்.

வாஷிங்டன் சுதந்திர அமெரிக்காவின் முதல் அதிபராக காங்கிரஸ் நியமித்தது

இங்கிலாந்துக்கு எதிராக போர் செய்து நாடு அடைந்து விட்டார்கள் ஆனால் அந்தப் போர் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லை அதை பயன்படுத்திக் கொண்டார் வாஷிங்டன்

ராணுவ வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லாத நாடு உருவாக்கிய டாலர் இன்று உலகம் புல்லா சுற்றுவதற்கு காரணம் முதலாளித்துஅமெரிக்காவின் முதல் அதிபர் கட்டி வைத்தது தான், இன்றைக்கு இருக்கும் அமெரிக்காவின் அனைத்து கட்டுமானமும் ஓராண்டுகள் தான் அதிபராக இருந்தார்

, வாஷிங்டன் வந்த பிறகு அவரைக் கொண்டாடுகிறார்கள்,

விஸ்கி வரி விவசாயிகள் மீது வசூலிக்க வேண்டும் என்று வாஷிங்டன் சொன்னபோது தாமஸ் செபரசன் அதை கடுமையாக எதிர்த்தார் அளவுக்கு அதிகமாக விவசாயிகள் மீது வரி விதிக்க கூடாது என்று கூட்டணி நண்பர்களும் கூறியும் கேட்கவில்லை வாஷிங்டன்,

அடுத்ததாக ஒரு தேசிய வங்கி வேண்டும் என்று சொன்னார் செபரசன் அதையும் எதிர்த்தார்,

 

 விஸ்கி வரி எப்படி என்றால் ஒரு கேலன் என்பது நாலரை லிட்டர் அப்போது லிட்டர் பயன்பாட்டில் இல்லை அதற்கு ஆறு சென்ட் 1700 களில் வரி அதுவே ஆயிரம் கி கேலன்க்கு மேல் உற்பத்தி செய்பவர்களுக்கு நாலு சென்ட் இது கார்ப்பரேட் வரி,

எப்படி என்றால் பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை இதை எதிர்த்து சாராயம் காய்ச்சுகிற அந்த ஊர்ல அதுக்கு பேரு விஸ்கி எந்த ஊரா இருந்தாலும் அரசுக்கு எதிரா சாராயம் காய்ச்சறவங்க ரொம்ப தீவிரமா இருப்பாங்க அதை அமெரிக்காவும் புரிந்து கொண்டது அப்போது வரி வசூல் செய்ய ஊருக்கு வந்த ஜேம்ஸ் என்பவரை குதிரைகளை எல்லாம் கழற்றிவிட்டு அவர் அணிந்திருந்த ஆடைகளை களைந்து அம்மணமாக ஓட விட்டார்கள் விஸ்கி உற்பத்தியாளர்கள்,

அவர்கள் பெண் வேடம் அணிந்து இருந்ததால் அவரால் அடையாளம் காட்ட முடியவில்லை இதற்கு ஒரு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது விசாரணைக்கு ஆஜராகும் படி நம்ம ஊர் வழக்கப்படி தாண்டவரா போடுறது அப்படி தண்டோரா போட வந்தவரை ஆடையை கலைந்து மரத்தில் கட்டி வைத்தார்கள்,

அவரும் வேலையை விட்டு ஊருக்கு போய் விட்டார் இன்னொரு பெரிய மனிதரை அந்த ஊர் ஜமீன்தார் சப்போட்டோட ஊருக்கு வரி வசூல் செய்ய அனுப்பிய போது பெண்களையும் குழந்தைகளையும் வெளியேறச் சொல்லிவிட்டு அவர் கொண்டு வந்திருந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாவற்றையும் தீ வைத்து கொளுத்தி அவரையும் அடித்து துரத்தி விட்டார்கள் இது நான்காண்டுகள் நடந்தது கடைசியில் இரண்டு பேரை குற்றவாளியாக நிறுத்தி விசாரணை செய்து அவர்களுக்கும் பொது மன்னிப்பு கொடுத்தது அன்றைய அமெரிக்க அரசு அதிலிருந்து விஸ்கி வரி தளர்த்தப்பட்டது இப்போதும் சொல்கிறேன் ஏழைகள் அவர்கள் விரும்பும் படி காட்சி குடுக்க விட்டுருங்க எல்லாருக்கும் சொல்றேன்




*ஹாமில்டன் ஃபெடரலிஸ்ட் கச்சி என்று பிரிந்து போனார் *செபர்சன் ரிபப்ளிக் கட்சி என்று இன்னொரு கட்சித் தலைவரானார் இப்படித்தான் அமெரிக்காவின்  இரண்டு கட்சி உருவானது

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஆபிரகாம் லிங்கன் வகுத்த மூன்று வழிகள் மட்டும் நேர்மையானவை 

https://www.britannica.com/event/Whiskey-Rebellion

ஹேமில்டன் என்கிற கட்சி நீதி செயலாளர் பண பற்றாக்குறையை சரி செய்ய விஸ்கி வரி விதிக்க பரிந்துரைக்கிறார் இதை அமல்படுத்தும் போது பெரிய சிக்கல் வருகிறது பென்சிலவேனியா மாநிலத்தில் அங்கே விஸ்கி காசு அவர்கள் பெரும் பணக்காரர்களும் உண்டு சாமானியரும் உண்டு எல்லோருமே முரடர்கள் அவர்களிடம் வரி வசூலிக்கச் சென்ற ராபர்ட் ஜான்சன் என்பவரை பெண் வேடம் அடைந்த 10 பேர் அம்மணமாக்கி அவர் குதிரை வண்டிகளை எடுத்துக் கொண்டு காட்டில் விட்டு விட்டு வந்து விட்டார்கள் அவர் இரண்டு பேரை அடையாளம் காட்டி அவர் மீது வழக்கு தொடர்ந்தார் அதற்கு சம்மன் கொடுக்க வந்த இன்னொரு அதிகாரி சான் கார்னர் இவரை மாட்டு வண்டியில் வந்தார் வண்டியை பிடுங்கிக் கொண்டு மரத்தில் கட்டி வைத்து விட்டார்கள் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு கட்சி ரெண்ட் ஆனது தான் மிச்சம் வரிவிதிப்பு நீக்கப்பட்டது வரி வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் அவமானப்படுத்தப்பட்டு அந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைசியில் இரண்டு பேரை மட்டுமே குற்றம் சாட்டி விசாரணை செய்து அவர்களையும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தது வாசிங்டன் தலைமையிலான அமெரிக்க அரசு

 

 

ஆனால் உலகிற்கு வெளியில் தெரியாத மிக அயோக்கியத்தனமான ஒரு செயலை அமெரிக்க அரசு அந்த நாட்டு பூர்வ குடிகளான செவிந்தர்கள் மீது நடத்தியது ,

ஒரு நாடு வளமாக இருக்க வேண்டும் என்றால் நிலம், நீர், தங்கம், இரும்பு, பெட்ரோலியம், போன்ற இயற்கை வளங்கள் அவசியம் அனைத்தும் அமெரிக்காவில் கொட்டி கிடந்தது பதினெட்டாம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்த ஐரோப்பாவை சேர்ந்த பல நாட்டவர் தனித்தனியாக சிறு நகரங்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் மக்கள் தொகை குறைவு இயற்க்கை வளங்கள் அதிகம் தானாகவே வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள், வெளிநாட்டில் இருந்து வருவோரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற அமெரிக்கா, சொந்த நாட்டு மக்களை அதுவும் காடுகளை சீர்படுத்தி விவசாய நிலமாக ஆக்கிய பிறகு அங்கிருந்து அவர்களை கொன்று அப்புறப்படுத்தியது ,அமெரிக்காவில் நவீன எந்திரங்கள் மூலம் விவசாயம் செய்யப்படும் நிலங்கள் அனைத்துமே செவிந்தியர்களால் செம்மைப்படுத்தப்பட்ட நிலங்கள் தான் , நவீன இயந்திரங்கள் உதவியுடன் விவசாயம் செய்ய பழகிய உடன் அவர்கள் வேறு வழிக்கு திரும்பினார்கள், 1874 இல் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ள பிளாக்கில் எனப்படும் மலைத்தொடரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த ஆதி குடிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தெருக்களில் வீசப்பட்டனர் 


இந்தப் போரில் அமெரிக்க தளபதி பிளாட்டினன்ட் கலோனல் ஜார்ஜ் கஸ்டரை செவிந்தீர்கள் தோற்கடித்தனர் இருந்தும் 24 மணி நேரத்தில் அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் கான்சன் ,கொலராடோ ,நியூ மெக்சிகோ, டெக்ஸாஸ் ,என பல இடங்களில் இதே போன்று செவ்விந்தியர்களை துரத்திவிட்டு அங்கு குடியேறியதுதான் கொடுமை 1890 இல் தெற்கு டகோட்டாவில் போரில் சரணடைந்த 500க்கும் மேற்பட்ட செவிலியர்களை வரிசையாக நிக்க வைத்து சுட்டுக் கொன்றது தான் ஆகப்பெரும் தவறாக பார்க்கப்படும்

ஒரு வழியாக 1880 செவிந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒக்கலகமா பகுதியை ஆக்கிரமிக்க விரும்பிய தொழிலதிபர்களுக்கு அரசு உதவி செய்ய முன்வந்தது காரணம் அவர்கள் அந்த நிலத்தை வளமாக உழுது செழித்த பூமியாக வைத்திருந்தார்கள்

இது வரலாற்றில் , the last land rush என்று வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது போருக்கு பிறகு ஒக்கலஹாமா வீதியெங்கும் பிணங்கள்

எல்லாம் முடிந்து 1901 ஆம் ஆண்டு செவ்விந்தர்களுக்கு முறைப்படி அமெரிக்க குடியுரிமை வழங்கி விட்டார்கள் மற்றொருபுறம் அக்கம்பக்கத்து காலடி நாடுகளின் குட்டி பிரதேசங்கள் நம்ம ஊர் கோவா பாண்டிச்சேரி மாதிரி இருந்த ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்காவை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள், டெக்ஸாசெய் வளைத்து போட்டு மெக்சிகன் அரசை அடித்து துரத்தி விட்டு ஐக்கிய அமெரிக்காவுடன் இணைத்து கொண்டார்கள், இப்படி ஐரோப்பியர்கள் தனித்தனியாக இருந்ததையெல்லாம் ஒன்று சேர்த்து பெரும் நாடாக உருவாக்கிய பெருமை அந்த ஊர் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தம்

 





Comments

Popular posts from this blog

அரசியலில், இலக்கியத்தில், காலம் தோறும் பெண்கள்-1

கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamilnadu-1

இன்றைக்கு பிஜேபி செய்கிற வேலைகளை ஆரம்பித்து வைத்த காங்கிரசின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்