அரசியலில், இலக்கியத்தில், காலம் தோறும் பெண்கள்-1
இலக்கியத்தில் பெண்கள் ஒரு பார்வை
பாரதியும், தந்தை பெரியாரும்
கற்பு என்ற வரும்பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலை வைப்போம் என்றார் பாரதி.
கற்பு என்பதே முட்டாள்தனம் என்று சொன்னவர் பெரியார்
திரௌபதியை தெய்வமாக கருதி பாஞ்சாலி சபதம் என்று காவியம் எழுதியவர் பாரதி. காவிய நாயகி கண்ணகியை கிண்டலடித்து பெண்களை தெய்வமாக்குவது புனிதம் ஆக்குவது இந்த புண்ணாக்கு எல்லாம் தேவையில்லை என்று போட்டு உடைத்தார் பெரியார்
பாரதியாருக்கு திருமணம் நடந்த போது அவரது மனைவி செல்லம்மாளுக்கு வெறும் ஏழு வயது
பெரியார் தனது 70 வது வயதில்1948 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி மறுமணம் செய்து கொள்கிறார், பெரியார் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மணியம்மையாருக்கு 32 வயது இவர் சொத்தை பாதுகாப்பதற்காக திருமணம் செய்து கொண்டார் அப்போது பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது மனைவிக்கி இருந்தது அதனால் தான் அந்த திருமணம்
பாரதியின் மனைவி செல்லம்மாள் தனது 32 வது வயதில் விதவையாக ஒரு பாட்டியாக இருந்தார் அதே வயதில் மணி அம்மையார் மாபெரும் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் இங்கு தான் இருவரும் பெண்ணுரிமை பேசினார்கள் நுட்பமாக பெரியார் ஒரு படி மேலே நிற்கிறார்,
1)பதியிலார் அல்லது வரைவின் மகளிர் எனப்படும் திருமணம் இல்லாப் பெண்டிர் குறித்த செய்திகள் சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை தொடர்ச்சியாக நமது இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. விறலியர், கணிகையர், வேசையர், காமக் கிழத்தியர், விலைமகள், கொண்டி மகளிர் எனப் பலவாறான பெயர்களில் அழைக்கப்படும் இவர் களுக்குள் நுண்மையான வேறுபாடுகள் இருப்பினும் மூன்று வகைப்பாட்டிற்குள் இவர்களை அடக்கலாம்.
குறிப்பிட்ட எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆடல், பாடல் இவற்றில் வல்லவராகி அதன் மூலம் ஓரளவு சமூக மரியாதையுடன் இருந்தவர்கள் ( விறலியர், கணிகையர்).
திருமணம் இல்லாமல் குறிப்பிட்ட ஒருவனிடம் வைப்பாக வாழ்ந்தவர்கள் ( காமக் கிழத்தியர்).
பலரிடமும் உறவு கொண்டு வாழ்ந்தவர்கள் (விலைமகளிர்).
2)"பரத்தையராவார் யாரென் அவர் ஆடலும் பாடலும் வல்லவராகி அழகும் இளமையும் காட்டி, இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டும் தங்காதவர்""
என வரையறுப்பார் இளம்பூரணர் (தொல்-பொருள் கற்பியல். சிவலிங்கனார் பதிப்பு, பக்கம் : 179)
3). சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரை உள்ள பதியிலார் குறித்த பதிவுகள் எள்ளளவும் மாற்றமின்றி ஒரே மாதிரியாக இருப்பது வியப்பிற்குரிய ஒன்று. தொல்காப்பியர் முதல் திருவாரூர் தங்கராசு வரை பதியிலார் குறித்த ஒரே பார்வையை திருப்பித் திருப்பி எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கராசுவின் "இரத்தக் கண்ணீர் கதை ''நாலடியாரி'லேயே பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது."ஆமா போல் நக்கி அவர் கைப்பொருள் கொண்டு சேமா போல் குப்புறூ உம் சில்லைக்கண் அன்பினை ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே நாமாம் பலரால் நகை' (நாலடியார்: 38-8)
எளிதில் பொருள் விளங்கக் கூடியதுதான். காட்டுப் பசுபோல நக்கிச் சுகமளித்துக் கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் கணிகை, எல்லாம் கவர்ந்தபின் காட்டு எருது போலப் பாய்ந்து விலகி(வேற்றாளிடம்) சென்று விடுவாள். அவளது இந்த அற்ப அன்பை உண்மை என நம்பி ஏமாறுகின்றவரது வாழ்க்கை பிறரால் நகைக்கக் கூடியதாய் இழிவுறும் என்பதே அப்பொருள்.
4). பதியிலார் பற்றிய ஆண் நோக்கிலான பார்வைகள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன என்பதையே இவை காட்டு கின்றன. தலைவி அல்லது கற்புடை மகளிர் எனப்படும் குடும்பப் பெண்ணின் "மாற்றாக"ப் (other) பதியிலார்கள் நிறுத்தப்படு கின்றனர்.
''தம்மேனி நோக்கார் தலையுணரார் கைந்நொடியார் எம்மேனி யாயினும் நோக்கார் தலைமகன் தன்மேனி அல்லாற் பிற'
என்பது ஆசாரக்கோவை (பாட்டு 88) தலைவிக்கு விதிக்கும்
5). பதியிலார் மாயம் செய்பவராகவும், பொருளைக் கவருகிறவராகவும், ஆணின் வாழ்வை நகைப்புக் கிடமாக்குபவர் போலவும் சித்தரிக்கப்படுவது ஒரு புறம். இந்தச் சித்தரிப்புகளில் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்கள் குடும்பப் பெண்களை சித்தரிக்கப் பயன்படும் சொற்களி லிருந்து வேறுபட்டு நிற்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் நோக்கில் கறைபட்ட தமிழ் நமது ஆண் புலவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கிறது. ஏறுதல், விரித்தல், பன்னாடை, சேட்டை போன்ற சொற்கள் பரத்தையர் குறித்த பாடல்களில் அதிகம் இடம் பெறுவது கவனிக்கத்தக்கது. அதிகம் விளக்கம் தேவையிராத- காளமேகப் புலவரின்-சில சிலேடைப் பாடல்கள்
வருமாறு.
"கட்டித் தழுவுதலால் கால் சோர ஏறுதலால் ,எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும் வேசை எனலாமே விரைந்து'
(பாடல் 227)
தென்னை - வேசி
''பாரந் தலைவிரிக்கும் பன்னாடை மேல்சுற்றும் சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரே மேல் ஏறி இறங்கவே இன்பமாம்; தென்ன மரம் கூறும் கணிகை என்றே கொள்".
"கொள்ளுகையால் நீரில் குளிக்கையால் மேல் ஏறி கிள்ளுகையால், கட்டிக் கிடக்கையால், தெள்ளு புகழ்ச் செற்றலரை வென்ற திருமலைராயன் வரையில் வெற்றிலையும் வேசையாமே".
கூத்தாடும் பெண்கள் - குரங்கு
''ஓட்டம் கடியதால் உள்ளவரை மேவுதலால் சேட்டை எவரிடத்தும் செய்தலால்- நாட்டமுடன் காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலால், தெட்டுதலால் கூத்தியர்க்கு நேராம் குரங்கு".
(பாடல் 231)
காளமேகம் போன்ற பிற்காலப் புலவர்கள் மற்றும் தனிப்பாடல் ஆசிரியர்களின் குறும்பு என இவற்றை ஒதுக்கிவிட முடியாது. நமது புனித இலக்கியத் தொகுப்பில் வேறு பல இடங்களிலும் பாலியல் உருவகம் சார்ந்த சொல்லாட்சிகளுடன் ஆணியல் நோக்கில் பதியிலாரின் பெண் உறுப்புகள் இழிவு செய்யப்படுவதற்கு பரி பாடலிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு:
"மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தை துற்றுவதுற்றும் துணையிதழ் வாய்த் தொட்டிமுற்றா நறுநறு மொய்புனலட்டிக் காரிகை நீரேர் வயல் காமக்களி நாஞ்சில் மூரி தவிர முடுக்கு முதுசாடி"
(பாடல் 20, வரிகள் 49-54)
பொருள்: காமத்தைப் பொய்யோடும் கூட்டி விற்கும்
கணிகையே, ஒருத்தனுக்கே உரிமையின்றி பலர்க்கும் பொதுமையுடையாய்! ஐம்புல நுகர்ச்சியைப் பெறும் காமுகராகிய பன்றிகள் நுகர்கின்ற தொட்டியே. கள்ளாகிய நீரைவிட்டு காமமாகிய கலப்பையால் எம்முடைய எருது சோம்பக் கிடவாமல் உழுகின்ற பழைய சாலே!
பன்றிமேயும் தொட்டி, முதுசாடி, கலப்பையால் உழுதல் போன்ற பாலியல் உருவகம் சார்ந்த சொற்கள் பயன்படுத்துவது
இங்கு கவனிக்கப்படத்தக்கது நமது போற்றுதலுக்குரிய வள்ளுவர் கூட சாக்கடை என்னும் பொருளில் அளரு போன்ற சொற்களை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது இருமன பெண்டிர் பொதுநலத்தார் போன்ற சொற்களையும் பொய்யா மொழி யார் கையாளுவது கவனிக்கத்தக்கது இனக்குழு இணைந்த பொது என்னும் இனிய அழகிய சொல் மரபுத்தமிழில் சற்றே தெளிவாக குறிப்பிடப்படுவது மனம் கொள்ளத் தக்கது கல்வெட்டுகளில் பொது நீக்கி என்கிற குறிப்பிட படுவதும் பொது நீக்கி அரசு ஆளுதல் மூவேந்தரின் சிறப்பாக சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது
6).பதியிலார் குறித்த கோட்பாட்டு ரீதியான பார்வைகள் இத்தகையதாக (மாயப்பரத்தையர்) இருப்பினும், இலக்கியப் பிரதிகளில் இடம் பெறும் பரத்தையர், பதியிலார், காமக் கிழத்தியர் முதலியோர் இந்தப் பிரதிகள் ஆண்களால் உருவாக்கப்பட்டவையாயினுங்கூட- பண்புமிக்கவர்களாகவும் அன்பு நிறைந்தவர்களாகவும் காட்சியளிக்கின்றனர்.இவர்களை வையும் குலமகளிரோ கொடுஞ்சொல் பேசுபவர்களாகவும் வன்னெறியாளர்களாகவும் இருப்பதற்கு மேற்குறித்த பரிபாடல் முதல் இன்றைய தி.ஜானகிராமன் (மோகமுள்) வரை சான்றுகளாகின்றனர். நல்லந்துவனாரின் இப்பரிபாடல் (பாட்டு 20) முழுவதிலும் தலைவியும் அவளது கூட்டத்தாரும் பேசுகிற வசவுகளையும் (வைது உரைத்தல்கள்) அதற்குப் பரத்தையின் பதிலுரையையும் காண்க. ஒரு எடுத்துக் காட்டு: தன் தந்தை தனக்கு ஈந்த இடுவளை, ஆரப்பூண் முதலியவை பரத்தையிடம்இருந்ததைக் கண்ட தலைவி அவளை மாயக் கள்வி என ஏசுவதையும் அதற்கு அந்தப் பரத்தை,"நின் அன்பன் எனக்கும் அன்பன்; அவன் கள்வன், நானல்ல எனப் பொறுமையாய்ப் பதிலிறுப்பதையும் அறிக.
தலைவி கூற்று
'அ..சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்! நீ வாய் வாளா;
எந்தை எனக்கு ஈத்த இடுவளை, ஆரப்பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தனை தந்தே தருக்கு'
பரத்தையின் மறுமொழி
'மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின் கால் சிலம்பும் கழற்றுவான்; சால,அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்: கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்'
7). பதியிலாரை எழுதுவதில் வைதீக மரபிலான நூற்களிலிருந்து அவைதீக மரபிலான நூற்கள் வேறுபட்டு நிற்பது குறிப்பிடத்தக்கது. இவையும் ஆண்களால் எழுதப்பட்ட பிரதிகளேயாயினும், ஆணியல் பார்வைகளே இவற்றில் ஊடாடி நிற்பினும் மணிமேகலை, சிலம்பு, நீவகேசி. குண்டலகேசி முதலாய சமண, பவுத்த மரபிலான நூற்கள் பதியிலாரின் இருப்பிற்கு அனுதாபத்துடன் கூடிய இடமளிக் கின்றன. கணவனுக்குத் துரோகமிழைத்த சாலியின் மகன் ஆபுத்திரனும், கணிகையின் மகள்
8).தமிழ் இலக்கிய மரபில் பெண்களின் குரல் அதிகம் பதிவாகவில்லை என்பதை நாம் அறிவோம். அப்படிப் பதிவான குரல்கள் அனைத்தும் பதியிலாதார் அல்லது பதியை உதறியவர்களின் குரலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. காட்டாக, ஆண்டாள், காரைக்காலம்மையார், காளிமுத்து முதலானோரைச் சொல்லலாம். அவ்வை, காக்கை பாடினி, நச்சென்னை, வெள்ளிவீதி முதலானோர் கூட பதியுடையவர் களாகப் பதிவுகள் இல்லை. பாணர்,விறலியர் மரபில் வந்திருக்க வேண்டும். குடும்ப நிறுவனத்திற்கு வெளியே இருக்கும் மகளிரே அறிவாளிகளாக (intellectuals) முடியும். இதற்குத் தமிழ் மண்ணில் இரு முக்கிய எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டத்தக்கன.
முத்துப்பழனி : பெண்ணின் உணர்வுகளை முதன்மைப்படுத்திப் பாடிய பெண்பாற் புலவர் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மன் அவையில் புலவராகவும் கணிகையாகவும் வீற்றிருந்த முத்துப் பழனி. பேரழகி, பெரும்புலவர். "ராதா சாந்தவனம்' என்கிற இனிய தெலுங்குக் காதல் பிரபந்தத்தை எழுதியவர். இலக்கிய அழகிலும் காதற் சுவையிலும் விஞ்சி நிற்கும் இச்சிறு காவியத்தில் ராதை காதலிக்கப்படுபவளாக மட்டுமின்றி காதலிப்பவளாகவும் காதல் விளையாட்டில் முன்கை எடுப்பவளாகவும் சித்திரிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நூலைப் பதிப்பித்தவர் இன்னொரு கணிகை. பெங்களூர் புட்டலஷ்மி அம்மாள் மகள் வித்யா சுந்தரி நாகரெத்தினம்மாள். திருவையாற்றில் தியாகையருக்கு சமாதி எடுத்த இவ்வம்மை இந்நூலின் பதிப்புரையில் கணிகையர் குலத்தில் பிறந்த ஒரு பெண்மணியால் அக்காவியம் பாடப்பட்டது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து முன்னுரை எழுதியுள்ளார். ஒரு கணிகை எழுதிய காமரசப் பாடல் எனக் கண்டித்து அந்நூலைத் தடை செய்வதிலும் வெற்றி பெற்றவர் தெலுங்குச் சீர்திருத்தவாதியும் நாவலாசிரியருமான கந்துகூரி வீரேசலிங்கம்.
என்னும் வரிகளும், மதுரைக் காஞ்சியில்
"ஆய்கோல் அவிர் தொடி விளங்க வீசிப் போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ." கே (563, 564)
எனச் செல்லும் வரிகளும் மேற்குறித்த கூற்றுக்குச் சான்றுகளாய் அமையும்.
தமிழ் சினிமாக்கள் பெண்களை இப்படி சித்தரித்தது புகழ்பெற்ற பெரியாரிஸ்ட் ரத்தக்கண்ணீர் கதாசிரியர் நடிகர் ஆனால் அந்தக் கதை பேசும் அரசியல்
திருவாரூர் தங்கராசு பற்றிச் சொன்னேன். அவரது புகழ்பெற்ற நாடகம் “ரத்தக் கண்ணீர்” இப்பிரதி வேசையைத் தமிழ் மரபு வழி நின்று இழிவு செய்கின்றது. எல்லாவற்றிலும் மரபை மீறிய பெரியாரின் வழிவந்தவர்களிடம் அடிநாதமாய்க் குடிகொண்டுள்ள ஆணியல் ஒழுக்கவாதப் பார்வைக்கு இது ஒரு சான்று. தேவதாசி முறையை ஒழிப்பதற்கான இயக்கம் நடத்தியவரும், தமிழின் தொடக்க நாவலாசிரியர்களில் ஒருவரும் பொட்டுக் கட்டும் குலத்தில் தோன்றியவருமான மூவலூர் இராமமிர்தம் அம்மையும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பொட்டுக்கட்ட மறுக்கும் உரிமைக்காகப் போராடிய பெருமைக்குரிய இவ்வம்மை ஒரு பெண்ணின் இலட்சியம் குடும்பப் பெண்ணாக இருப்பதுதான் என்கிற நோக்கில் தன் நாவலைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. "தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்" என்கிற நாவலின் தலைப்பே இதற்கொரு சான்று. ஒழுக்கவாதப் பார்வைகளில் ஆர்.எஸ்.எஸ். காங்கிரஸ், பொதுவுடைமை, தமிழ்த் தேசிய இயக்கங்களிடையே எந்தப் பெரிய, ஏன் சிறிய வேறுபாடுகளும் கூட இல்லை என நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிற கருத்து பலருக்கு உவப்பாக இல்லாத போதிலும் அதுவே உண்மை.
பதியிலாத பெண்டி ரைச் சற்றே அனுதாபத்துடன் பார்த்த நோக்கென்பது இந்த நூற்றாண்டின் தற்கால இலக்கியங்களில்தான் காணக் கிடைக்கின்றது. விரிவாகப் பேச சாத்தியமில்லை என்பதால் இரு முக்கிய பிரதிகளை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இரண்டும் இடதுசாரி நிலைபாடுகளைத் தமது தொடக்க நிலையில் கொண்டிருந்த இரண்டு எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை. ஒருவர் ஜெயகாந்தன் ("இலக்கணம் மீறிய கவிதை”); மற்றவர் ஜி.நாகராஜன் (“குறத்தி முடுக்கு") மற்றும் "நாளை மற்றுமொருநாளே )
இரு பிரதிகளிலும் வேசியரின் இருப்பு அங்கீகரிக்கப் படுகிறது. தமிழ் மரபிலிருந்து விலகி பருஞ்சமாகக் காட்டாமல் அன்பு கூர்ந்த மனிதப் பிறவிகளாகப் படைக்கின்றனர். எனினும் இவ்விரு பிரதிகளுக்குள்ளுமுள்ள ஒரு நுணுக்கமான வேறுபாடு இங்கே கருதத்தக்கது."
ஜெயகாந்தனின் நாயகி ஒரு வேசியாயினும் அவளின் சிறப்பு அவளிடம் குடும்பப் பெண்ணின் பாங்குகளிரும். பணிவிடைகளும் நிறைந்திருப்பதே. எனவே அவளில் "நம்மை" அடையாளம் காண்பதே ஜெயகாந்தனின் பூரிப்பின் அடிப்படையாக இருக்கிறது. அந்த வகையில் அவளது வேசி என்னும் இருப்பு கேவலமாக உணர்த்தப்படுகிறது. ஆக மீண்டும் குடும்பப் பெண்ணே இலட்சிய மாதிரியாக உணர்த்தப்படுகிறாள். ஜி. நாகராஜனின் நாயகிகள் மட்டுமே வேறு எந்தப் புனிதங்களுமின்றி வேசிகளாகவே படைக்கப் படுகின்றனர். வேறு எந்த இலட்சிய மாதிரிகளும் அவர்கள் மீது ஏற்றப்படுவதில்லை. வேசிகளின் இருப்பில் நம்முடைய தன்னிலை, ஆணாதிக்க மதிப்பீடுகள் என்பன அதிர்வுக் குள்ளாகின்றன.
சமகாலப் பெண்ணியப் பிரதிகள் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டியவை. குடும்ப நிறுவனம், ஆணாதிக்க ஒழுக்க மதிப்பீடுகள் முதலிய ஆணியல் பார்வைகளை உள்வாங்கிக் கொண்டவர்களால் எழுதப்படும் பிரதிகள் - அவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் - அவை பெண்ணிலை நோக்கிற்கு எதிரானவைகளாகவே உள்ளன.
1. தூதுத்திரட்டில் (1957 பதிப்பு, பக்: 106,107) காணப்படும் வேசியர் பற்றிய ஒரு விவரணம் :
"கங்க மங்கலத்திலே கட்ட பொம்மு மாணிக்கம் கொங்கை வயிற்றில் விழுந்து கூத்தாட - அங்கதையும் காட்டாது இளைஞர்கள் கட்டியணை நற்காமக் கோட்டாலை கொண்டு பணம் கூட்டுகிறாள் - நாட்டமாய் மிக்க தென் திருப்பேரை மின்வயிரமுத்து பெரும் செக்கது போல் ஆகியும் பொன் தேடுகிறாள் - செவ்வாணன் இரட்டைத் திருப்பதி ஊரிலிருக்கும் குப்பியின்மை வெட்டை கொடுத்தேனு நிதி வேண்டுகிறாள்''
வயதான பின்பும், மேகநோய் பீடித்த பின்பும் பணம் பறிக்கும்ம், காழி குவசியர் சித்தரிக்கப்படுவதும். மாணிக்கம், வயிரமுத்து, குப்பி, சிலம்பி, வல்லி, கூத்தாள், கலைச்சி, திம்பி, தஞ்சி, கமலாட்சி, ஆவுடை, மனோன்மணி என்றெல்லாம் பெயர் சொல்லி இழிவுபடுத்தப்படுதலும் குறிப்பிடத்தக்கன.
அவைதீக மரபின் வேறுபட்ட பார்வைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு புத்தர் - அம்பபாலிகை கதை
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வெங்கட்ராமையாவின் "மராட்டியர் கால சமூக வாழ்க்கை" பற்றிய நூலில் தென்படும் சில செய்திகள்.
(அ) 5-8-1825 : 'அங்கு' என்பவளின் மகள் 'நாகு' ரெசிடென்ட் துரைக்கு மரியாதை தராததற்காக 2 பணம் அபராதம் விதிக்கப்படுகிறாள்.
(ஆ) 17-2-1846 : தஞ்சை மேலவீதி கொங்கணேசுவரர் கோவிலுக்கு அடுத்த சந்தில் இருந்த ராவ் சாகிபு சிதம்பரம் பிள்ளை, அலிகாணா சந்தில் இருக்கும் வெள்ளாளர் அப்புபிள்ளை பெண்சாதியின் பெண் காவேரியை கிரயத்திற்கு வாங்குகிறார்.
(இ) அப்புராவ் காடிகேயின் வைப்பாட்டி பெண் சீதாபாய் (வயது 10), நாடகசாலை கிருஷ்ணாவின் பெண் செல்லம் (வயது 10) ஆகியோரை சர்க்கார் கிரயத்திற்கு வாங்கிக் கொள்கிறது.
தேசீய அரசியலில் பெண்கள் பிரச்சினை
தமிழ்நாட்டில் தோன்றிய காலனீயத்திற்கெதிரான தேசீய இயக்கத்தின் (ஆண்கள் மயமான) தலைமையின் "பெண்கள் பிரச்சினை " தலைமையின் பார்வைகளை விளக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸின் இரு முக்கிய தலைவர்களான எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் திரு.வி.க. ஆகியோரது பார்வைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டுத் தேசீய அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய கருத்தியல் போக்குகளின் வகை மாதிரிகளாக இவை அமைந்துள்ளன. ஒரு சனாதனப் பார்ப்பனர் என்கிற வகையில் தமிழக காங்கிரசில் மேலாதிக்கம் செலுத்திய தலைமையின் மாதிரியாகவும் பிரதிநிதியாகவும் விளங்குகிற சத்தியமூர்த்தி, தாம் செயலூக்கத்துடன் விளங்கிய அரசியல் வாழ்க்கை முழுவதிலும் பெண்கள் பிரச்சினைகளில் வெளிப்படையாகக் கவனம் செலுத்தினர். இதேபோல திரு.வி.கவும் பெண்கள் பற்றி அதிகம் எழுதியவர். அறிவுபுகட்டும் நோக்கில் எழுதப்பட்டவை அவை. காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாததலைவர் என்கிற வகையில் திரு.வி.கவின் அரசியலுக்கு ஒரு மாறுபட்ட ஏற்புச் சூழல் இருந்தது.
பெண்கள் பிரச்சினையில் சத்தியமூர்த்தி
தொழில்நுட்பக் கல்வி பெறுவது அவசியம் என்றார்'
ஹிந்தி ஆங்கிலம் சமஸ்கிருதம் தமிழ் சிறிது உலக வரலாறு புவியியல் குடும்ப சுகாதார முறைகள் இசை ஓவியம் போன்றவற்றை பெண்கள் கற்கலாம் என அவர் பரிந்துரைத்தார். ச.மூ. பரிந்துரைத்த பெண் கல்வி பாடத்திட்டம் அவர்களை வீட்டோடு கட்டிப் போடுவதைத் தான் நோக்கமாகக் கொண்டதேயொழிய வேலை என்கிற பொதுவெளியில் அவர்கள் இயங்குவதை அல்ல உலக இலட்சியப் பெண்ணை அடையாளம் காட்ட ச.மூ வால் பயன்படுத்தப்பட்ட வீடு வெளி உலகம் என்னும் இருமை மற்றும் அவர் கட்டமைத்த தாய்/ மனைவி என்கிற இலட்சிய மாதிரிகள் என்பன வீட்டுக்குள்ளேயே தமது செயற்பாடுகளை முடித்துக் கொள்ளாத ஒரு பெரும் பெண்கள் பகுதியை ஒதுக்கியது. சாதி அடுக்கில் கீழ் மட்டத்தில் உள்ள பெண்கள், வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டை விட்டு வெளியே சென்று உழைக்க வேண்டிய பெண்கள் ஆகியோரை ச.மூ வின் வரையறை விலக்கி விளிம்புக்குத் தள்ளியது.
பார்ப்பனீய தந்தை வழி சார்ந்த இந்தக் கட்டமைப்பே ச.மூ பொதுவாழ்வில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கை களின் அடிப்படையாக இருந்தது. பெண்மை குறித்த அவரது இந்தக் கட்டு மானம் ஒருவனுக்கு ஒருத்தி (monogamous sexual- ity) என்பதாகப் பாலியலை வரையறுத்துப் போற்றியது.
1929ம் ஆண்டு சென்னை சட்டமன்றத்தில் “குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்” அறிமுகம் செய்யப்பட்டது. காங்கிரஸில் அன்று தீவிரமாய்ச் செயற்பட்டுக் கொண்டிருந்த
தனிப்பட்டவரின் அந்தரங்க வாழ்விலிருந்து (Private Life) மேற்கத்தியக் காலனீயத் தலையீட்டை விலக்கி வைக்க வேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது. அதாவது அந்தரங்க வாழ்வு காலனீயப்படுத்தப்படாத "வெளி" (space) யாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் "மரபு" என்பதன் மூலமாகச் செயற்படும் இந்திய ஆண்களின் அதிகாரத்துக்குக் கீழ் இந்த வெளி அமைய வேண்டும். ச.மூ. வைப் பொருத்த வரை இந்து,பார்ப்பனீய, சனாதன மரபே சுதேசிய இந்தியக் கலாச்சாரம். இந்தக் கலாச்சாரம் குடும்பம் என்கிற "அந்தரங்க வெளியில்" (Private space) பாலியலை நெறிப்படுத்துகிறது; திருமணம் இத்தகைய நெறிப்படுத்தலின் ஒரு அங்கம். இதில் பொது நிறுவனங்களான (Public Institutions) நீதிமன்றங்களோ, சட்டமன்றங்களோ தலையிடக் கூடாது. தவிரவும் இந்த நிறுவனங்கள் மேற்கத்தியப் பண்பாட்டின் உருவாக்கங்கள். "இந்து திருமண முறிவுச் சட்டம்" என்ற விவாகரத்துச் சட்டம் குறித்த ச.மூ வின் நிலைபாடும் சுதேசி x மேற்கத்திய என்கிற இருமையை வலியுறுத்தியது. விவாகரத்து என்பது அருவருக்கத் தக்கது, இந்துக்களுக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கித் தள்ளினார் ச.மூ
காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட மக்களின்
பாலியலை நெறிப்படுத்தும் அதிகாரத்தை காலனீய அரசுக்கு
மறுப்பதற்காகவே மணஉறவு தொடர்பான சட்டங்களில் ச.மூ
மேற்குறித்த நிலைபாடுகளை மேற்கொண்டார். ஆனால்.
காலனீயர்களின்/மேற்கத்தியர்களின் சாராம்சமான பண்பாக
சத்திய மூர்த்தியால் அடையாளம் காணப்படும் பூப்புக்குப்
பிந்திய திருமணம், திருமண முறிவு உரிமை போன்றவை
தமிழக அடித்தளச் சாதியினரின் சமூக உறவுகளில் இரண்டறக் கலந்திருந்தவை. எனவே ச.மூ.வின் சொல்லாடல் மேற்கத்தியப் பெண்களை மட்டுமின்றி அடித்தளச் சாதிப் பெண்களையும் ஒரே அடையாளங்களுடன் உருவகப்படுத்துகிறது; கட்டமைக் கிறது. இவ்விரு பிரிவினரையுமே தேசீயத்தின் "லட்சியப் பெண்" என்ற வகைப்பாட்டி லிருந்து ஒதுக்கி வைக்கிறது. ஒருதாரக் குடும்பத்தை (Monogamous family) இந்தியாவின் சாராம்ச அடையாளமாகச் சித்தரித்தபோதும், இத்தகைய குடும்ப நியதிக்கு வெளியே இயங்கிய தேவதாசி முறையை
எனவே மீண்டும் குடும்பம் தான் நியதி என்பதே அவரது மையக் கருத்தாக இருக்கின்றது. எனினும் புதிய சட்டம் ஏதும் தேவையில்லை என அவர் சட்டமன்றத்தில் வாதிட்டார். பாலியல் தொழில் நடைபெறும் விடுதிகள் மற்றும் வீடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாநகர காவல்துறைச் சட்டத்தின் 52 மற்றும் 57 வது பிரிவுகள் காவல்துறை ஆணையருக்குப் போதிய அதிகாரம் அளிப்பதாக அவர் வாதிட்டார். பாலியல் தொழில் நடத்தும் விடுதிகளுக்குள் புகுந்து பாலியல் தொழிலாளர்களைப் பல இன்னல்களுக்கு
பெண்கள் பிரச்சினையில் திரு.வி.கலியாண சுந்தர முதலியார்
பெண்களின் மரபு சார்ந்த பாத்திரங்களுக்காக வாதாடிய திரு.வி.க. கற்பிற்கு கண்ணகியையும், சிந்தனைத் திறனில் மணிமேகலையையும் பக்திக்கு ஆண்டாளையும் இலட்சியமாகத் தொடர்ந்து சித்தரித்து வந்தார். எனினும் திரவுபதியைப் (பாஞ்சாலி) பெண்களுக்கு ஆதர்சமாகக் காட்டியபோது திரு.வி.க சமணர்களின் மகாபாரதத்திலிருந்து திரவுபதியைக் கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது.வியாசரின் திரவுபதி அய்வருக்கு மனைவி. ஆனால் சமண மரபுத் திரவுபதியோ அர்ஜூனனை மட்டுமே திருமணம் செய்து கொண்ட கற்புடை நங்கை என்பதே இதற்குக் காரணம்! ஆக திரு.வி.கவிற்கும் கூட சத்திய மூர்த்தியைப் போலவே ஒருவரை மணந்து வாழும் பாலியல் நியதி கொண்ட உயர் சாதிப் பெண்களே மரபை உணர்த்தினர்.
தேசிய இயக்கம் சார்ந்த பெண் கதாசிரியர்களும் இதே போன்ற கருத்தியல் நோக்கைப் பரப்பினார்கள். இருப்தே ஆண்டுகளில் 115 நாவல்களையும் பல கவிதைகளையும் எழுதிய வை.மு.கோதைநாயகி அம்மாள் (வை.மு.கோ) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, தேசீய இயக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் தேசீயவாதக் கருத்துக்களைப் பரப்பிய ஜெகன் மோகினி என்ற தமிழ் சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் விளங்கிய வர் வை.மு.கோ. அவரது நாவலான “வீர வசந்தா”வில் பெண் விடுதலை என்கிற கருத்தாக்கம் பெண்களுக்கு எந்தவிதமான பொருளைத் தந்தது, மேற்கத்திய மயமாதலுடன் இணைந்த நவீனத்துவம் எவ்வாறு பெண்களின் வாழ்வைக் குலைக்க முடியும் என்பவை குறித்து விவாதிக்கிறார். இந்த நாவலின் கதாநாயகி மேற்கத்தியப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையான ஒரு தமிழ்ப் பார்ப்பனி. ஒரு கிறிஸ்தவரிடம் காதல் கொண்டு கர்ப்பமடைகிறாள். ஆனால் கட்டாயத்தின் விளைவாக ஒரு இந்துப் பையனை மணக்க நேரிடுகிறது. நாயகியின் பழைய உறவும், கருவுற்ற செய்தியும் கணவனுக்குத் தெரியவரும்போது தற்கொலை செய்து கொள்கிறாள். கடைசியாக அவள் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் ஒரு கிறிஸ்துவனுடனான் பழக்கத்தினால் தனக்கு இந்த 'நாசம்' விளைந்ததாக அதில் அவள் கூறுகிறாள். இந்து தர்மத்தை நேர்மையாகக் கடைபிடித் திருந்தால், சாதீயநியதிகளையும் பெண்களுக்கான மரபு சார்ந்த பணிகளையும் மேற்கொண்டிருந்தால் தனது தூய்மையும் கன்னித் தன்மையும் காப்பாற்றப்பட்டிருக்கும் என்கிறாள். பூப்பெய்துவதற்கு முன்பு பெண்களுக்குத் திருமணம் செய்வது போன்ற மரபுசார்ந்த பழக்க வழக்கங்களைக் கைவிட்டு மேற்கத்திய பழக்கவழக் கங்களைக் கடைபிடித்ததற்காகத் தனது தந்தையைக் குற்றம்சாட்டும் நாயகி, இவைதான் தன் வாழ்வு நாசமானதற்குக் காரணம் எனக் கூறுகிறாள். (பெண்) விடுதலை பெண்களுக்கு எதிரானது என்று கூறி கடிதத்தை முடிக்கிறாள்.சுருக்கமாகச் சொல்வதானால் இந்த நாவலில் மரபு சார்ந்த பெண்மை தேசீயக் கலாச்சாரத்தின் அடையாளமாக நிறுத்தப்படுகிறது; ஒழுக்கமின்மை, கீழ்ப் படியாமை. கண்மூடித்தனம் ஆகியவை மேற்கத்திய மயமாதலின் அடையாளம்! பெண்களின் வாழ்வை அழிக்கும் மேற்கத்திய காலனியாதிக்க மனிதன் குறித்த வை.மு.கோ. வின் கற்பித படிமமே நாவலில் வரும் கிறிஸ்தவ பையன். அதே சமயத்தில் மரபுசார்ந்த பார்ப்பன ஆண் இப்படி குடும்பத்தை உடைக்கும் காரியங்களைச் செய்ய மாட்டான். வை.மு.கோ. வைப் பொருத்தவரை ஒரு உண்மையான மரபுசார்ந்த இந்தியப் பெண், விடுதலை உட்பட்ட எல்லாவிதமான மேற்கத்தியமயமாதலையும் எதிர்க்க வேண்டும். பெண் விடுதலை என்பது குடும்பங்களுக்கு ஊறுவிளை விக்காத தாகவும் பெண்மைப் பண்புகளான கற்பு, சகிப்புத்தன்மை, பொறுமை போன்ற பெண்மை சார்ந்த நியதிகளை அடையும் நோக்கத்துடனும் அமைய வேண்டும் என்பது வை.மு.கோ. வின் கருத்து.
இவ்வாறு வை.மு.கோ. வின் நாவல்கள் தேசீய ஆண் தலைவர்களின் பெண்கள் குறித்த சிந்தனையை வழிமொழி கிறது. இந்து பார்ப்பனக் கலாச்சாரமே இவர்களுக்குத் தேசீய கலாச்சாரம்: இந்தக் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் பதிலியாகவும் மரபுவழிப்பட்ட பாத்திரங்களில் பெண்கள் சிறப்புறுகின்றனர். வை.மு.கோ.வும் இதர தேசீயப் பெண் இயக்கவாதிகளும் சுயேச்சையாகச் செயல்படவில்லை. தேசீய இயக்கத்தின் ஆணியத் தலைமைக்குக் கட்டுப்பட்டவர் களாகவே உள்ளனர்.
காலனீய அரசு சிறைகளில் தேவதாசியரையும் பாலியல் தொழிலாளிகளையும் மற்ற பெண்களிடமிருந்து பிரித்து இழிவு செய்தபோதும் காங்கிரசும் அதன் நடுத்தர வர்க்கப் பெண் இயக்கவாதிகளும் தங்களின் "மரியாதைக்குரிய அரசியலை” வெளிப்படுத்தினர். காந்திமதி அம்மாள், பெரியநாச்சி அம்மாள் என்ற இரு ("மரியாதையற்ற) பெண்களுக்கு சிறையில் 'சி' பிரிவு ஒதுக்கித் தீர்ப்பு வழங்கிய திருநெல்வேலி மாவட்ட நீதிபதி,
"இந்த இரண்டு பெண்களும் மலிவான வகையில் தியாகிப் பட்டம் பெற முயற்சிக்கின்றனர். அவர்கள் முரட்டுத்தனமானவர்களாகவும் கெட்டவர்களாகவும் தெரிகிறார்கள். வீதிகளில் அலையக்கூடிய வகைகளாகத் தோன்றுகிறது. இவர்களைப் பற்றிப் பொதுமக்கள் அக்கறைப்படுவார்கள் என நான் கருதவில்லை" என்றார்." இதே போல வேறு இரண்டு முன்னணி அரசியல் இயக்கப் பெண்களாகிய தாயாரம்மாள் மற்றும் சீதாலட்சுமி குறித்துக் கூறிய மதுரை மாவட்ட நீதிபதி "முதலாமவர் ஒரு நாட்டுக் கோட்டைச் செட்டியாரின் வைப்பாட்டி மற்றவர் ஒரு சாதாரண விபச்சாரி." என்றார்." காங்கிரஸ் கட்சியோ இல்லை இதரப் பெண் போராளிகளோ இத்தகைய பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் சிறைச் சாலைக்குள் "மரியாதைக்குரிய" இந்துப் பெண்களின் தாலி, குங்குமம் முதலிய மங்கலச் சின்னங்களை அகற்றிவிட்டதாகக் கூறப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் பெண்கள் அமைப்பினரும் பெரும் சச்சரவை ஏற்படுத்தினர். தலைச்சேரி நீதிபதி ஒரு பெண் கைதியின் தாலியை அகற்றச் சொன்னார் எனக் கூறப்பட்ட செய்தியைக் கண்டித்த தமிழகம் என்ற உள்ளூர்த் தினசரி, " இந்தியப் பெண்களுக்குத் தங்களது உயிரைவிட் தாலியே மதிப்பு வாய்ந்தது. தங்களின் புனிதச் சங்கிலி பறிக்கப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" எனப் பெருமைப்பட்டுக் கொண்டது. சிறைச்சாலைக்குள் மணமான பெண்களின் நெற்றிக் குங்குமம் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது பற்றி (சட்ட அமைச்சர்) உடனடியாக விளக்கம் தரவேண்டுமெனச் சென்னை சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் குரல் கொடுத்தனர் திருமணமான இந்து பெண்களின் மங்கள சின்னம் அகற்றப்பட்டதற்கு இந்து பெண்கள் அமைப்பும் போராட்டம் நடத்தியது
இன்று கவிஞர்களாக
அறியப்பட்டிருக்கும் சில
பெண் கவிஞர்களின்
கவிதைகளை எடுத்துக்
காட்டியிருக்கிறேன். அதில்,
தமிழச்சி தங்கபாண்டியன்
என்னும் வைகைச்
செல்வியின் பாடல்
அடிகளும்
என்னும் சுகிர்தராணியின்
பாடல் அடிகளும்,
என்னும் இளம்பிறையின்
பாடல் அடிகளும்,
திருமண வாழ்க்கையில்
ஒருவித வெறுப்புணர்வையும்
சலிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.
என்னும் கரசூர்
பத்மபாரதியின் பாடல்
அடிகளும்,
என்னும் கனிமொழியின்
பாடல் அடிகளும்,
என்னும் பொன்மணி
வைரமுத்துவின் பாடல்
அடிகளும் இந்தக்
குமுகத்தின்பால் பெண்கள்
கொண்டிருக்கும் அச்ச
உணர்வை வெளிப்படுத்துகின்றன.
என்னும் கனிமொழியின்
பாடல் அடிகள்
பெண்கள் ஏய்க்கப்படுதலை
வெளிப்படுத்துகின்றன.
என்னும் சுகந்தி
சுப்பிரமணியனின் பாடல்
அடிகளும்,
என்னும் பூரணியின்
பாடல் அடிகளும்,
என்னும் கு.தேன்மொழியின்
பாடல் அடிகளும்,
என்னும் குட்டி
ரேவதியின் பாடல்
அடிகளும் பெண்களின்
ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
என்னும் தமிழச்சியின்
பாடல் அடிகளும்,
என்னும் வத்சலாவின்
பாடல் அடிகளும்
என்னும் பாடல்
அடிகளும் பெண்கள்
அடிமைத்தனத்தைச் சகித்துக்
கொண்டு வாழ்வதை
எடுத்துக் காட்டுகின்றன.
என்னும் இரா.மீனாட்சியின்
பாடல் அடிகளும்,
என்னும் கு.தேன்மொழியின்
பாடல் அடிகளும்
பெண் உரிமைக்
குரலை எழுப்புகின்றன.
********************
என்று தொல்காப்பியர்
பாடியதையும்,
ஈன்று புறந்தருதல்
என்தலைக் கடனே
என்ற புறநானூற்றுப்
பாடலையும்,
என்னும் குறுந்தொகைப்
பாடலையும்,
போன்ற குறட்பாக்களையும்,
இன்னபிற பாடல்களையும்
பெண்களுக்கு எதிரான
பாடல்கள் என்று
கருத்துரைப்பதை விடுத்து,
அற்றைக் காலத்தில்,
நடைமுறையில் இருந்த
வாழ்வியல் நடப்புகளை
அடிப்படையாகக் கொண்டு
தொல்காப்பியர் முதலானோர்
பெண்ணியல்புகளையும் ஆணியல்புகளையும்
வகுத்துப் பாடல்களை
இயற்றியிருக்கலாம்.
Comments
Post a Comment