கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamil Nadu -3


 கலைஞரும் பட்டியல் இனமக்களும் 

Hostels

2006-11ல் மட்டும் ரூ.63 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 131 ஆதிதிராவிடர் மாணவ,மாணவியர் இலவச தங்கும் விடுதிகள் உருவாக்கம்,

 வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த 106 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 8 பழங்குடியினர் விடுதிகளும் புதிய அரசுக்கு சொந்தமான இடங்களில் உருவாக்கம், 2006-11

Employment

ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவம் மாறிய ஆதிதிராவிடர் மக்களில் 1 லட்சத்தி 2 ஆயிரத்தி 672 பயனாளிகளுக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, ஜேசிபி இயக்க பயிற்சி, மின்பணியாளர், சி மெக்கானிக், டீசல் மெக்கானிக் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு பயிற்சிகள் திட்டம், 2006-2011

ஆதிதிராவிடர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி சிறப்பு திட்டம் - ஆண்டுதோறும் 850 பேருக்கு பயிற்சி, 1997

686 இடைநிலை ஆசிரியர்கள், 447 பட்டதாரி ஆசிரியர்கள், 117 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 27 கணினி ஆசிரியர்கள், 24 இளநிலை உதவியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவும், 20 இளநிலை உதவியாளர்கள் கருணை அடிப்படையிலும், 3 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் & 21 தட்டச்சர்கள் தேர்வாணையம் மூலமாகவும், 15 தட்டச்சர்கள் கருணை அடிப்படையிலும், 363 சமையலர்கள், 97 காவலர்கள், 7 பணிமேற்பார்வையாளர்கள் பணி நியமனம், 2006-11

 பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் நேர்காணல் மதிப்பெண் 15லிருந்து 7 ஆக குறைப்பு

 ஆதி திராவிடர் தொழில் முனைவோர் சிறப்பு திட்டம், 1989

 தூய்மை பணியாளர்கள் மறுவாழ்விற்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், 2007

Welfare Boards

தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம், 2006-2011

(1 லட்சத்து 12 ஆயிரத்து 149 உறுப்பினர்கள், ஆண்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு)

தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம்

(ஆண்டுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு)

 பழங்குடியினர் நல வாரியம் அமைப்பு, 2006-11

(ஆண்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு)

 

Marriage and Funeral

 திருமண நிதி - ரூ.3000 செலவில் திருக்கோயில்களில் இலவச திருமணம், 1997

 ஈமச்சடங்கு உதவித் தொகை

(ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவம் மாறிய ஆதிதிராவிடர் - ரூ.500/- 1990)

 இதுவே ரூ,2500/- ஆக உயர்வு, 2010

Ambedkar Specials

 அண்ணல் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரி, 1972

 ஹாமில்டன் பாலம் அம்பேத்கர் பாலம் என்று பெயர் மாற்றம், 1972

 சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டல், 1990

 அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலை கழகம், 1997

 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெயரை ரூ.225 லட்சம் செலவில் கல்வி அறக்கட்டளை வைப்பு நிதி, 1997

 அண்ணல் அம்பேத்கர் விருது - ரூ.1 லட்சம் பரிசு, 1998

 அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம், 2000

இது எல்லாவற்றையும் விட கூடுதல் சிறப்பாக 2006-11 திமுக ஆட்சியில் மட்டும் ஆதிதிராவிடர் நலனுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய்.

அதிலும் குறிப்பாக 2010-11 பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டில் 19.7 சதவிகித நிதி ஒதுக்கீடு ஆதிதிராவிடர் & பழங்குடியினர் மேம்பாட்டு திட்டங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது 

திராவிடத்தை, திமுகவை, கலைஞரை விமர்சிப்போர் எவரேனும் இதற்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்த இயக்கத்தையோ, திட்டங்கள் தீட்டிய தலைவரையோ, செயல்படுத்திக்காட்டிய கட்சியையோ, ஆட்சியையோ இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது காண்பித்தால் அது நாமும் நம் அறிவினை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

#கலைஞரும் - #காமராஜரும்


காமராஜ் என்ற பெயரை காமராஜர் என்றே இனி குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் கலைஞர்.

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர்.

சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் கலைஞர்.

சென்னை கிண்டியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர் கலைஞர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றித் தந்தார்.

காமராஜர் பிறந்த வீட்டை நினைவில்லம் ஆக்கியவர் கலைஞர்.

      கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர்.

நெருக்கடி நிலையின் போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரை கைது செய்ய முடியாது, என் ஆட்சியைக் கலைத்து விட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதை செய்யட்டும் என்று சொன்னவர் கலைஞர்.

மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து தன் மகன் ஸ்டாலினுக்கு அவர் தலைமையில் திருமணம் செய்து வைத்தவர் கலைஞர்.

காமராஜர் மறைந்த அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாக தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை ஒதுக்கி தயார் செய்து தந்தவர் கலைஞர்

*      தமிழகத்திலயே முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது திமுக மட்டுமே. சென்னை மாநாகராட்சியை திமுக கைப்பற்றிய போது பெரியார் பாலத்திற்கு அருகே காமராஜர் சிலை அமைத்து அதை நேருவைக் கொண்டு திறந்து வைத்தது திமுக

       காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதை உணர்ந்து 25/07/2010 அன்று காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் கலைஞர்.

       தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், "அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்என்று பெயர் சூட்டியதும் தலைவர் கலைஞர்.

       திமுக அரசின்பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்குசிவகாமி அம்மையாரின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார் கலைஞர்.

      

      பெருந்தலைவரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்குப் பொருத்தமான வாசகத்தைக் கேட்ட நிலையில்

      உழைப்பே உயர்வு தரும்என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மயோகி காமராஜருக்குப் பெருமை சேர்த்தார்.

       நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

       காமராஜர் பெயரில் தபால் தலை வெளியிட கலைஞர் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது

       காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி 'பெருந்தலைவர் காமராசர் விருது' சமூகப்பணி செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது

      கண்ட கண்ட வாட்ஆப் பதிவைப் பரப்பும் இளைஞர்கள் இந்த வரலாற்று நிகழ்வுகளை பலருக்குத் தெரியச் செய்வதே பெருந்தலைவர் காமராஜருக்கான உண்மையான புகழ் வணக்கம்

#கல்வி/ Education:

. பெண்களை படிக்க ஊக்குவிக்க, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 5,000 வழங்கியது. பிறகு அதனை 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 10,000 என்று உயர்த்தி வழங்கியது கலைஞர்.


பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கியது.



ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்


. MGR மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்


இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்


. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


 பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்



. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்


உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர்

முதன்முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர்

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கியது.

உருது அக்காடமி தந்தது கலைஞர்

பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்தது கலைஞர்

அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூரில் உருவாக்கியது கலைஞர்

முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்

சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்

மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர்

பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்

இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்
காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்

பள்ளிகள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிக்க விடுதிகளை நிறுவியவர் கலைஞர்.

உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்

உலகதரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முன்மாதிரி பள்ளி வேண்டும் என்ற திட்டமிட்டு, முதலில் புதுக்கோட்டையில் ஆண்களுக்கு ஒரு பள்ளி  பெண்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி என்று ஆரம்பித்தவர் கலைஞர்.


#மொழி/ Language

முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்


திருக்குறளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது கலைஞர்.




#பாதுகாப்பு/ Police

இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

மகளிர் காவலர்களை நியமித்தவர்.

சிறைச்சாலை சீர்திருத்தம் செய்தவர்.

புழல் சிறைச்சாலை கட்டியவர்.


#சாலைவசதி/ Road and Rail

1000 நபர்கள் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்

கிராமங்கள் மற்றும் நகரங்களின் வீதிகள் தோறும் கான்கிரீட் சாலை அமைத்தவர் கலைஞர்

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்

சென்னை - மதுரை மின்மய இரட்டை வழி ரயில்பாதை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர்.

#போக்குவரத்து/ Transport:

போக்குவரத்து துறையை உருவாக்கியவர் கலைஞர்

பேருந்துகளை நாட்டு உடமயமாக்கியவர் கலைஞர்

கிராமங்களில் சிறிய பேருந்து சேவையை கொண்டுவந்தது கலைஞர்

போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கிய கலைஞர்

பேருந்து கட்டணத்தை ஏற்றாமல் 13,000 புதிய பேருந்துகள் வழங்கியவர் கலைஞர்


#மின்சாரம்/ Electricity:

மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

நெய்வேலி இரண்டாம் அலகு அனல் மின்நிலையம் கொண்டுவந்தது கலைஞர்

தூத்துக்குடி அனல்மின் நிலையம்.



எண்ணூர் அனல்மின் நிலையம் 3, 4வது அலகு




காடம்பாறை நீர் மின் நிலையம்.

காற்றாலை மின்சாரம் ஆரம்பித்து வைத்தவர் கலைஞர்.

1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர்

தொழிற்சாலைகளுக்கு தேவையான மின் வழித்தடம்.

#தொழிற்சாலைமற்றும்வேலைவாய்ப்பு/ Industries and Job Opportunities:

SIPCOT உருவாக்கியது கலைஞர்

SIDCO உருவாக்கியது கலைஞர்


சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்



பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்

பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்

தொழிற்சாலைகளுக்கு வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்

முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர் 

 Automobile companies, Automobile testing centres உருவாக்கியது.

Electronic manufacturing companies, Saint Gobain கண்ணாடி தொழிற்சாலைகள் கொண்டு வந்தவர்

டைடல் பார்க் சென்னையில் அமைத்தது கலைஞர்

புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர்










புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை ஈர்த்து 41,090 கோடி முதலீடை கொண்டு வந்தவர் கலைஞர்.

37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்

4. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர் .

13,000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர்

முதல் முறையாக 10,000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர்

TNPSC உருவாக்கி, அண்ணன், தம்பி, மாமன், மச்சான்களை வேலையில் அமர்த்தியதை தடுத்து, முறையாக எல்லோருக்கும் பணி கிடைக்க வழி செய்தவர் கலைஞர்.

#அரசுகட்டிடங்கள்/ Government Buildings:

மதுரை நீதிமன்றம் உட்பட 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்

மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்

அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்

420 பேரூராட்சிகள் உருவாக்கி "அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர்

ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்

ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்

சென்னையில் 20 மேம்பாலங்கள் மற்றும் 200 அடி வெளிவட்ட சாலை உருவாக்கியது கலைஞர்

21 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுக்கா மற்றும் யூனியன் கட்டிடங்களை கொடுத்தவர் கலைஞர்

ஆசியாவிலே மிக பெரிய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைத்தது கலைஞர்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உட்பட பல புதிய பேருந்து நிலையங்களை நிறுவியவர் கலைஞர்.

















1962  சட்டமன்றத் தேர்தல்
அறிஞர் அண்ணா, அன்பழகன், ஏவிபி ஆசைத்தம்பி  போன்ற 14 பேர் அடுத்த 1962 தேர்தலில் ,காமராசர் நிறுத்திய பணக்காரர்கள் மூலம் பணமும் சில வாக்குறுதிகளும் சத்தியங்களும் பெறப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்  ஒருவருடையத் தலை மட்டும் தப்பியதுஅது நம்ம தல ஆனால் அவர் தனியாகப் போகவில்லைஉடன் 49 பேர்அதாவது 15 பேர் இப்போது 50 பேராக ஆகிவிட்டது 

தான் சந்தித்த இரண்டாவது பொதுத் தேர்தலியே எதிர்கட்சியாக உயர்ந்துவிட்டது திமுக.

தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால்  தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்".... "நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு   தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்என்று பரிசுத்த நாடார் சவால்   விடுகிறார்இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக   வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர் எந்த வித எதிர்வினையும்   ஆற்றாமல்  அமைதி காக்கிறார்,

காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல்  அறிவிப்பு வெளியாகிறது திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அண்ணா பட்டியல்  தயாரிக்கிறார்இதனை அறிந்த கலைஞர் அண்ணாவிடம் சென்று "நான்  இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை தஞ்சாவூரில் போட்டியிட  போகிறேன்என்று கூறுகிறார்அதிர்ச்சியான அண்ணா "தஞ்சையில்  பரிசுத்த நாடார்  அல்லவா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால்   வெற்றி பெற முடியுமாஎன்று கேட்கிறார்.

"இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு  சரியான களம்தான் இந்த தஞ்சை களம்இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம்   எனவே எனக்கு தஞ்சையை தாருங்கள்என்று வேண்டி விரும்பி #தஞ்சையில் போட்டி இடுகிறார் கலைஞர்.

https://tamil.oneindia.com/news/chennai/karunanidhis-election-campaign-345517.html 
 

தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர்.

ஆசைத்தம்பி_கோவிந்தசாமி விருத்தாச்சலம் செல்வராஜ் மா..சாரதி  களம்பூர்அண்ணாமலை #நடிகர் ஆனந்தன் அன்பில்தர்மலிங்கம்  மன்னைநாராயணசாமி பிஎஸ்சந்தானம் இசப்பன் என திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு  போகிறார்கள்

இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில்  கருணாநிதி. 32,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் (காங்கிரஸ்) 1, 928 வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதியிடம் தோல்வியை தழுவினார்




Comments

Popular posts from this blog

அரசியலில், இலக்கியத்தில், காலம் தோறும் பெண்கள்-1

கலைஞர் கருணாநிதி #Father Of Modern Tamilnadu-1

இன்றைக்கு பிஜேபி செய்கிற வேலைகளை ஆரம்பித்து வைத்த காங்கிரசின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்